search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    • பெருமாளையார் வேண்டுமானாலும் வணங்கலாம்.
    • ஈசனை வணங்க ஈசனே தேர்தெடுத்தால் மட்டுமே அவர் மீது பக்தி கொள்ளமுடியும்.

    சிவன் சொத்து குலநாசம் என்று கூறுவார்கள். இதற்கு பொதுவான விளக்கம் சிவன் கோவில் சொத்தை அபகரித்தால் குலம் நாசம் என்பதாகும்.

    இந்து சமயத்தில் பெருமாள், சிவன், என இரு பெரும்தெய்வங்கள் உண்டு. இதில் பெருமாள் பார்ப்பதற்கு பொன்பொருள், ஆடை ஆபரணங்கள், நைவேத்தியங்கள் என கண்களை கவரும் வகையில் இருப்பார்.

    ஆனால் ஈசன் ஜடாமுடியுடன் இடுப்பில் புலித்தோல் தரித்து உடலில் சுடுகாட்டுச்சாம்பல் பூசிக்கொண்டு கையில் திருவோடு ஏந்தி பார்ப்பதற்கு பரதேசிக்கோலத்தில் இருப்பார்.

    பெருமாளிடம் உலகியலுக்கு தேவையான அனைத்தும் இருப்பதால் அவர் மீது பக்திகொண்டு மக்கள்வழிபட்டு அவரிடம் கோரிக்கை வைப்பது இயல்பான விசயம்.

    ஆனால் ஈசன் அப்படி அல்ல.. அவர்மீது பக்தியை காட்டிலும் பயம் வருவதுதான் நிதர்சனம். அவருடைய அலங்காரம் அப்படி.

    பெருமாளையார் வேண்டுமானாலும் வணங்கலாம். ஆனால் ஈசனை வணங்க ஈசனே தேர்தெடுத்தால் மட்டுமே அவர் மீது பக்தி கொள்ளமுடியும்.

    சிவன் சொத்து எனப்படுவது திருநீறும் ருத்ராட்சமுமே. இதை அணிந்தால் அவரது குலம் நாசமாகும். அதாவது அவரது பாவங்கள் அனைத்தும் நாசமாகும். இதனால் அவரது மறுபிறப்பும் நாசமாகும். அவரால் அவரது வம்சமே பிறவிக்கடலில் இருந்து மீண்டு....பிறவாநிலையை அடைவர். இதுவே சிவன் சொத்து குலநாசம் என்பதன் பொருளாகும்.

    -ஆர்.எஸ். மனோகரன்

    கி. வா. ஜ. ஒருமுறை தொடர்ச்சியாக விழாக்களில் கலந்து கொண்டதால் இருமல் மற்றும் தொண்டை புண்ணால் அவதிப்பட்டார். அதற்காக விழாக்குழுவினர் அவருக்கு coughsyrup ஒன்றை கொடுத்து சாப்பிடச் சொன்னார்கள்.

    கி.வா.ஜ. அவர்கள், 'இதைத்தானா கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் "சிறப்பு" என்கிறார்கள்' என்று கேட்டார்.

    பல்லாண்டுகளுக்கு முன் சென்னை வீனஸ் காலனியில் நடந்த வாரியாரின் புராணச் சொற்பொழிவின் இடையே ஒரு நாள் வாரியார் எழுதிய நூல் ஒன்றை வானதி பதிப்பகத்தினர் வெளியிட்டனர். பாராட்டுரை சொல்ல வந்த கி.வா.ஜ, பதிப்பாளர் வாரியார் சுவாமிகளுக்குப் பொன்னாடையைப் போர்த்தியதும் சிலேடையாக, 'நூல் தந்த வாரியாருக்கு பதிப்பாளர் ஆடை தருகிறார்' என்றார். அரங்கத்தில் கைதட்டல் எழுந்தது.

