search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் தொழுநோயாளிகள் போல நடித்து விவசாயிகள் போராட்டம்
    X

    டெல்லியில் தொழுநோயாளிகள் போல நடித்து விவசாயிகள் போராட்டம்

    டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் நேற்று 46-வது நாளாக நீடித்தது. இதையொட்டி விவசாயிகள் தொழு நோயாளிகள் போல வேடமிட்டு ஜந்தர் மந்தர் சாலையில் ஊர்வலமாக சென்றனர்.
    புதுடெல்லி:

    டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் நேற்று 46-வது நாளாக நீடித்தது. இதையொட்டி விவசாயிகள் தொழு நோயாளிகள் போல வேடமிட்டு ஜந்தர் மந்தர் சாலையில் ஊர்வலமாக சென்றனர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்ற பிரதமரை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பப்பட்டன.

    இதுபற்றி போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், “கோரிக்கைகள் ஏற்கப்படாததால் நாங்கள் ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். ஒரே இடத்தில் இருப்பதால் சுகாதாரக்கேடு உருவாகி தொழுநோய் பாதிப்பு ஏற்பட்டு விடும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த நூதன போராட்டம் நடத்தப்பட்டது” என்றார். 
    Next Story
    ×