search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் சோனியா காந்தியுடன் மம்தா திடீர் சந்திப்பு
    X

    டெல்லியில் சோனியா காந்தியுடன் மம்தா திடீர் சந்திப்பு

    பா.ஜ.க.வுக்கு எதிராக மாற்று அணி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் இன்று சந்தித்தார். #mamatabanerjee
    புதுடெல்லி:

    பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைக்கும் பணியில் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஈடுபட்டு வருகிறார். இதற்காக முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா தலைநகர் டெல்லியில் முகாமிட்டுள்ளார். அவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி எம்.பி மிசா பாரதி, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், மத்திய முன்னாள் மந்திரிகள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, இந்தி நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான சத்ருகன் சின்ஹா உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.



    இந்நிலையில், மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவரை சந்தித்தபின் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
     
    எங்களுக்குள் நல்ல நட்புறவு உண்டு. இன்று சோனியா காந்தியை சந்தித்தபோது அவரது உடல்நிலை குறித்து விசாரித்தேன். அரசியல் தொடர்பாகவும் பேசினோம்.

    வரும் 2019 பாராளுமன்ற தேர்தல் ஓரணிக்கும் எதிரணிக்குமான ஒன்றுபட்ட போட்டியாக இருக்கவேண்டும். ஒரு கட்சி எங்கு பலமாக இருக்கிறதோ அதை எதிர்த்து மிக பலமாக சண்டையிட வேண்டும்.

    பிராந்திய கட்சிகளின் முன்னணிக்கு கைகொடுக்க காங்கிரஸ் கட்சி உதவ வேண்டும். இதன்மூலமாக மட்டுமே அரசியல் ரீதியாக பா.ஜ.க.வை ஒழிக்க முடியும் என தெரிவித்துள்ளார். #mamatabanerjee #tamilnews
    Next Story
    ×