    அடுத்து இறை வணக்கம் பாடிய சிறுமிக்கு கி.வா.ஜ. ஒரு பேனா பரிசளித்தார். இதைக் கண்ட வாரியார் உடனே தன் பங்குக்கு, 'நாவால் பாடிய சிறுமியை கி.வா.ஜ. பேனாவால் கௌரவிக்கிறார்' என்றதும் மறுபடியும் கைதட்டல் வானைப் பிளந்தது.

    ஒரு நண்பர் வீட்டுக்கு கி.வா.ஜ. போயிருந்தபோது, நண்பரின் மனைவி விளாம்பழத்தில் வெல்லம் போட்டுப் பிசைந்து, அன்போடு கொண்டு வந்து உபசரித்தார். அதை வாங்கி உண்ட கி.வா.ஜ. "மாதுளங்கனி அருமை!" என்று பாராட்டினார்.

    "மாதுளங்கனியா! நான் தந்தது விளாம்பழம் அல்லவோ!" என்று அந்த அம்மையார் குழப்பத்துடன் கேட்க, "மாது உளம் கனிந்து கொடுத்த கனி என்று சொன்னேன்!" என்றார் கி.வா.ஜ.

    கிவாஜ சிலேடையில் உச்சமான ஒன்று! அவரை அதே போல மடக்கிய ஒரு பெண் உண்டு தெரியுமா? ஒரு பெண் அவரை தங்கள் கூட்டத்தில் பேச அழைத்தாள்.

    கிவாஜ , இன்னிக்கு வேணாமே! தொண்டை கம்மியிருக்கு... என்றார். அந்தப் பெண் சொன்னாள், 'பரவாயில்லை, கம்மல் பிரகாசிக்கவே செய்யும்.'

    • ஒன்பது கிரகங்கள் சதாசர்வ காலமும் வழி நடத்திக் கொண்டு இருக்கிறது.
    • ஒவ்வொருவர் உடம்பும் ஒவ்வொரு விதம்.

    எந்த ஒரு நல்ல காரியம் செய்யும் முன்னர் குளிப்பது விசேஷம். குளிப்பது அழுக்கு போறதுக்கு மட்டும் அல்ல. நம்மை சதாசர்வ காலமும் ஆக்கிரமித்து இருக்கும் காற்றின் பிடியிலிருந்து விலகி இருக்கவும்தான். எப்படி மீன் தண்ணீரில் இருக்கிறதோ அதுபோல் நாம் காற்றுக்குள் இருக்கிறோம்!

    ஒன்பது கிரகங்கள் சதாசர்வ காலமும் வழி நடத்திக் கொண்டு இருக்கிறது. அவற்றின் கதிர்கள் காத்தோட கலந்துதான் நமது உடலை வந்தடைகிறது. நாம் சுவாசிக்கும் போது அது நமக்குள்ளேயும் நுழைகிறது. ஒவ்வொரு கணமும் எல்லோருக்கும் இதுதான் நடக்கிறது. இதில் ஒவ்வொருவர் உடம்பும் ஒவ்வொரு விதம். அனைவரும் ஒரே நேரத்தில் பிறந்தவர்கள் கிடையாது.

    மனித உடம்பு தூசு, தும்பு போன்ற அழுக்குகளால் மட்டும் பாதிக்கப்படுவது இல்லை, மற்ற மனிதர்களின் பார்வை என்னும் திருஷ்டி, எண்ணங்களின் தாக்குதல், உடம்பில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு தாக்குதல் உட்பட பல பாதிப்புகளுக்கு ஆளாகிறது.

    இந்த பாதிப்புகள் இரண்டு விதம்; ஒன்று நல்ல விதம், இன்னொன்று கெட்ட விதம். ஒருவர் நம்மைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தால் அது நல்ல விதம், பொறாமைப்பட்டால் அது கெட்ட விதம்! இவற்றை நாம் கண்டறிய இயலாது, அது சாத்தியமும் இல்லை. ஆனால் இத்தகைய பாதிப்புகள் இல்லாமல் நானும் இல்லை, நீங்களும் இல்லை. இந்த பாதிப்பு கூடிக்கொண்டே போகும்போது ஒரு கட்டத்தில் உடம்பு வலி, மன அசதி, மன அழுத்தம் என்றெல்லாம் பாடாய் படுத்தும். நாம் இதை நமது உடலின் தன்மை என்று நினைத்துக் கொள்கிறோம்.

    இந்த உலகிலேயே தோஷம் தாக்க முடியாத ஒன்று தண்ணீர் தான்! குளிக்கும் போது, நமது உடல் முழுவதும் நீரில் மூழ்கி இருக்கும் போது உலகத் தொடர்பை இழக்கிறோம். நீர் உச்சந்தலையில் படும் போது, உடம்பில் இருக்கும் சர்வநாடிகளும் ஒரு சிலிர்ப்பு சிலிர்ப்பி நமது உடலில் உதறல் ஏற்படுகிறது. இதனால் நம்மை ஆக்கிரமித்து இருக்கும் கதிர்கள் அனைத்தும் உதிர்ந்து நீரில் அடித்துச் செல்லப்படுகிறது. குளித்து முடித்தவுடன் காற்று உலகத்துடன் புதிதாகத் தொடங்குகிறது! உற்சாகம் உடம்புக்கு மட்டுமல்ல, மனத்துக்கும் உண்டாகும்!

    இறந்த வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க காரணம் இதுதான். சவத்தீட்டு என்று சொல்வதும் அந்த சவம் கிடக்கும் இடத்தில் இருக்கும் கதிர்களைத்தான். எல்லார் மனமும் துக்கத்தில் இருக்கும் இடத்தில் சூழ்நிலை நல்ல கதிர்களுடன் நல்லவிதமாக இருக்காது. இவை நாம் குளிக்கும்போது நீரோடு அடித்துச் செல்லப்படுகிறது.

    கோவிலுக்கு போய்ட்டு வந்தா குளிக்க கூடாது என்று சொல்லும் காரணமும் முக்கியம். கோவில் நல்ல சக்தி, நல்ல சூழ்நிலை, நல்ல கதிர்வீச்சு நடமாடும் ஒரு இடம். அத்தகைய கதிர்வீச்சை, குளித்து நீருடன் கலந்து வீணாக்கக் கூடாது என்பதால்தான்!

    -இந்திரா சவுந்திரராஜன்

    • வானம் என்று நாம் சொல்வது, மேலே கிடையாது.
    • பூமியின் இடுப்பில் கட்டிய ஒட்டியாணம்போலப் பரந்திருக்கிறது.

    அறிவியலின்படி, வானம் (ஆகாயம்) என்று எதுவும் இல்லை. பகலில் பார்க்கும் வானம் வேறு. இரவில் பார்க்கும் வானம் வேறு. பகல் வானம் என்பது வெறும் சிலநூறு கிலோமீட்டர்கள் தூரத்தில் (உயரத்தில் அல்ல) இருப்பது. ஆனால் இரவு வானம், பல பில்லியன் ஒளியாண்டுகள் தூரமுள்ளது. இரண்டிற்கும் அணுக்கருவுக்கும், அல்ப்ஸ் மலைக்குமுள்ள தூர வித்தியாசம் உண்டு.

    நீங்கள் நினைக்கும் வானத்தில், சந்திரனோ, சூரியனோ, நட்சத்திரங்களோ கிடையாது. அவை இருப்பது ஒரு பாய்வெளியில் (சரியாய்த்தான் படிக்கிறீர்கள்). அதை வானம் என்று சொல்ல முடியாது. விண்வெளியென்று சொல்லலாம். விண்ணும், வானும் தமிழில் ஒன்றா என்று முதலில் பார்க்க வேண்டும். ஒன்று என்றால், Space க்கு ஒரு புதுச்சொல்லைத் தமிழில் கண்டுபிடிக்க வேண்டும்.

    எனவே, 'வானம் தொட்டுவிடும் தூரம்தான்'. 'ஆகாயமே எல்லை'. 'விண்ணைத் தாண்டி வருவாயா?' என்பதெல்லாம் கறிக்குதவாது. பேச்சுக்குக்கூட வான எல்லையைத் தொடமுடியாது.

    கடைசியாக ஒன்று. வானம் என்று நாம் சொல்வது, மேலே கிடையாது. அது பூமியின் பக்கவாட்டில் இருக்கிறது. பூமியின் இடுப்பில் கட்டிய ஒட்டியாணம்போலப் பரந்திருக்கிறது.

    -அருண் நாகலிங்கம்

    • யார் அவனை அலட்சியம் செய்து ஒதுங்கி இருக்கிறார்களோ, அவர்கள் பத்தில் ஒன்றாக ஆகி விடுவார்கள்.
    • இறைநிலையை மதிப்பவர்கள் அந்த இறைநிலை அளவுக்கு உயர்வார்கள்.

    2.3,4,5,6,7,8,9 என்று எல்லா எண்களும் கோணல் மாணலாக இருக்கின்றன. ஆனால் பூஜ்ஜியத்தை எடுத்துப் பாருங்கள். ' 0 ' அது எங்கே தொடங்குகிறதோ, அங்கே போய்த் தான் முடிகிறது.

    பூஜ்யம் தான் முழுமையான எண், மற்ற எண்களுக்கு மதிப்பு வைத்திருக்கிறோம். பூஜ்யத்திற்கு மதிப்பு ஒன்றுமில்லை என நினைக்கிறோம்.

    ஆனால், அதுவா ஒன்றுமில்லை? 1 என்ற எண்ணிணை எடுத்துக் கொள்ளுங்கள். பூஜ்ஜியத்திற்குப் பின்னால் இந்த 1ஐ வையுங்கள். இப்போது அதன் மதிப்பு 10.

    பூஜ்ஜியமோ ஒன்றுமில்லை. ஒன்றுமிலாததை மதித்து அதற்குப் பின்னால் 1ஐ வைத்தால், அதன் மதிப்பு பத்தாகிவிட்டது.

    பூஜ்யத்திற்கு ஒன்றுமே இல்லாத போதும் பூஜ்யத்தை அலட்சியப்படுத்தி 1ஐ முன்னாள் போட்டால் 1 இன் மதிப்பு பத்தில் ஒன்று [0.1].

    அது போன்று இறைவன் நிறைவானவன். தனக்கென்று தனி மதிப்பு இல்லாதவன். யார் அவனைச் சேர்ந்தார்களோ, அவர்களுடைய மதிப்பை உயர்த்தக் கூடியவன்.

    யார் அவனை அலட்சியம் செய்து ஒதுங்கி இருக்கிறார்களோ, அவர்கள் பத்தில் ஒன்றாக ஆகி விடுவார்கள்.

    இறைநிலையை மதிப்பவர்கள் அந்த இறைநிலை அளவுக்கு உயர்வார்கள். இறைநிலையை உணர்ந்து அதை மதிப்பவர்களைப் பூஜ்யர் என்பார்கள்.

    -வேதாத்திரி மகரிஷி

    • தமிழ் புலவர்கள் வீடுகளில் கிடைக்கும்.
    • சிலப்பதிகாரத்தின் சுவையில் மயங்கிய அந்தப் புலவர் தொடர்ந்து அலைந்து திரிந்து நிறைய நூல்களை உரையுடன் பதிப்பித்தார்.

    கும்பகோணம் உயர்நிலைபள்ளி ஒன்றில் தமிழாசிரியராக பணிபுரிந்து வந்த புலவர் ஒருவரை கும்பகோணம் நகர முன்சீஃப் சேலம் இராமசாமி முதலியார் காண விரும்புவதாக தகவல் வரவே, புலவர் தயங்கியவாறே அவரைக்காணச் சென்றார்.

    "வாரும்! நீர் தமிழில் ஆர்வம் மிக்கவர் என்று கேள்விபட்டுள்ளேன். என்னென்ன படித்துள்ளீர்?" என்றார் முன்சீஃப்.

    "குறவஞ்சி, காவடி சிந்து, உலா கலம்பகம், பிள்ளைத்தமிழ், அம்மானை, அந்தாதி.."

    "அதில்லை ஐயா! இன்னும் முற்காலத்தியது "

    "வில்லிபாரதம், நளவெண்பா, கம்ப இராமாயணம், பெரிய புராணம்.."

    "இல்லை ஐயா.. அதற்கும் முந்தைய காலம்.."

    "நாலாயிர திவ்ய பிரபந்தம், தேவாரம், திருவாசகம், திருமந்திரம்.."

    "அதற்கும் முந்தைய காலத்தியது ?"

    "அதற்கூ..ம் முந்தையதா ? "புலவருக்கு ஆச்சரியம் மேலிடுகிறது. தான் இவ்வளவு கற்றபிறகும் இன்னும் என்ன இருக்கிறது என்று யோசிக்கிறார்.

    "இதுதானையா தமிழ் இலக்கியம்.. இதைப்படித்துப் பாரும்.. எவ்வளவு அற்புதமான இலக்கியம்!" என்று ஒரு ஓலைச்சுவடிக்கட்டை எடுத்து தருகிறார்.

    "இதன் பெயர் சிலப்பதிகாரம்! நிறைய பகுதிகள் விடுபட்டு போயுள்ளன. "

    "அறிவேன் ஐயா! சில பாடல்களை படித்துள்ளேன். முழுமையாக எங்கும் கிடைக்கவில்லையே! "

    "அதற்குதான் உம்மை வருமாறு அழைப்பு விடுத்தேன். சுவடிகள் கிடைக்காமல் எங்கு போய்விடும்? இன்னும் மணிமேகலை என்றும் ஒரு காப்பியம் இருக்கிறது. சைவ மடங்கள், தமிழ் புலவர்கள் வீடுகளில் கிடைக்கும் ஐயா! நீர் இதைத் தேடி பாடபேதம் நீக்கி முழுமையாக பதிப்பிக்க வேண்டும். நீர் சென்னையில் என்னுடைய இல்லத்தில் தங்கிக் கொள்ளலாம். உம்முடைய செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன். இந்தப் பணியை நீர் செய்ய வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்" என்றார்.

    சிலப்பதிகாரத்தின் சுவையில் மயங்கிய அந்தப் புலவர் தொடர்ந்து அலைந்து திரிந்து நிறைய நூல்களை உரையுடன் பதிப்பித்தார்.

    அவர் உரையோடு பிழை திருத்தி பதிப்பித்த நூல்கள்..

    சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம், 12 புராணங்கள், பெருங்கதை, 9 உலா நூல்கள், 6 தூது நூல்கள், 3 வெண்பா நூல்கள், 4 அந்தாதி நூல்கள், 2 பரணி நூல்கள், 2 மும்மணிக்கோவை நூல்கள், 2 இரட்டைமணிமாலை நூல்கள், அங்கயற்கண்ணி மாலை, இதர சிற்றிலக்கியங்கள் 4. அந்த புலவர்தான் உவே.சா எனப்படும் உ.வே. சாமிநாதைய்யர். அவரோடு சி.வை.தாமோதரம் பிள்ளை, திருக்குறளை பதிப்பித்த அயோத்திதாச பண்டிதரின் தாத்தா கந்தன் பண்டிதர் ஆகியோர் தமிழுலகம் மறக்கக்கூடாத மாமனிதர்கள்.

    -எம்.எஸ். ராஜகோபால்

    • ஒரே குடும்பத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொடுப்பதோ அல்லது மருமகளாக ஏற்பதோ கூடாது.
    • ஒருவர் வாழ்வு தாழ்ந்தும், மற்றொருவர் வாழ்வு உயர்ந்தும் இருக்கும்.

    ஒரே குடும்பத்தில் இரு பெண்களை திருமணம் செய்யலாமா..?

    இந்து சமய சாஸ்திரத்திரன் படி ஒரே குடும்பத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொடுப்பதோ அல்லது மருமகளாக ஏற்பதோ கூடாது.

    ஒரு குடும்பத்திற்கு ஒரு பெண்ணை மணம் முடித்து கொடுத்தவுடன் இன்னொரு பெண்ணையும் திருமணம் செய்து கொடுப்பது நல்லது கிடையாது. அப்படி இரு பெண்களையும் திருமணம் செய்தால் ஒருவர் வாழ்வு தாழ்ந்தும், மற்றொருவர் வாழ்வு உயர்ந்தும் இருக்கும். மேலும் அவர்களின் வாழ்க்கை சரியாக இருக்காது என சாஸ்திரம் கூறுகிறது.

    ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுத்து அந்த பெண் வேறேதும் தவறான காரணத்தால் கணவனோடு வாழாமல் போனால் அதற்கு பரிகாரமாக இன்னொரு பெண்ணை திருமண செய்து கொடுக்கலாம்.

    -ஜோதிடர் சுப்பிரமணியன்.

    • டிராமா குரூப்போடு நான் அந்த வழியாக வேன்ல வந்துகிட்டிருந்தேன்.
    • மறுநாள் காலையில் வந்து பார்த்தா, என் வீட்டு வாசலில் பிளைமவுத் கார் வந்து நிக்குது.

    பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிக்காமல் பாய்ஸ் கம்பனியில் சேர்ந்து நடிகனாக, கார் டிரைவராக, மெக்கானிக்காக, எலக்டிரீஷியனாக வளர்ந்த எம்.ஆர். ராதாவை பல தொழிலதிபர்கள் பாராட்டியுள்ளனர். அதில் ஒரு நிகழ்ச்சி...

    கேள்வி : டி.வி.சுந்தரம் அய்யங்கார் ஒருமுறை உங்கள் மெக்கானிசத்தைப் பார்த்து...?

    "அதுவா?...அதைச் சொல்லுவதற்கு முந்தி அவருக்கும் எனக்கும் எப்படித் தொடர்பு ஏற்பட்டது என்பதை நான் சொல்லணும். மதுரையிலே ஜகந்நாத அய்யர் நாடகக் கம்பனி முகாம் போட்டிருந்த சமயம் அது. நான் ஸ்பேர் பார்ட்ஸ் வாங்க அடிக்கடி அய்யங்கார் கடைக்குப் போவேன்."

    கேள்வி : அப்போ அய்யங்கார் ஸ்பேர் பார்ட்ஸ் கடைதான் வைத்திருந்தாரா?

    "ஆமாம். அதுவும் ரொம்பச் சின்னக்கடை. நாலணாவுக்குச் சாமான் வாங்கினால்கூட அவர் மறக்காமல் எனக்கு காலணா கொடுப்பார். இப்படி ஏற்பட்ட தொடர்பு எங்கே வந்து நின்னதுன்னா, பாலாற்றங்கரையில் வந்து நின்னது."

    கேள்வி : பாலாற்றங்கரையிலா?

    "ஆமாம்! அந்த ஆத்துமேலே பாலம் கட்டிக்கிட்டு இருந்த சமயம் அது. டிராமா குரூப்போடு நான் அந்த வழியாக வேன்ல வந்துகிட்டிருந்தேன். ஆத்தைக் கடக்கற இடத்திலே ஒரே கூட்டம். என்னடான்னு பார்த்தா டி.வி.எஸ் லாரி ஒண்ணு ஆத்து மணல்லே சிக்கிக்கிட்டு இருந்தது. அதைத் தூக்கக் கிரேன் நிறுத்தியிருந்தாங்க.

    அந்தப் பக்கம் இருநூறு வண்டி, இந்தப் பக்கம் இருநூறு வண்டி நிக்குது. டிராபிக் ஒரே ஜாம். நான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். பொறுக்க முடியலே. வேனை விட்டுக் கீழே இறங்கினேன். ஆத்துல முழங்கால் வரை தண்ணீர் இருந்தது. இறங்கி நடந்தேன்.

    யாரப்பா அது? இங்கே பாருங்க, லாரி அசையறதாயில்லே! கிரேனும் அதைத் தூக்குறதாயில்லே. இப்படியே இருந்தால் நாங்க எப்போ ஊர் போய்ச் சேர்றது? ஒண்ணு, கிரேனை ஒரு மணி நேரம் ஒரு பக்கம் தள்ளி நிறுத்தி எங்களுக்கு வழி விடுங்க. இல்லேன்னா இந்த லாரியக் கிளப்ப எனக்கு அரை மணி நேரம் அவகாசம் கொடுங்கன்னேன்.

    நான் சொன்னதை ஒருத்தனும் காதிலே போட்டுக்கல்லே. அவனுக பாட்டுக்கு தஸ்புஸ்னு இங்கிலீஷில ஏதோ பேசிக்கொண்டே இருந்தானுங்க. எனக்கு கோபம் வந்து, 'என்னடா சொல்றதைக் கேட்காம, தஸ்புஸ்சின்னு பேசிறீங்களேன்னேன். அப்போதான் நான் யாருன்னு அவரகளுக்குத் தெரிஞ்சது. அதுக்குள்ள என்னைச் சுற்றி ஒரு கூட்டமும் சேர்ந்தது. நான் மறுபடியும் விஷயத்தைச் சொன்னேன்.

    கிரேனைத் தள்ளி நிறுத்தறுதுக்கில்லே, 'உங்களுக்கு வேணும்னா லாரியக் கிளப்ப அரைமணி நேரம் அவகாசம் கொடுக்கிறோம்னு' கொஞ்சம் கேலியாச் சொன்னானுக.

    கெடக்கிறானுகன்னு நான் வேனைக் கொண்டு வரச்சொல்லி அதிலே இருந்த கம்பெனி ஆட்களை எல்லாம் கீழே இறங்கச் சொன்னேன். டி.வி.எஸ்.லாரியை அன்லோடு ஆக்குறதுக்காக அதிலிருந்த சரக்கை எல்லாம் இறக்கி என வேன்லே போடச் சொன்னேன். இப்போ என்ன ஆச்சு? லாரி லைட்டாச்சு. வேன் வெயிட்டாச்சு. லைட்டை இந்த வெயிட்டாலே கட்டி இழுக்கச் சொன்னேன். விஷயம் முடிஞ்சது. கிரேன் இல்லாம லாரி கிளம்பிடுச்சு.

    ஆஹான்னான் ஒருத்தன். நல்ல மெக்கானிக்கல் பிரெயினுன்னான் இன்னொருத்தன். ஊருக்கு வந்து சேர்ந்தோம். மறுநாள் காலையில் வந்து பார்த்தா, என் வீட்டு வாசலில் பிளைமவுத் கார் வந்து நிக்குது.

    என்ன விஷயம்?

    சுந்தரம் அய்யங்கார் அனுப்பினார்னு சொன்னானுக. எங்கிட்ட இதுக்குப் பணம் ஏதென்னு கேட்டேன். உங்களுக்கு எப்போ சௌகரியமோ அப்போ கொடுங்கன்னு அய்யங்கார் சொன்னதாகச் சொன்னாங்க.ஐநூறும் ஆயிரம்னு அந்தக் கடனை அடைச்சேன்.

    (விந்தன் எழுதிய 'சிறைச்சாலை சிந்தனைகள்' என்ற நூலில் இருந்து..)

    • வாழ்நாள் முழுதும் “கேன்சர்” என்ற சொல்லே நம் வாழ்க்கை அகராதியில் இல்லாமல் போகும்.
    • வயதுவித்தியாசமின்றி உட்கொள்ளலாம்! உணவாகவும், மருந்தாகவும், செயல்புரியும் உன்னத இயற்கை பானம்.

    உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை பற்றி பார்ப்போம்.

    திடக்கழிவு, திரவக்கழிவு, வாயுக்கழிவு, சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்ளும் மருத்துவக்கழிவு..

    இவைகளை வாழ்நாள் முழுவதும், சிரமமில்லாமல் நீக்கும், எளிமையான, சுவையான முறை இதோ..

    வெந்நீர், எலுமிச்சை சாறு, தேன் இந்த மூன்றுதான் இதற்கு தேவை.

    செய்முறை: ஒரு டம்ளர் நீரை குறைந்த தனலில் வைக்கவும் . கொதிக்க வேண்டியதில்லை. நாம் தாங்கும் சூடு இருந்தால் போதும்!

    ஒரு காலி டம்ளரில் 1/2 எலுமிச்சை, சிறியதாயிருந்தால் ஒரு எலுமிச்சை பிழிந்துக்கொள்ளவும்!

    3 ஸ்பூன் தேன் சேர்த்து, வெந்நீர் கலந்து, ஸ்பூனில் சிறிது சிறிதாக, அனுபவித்து, உமிழ் நீருடன் நன்றாக உறவாடி, பின் அருந்தவும்!

    காலையில் முதல் உணவாக, வெறும் வயிற்றில் அருந்தவும்! எல்லா கழிவுகளும் உடனுக்குடன் நீக்கப்படுவதுடன் உடலுக்குத் தேவையான உடனடி குளுக்கோஸ், தரமான உயிர்சத்துக்கள் மற்றும் தாது உப்புக்களும் கிடைக்கும் !

    வாழ்நாள் முழுதும் "கேன்சர்" என்ற சொல்லே நம் வாழ்க்கை அகராதியில் இல்லாமல் போகும்!

    வயதுவித்தியாசமின்றி உட்கொள்ளலாம்! உணவாகவும், மருந்தாகவும், செயல்புரியும் உன்னத இயற்கை பானம்!

    - சிவசங்கர்

    • நான் ஒரு விபசார விடுதியில் பிறந்து வளர்ந்தேன்.
    • என்னை தற்காத்துக்கொள்ள சிறையில் குத்து சண்டையை கற்றேன்.

    மைக் டைசனிடம் "ஏன் உலக குத்து சண்டை சாம்பியன்கள் எல்லாருமே கருப்பர்களாகவே இருக்கிறார்கள்?" என்ற கேள்வி கேட்கப்பட்டது

    "வெள்ளையர்களுக்கு குத்து சண்டையில் ஈடுபடவேண்டிய அவசியமே இல்லையே? அவர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

    அமெரிக்க குத்துசண்டையில் அதிகமாக வெற்றி பெறுபவர்கள் எப்போதுமே அந்தந்த காலகட்டத்தில் மோசமான வறுமையில் இருக்கும் மக்களாகவே இருப்பார்கள்.

    நான் ஒரு விபசார விடுதியில் பிறந்து வளர்ந்தேன். என் அப்பாவை நான் பார்த்ததே இல்லை. வீட்டுக்கு அடிக்கடி பல ஆண்கள் வந்துபோவார்கள். அக்காவையும், அம்மாவையும் குடித்து விட்டு அடிப்பார்கள். வீட்டுக்கு ஆண்கள் வருகையில் அம்மாவும், அக்காவும் என்னை வெளியே அனுப்பிவிடுவார்கள். தெருக்களில் மோசமான சகவாசம் கிடைத்தது. திருட்டில் ஈடுபட்டேன். சிறை சென்றேன். அங்கே என்னை தற்காத்துக்கொள்ள சிறையில் குத்து சண்டையை கற்றேன்.

    நன்றாக படித்து ஒரு அளவு நல்ல சம்பளம் வரும் வேலைக்கு போக முடிந்திருந்தால் நான் ஏன் குத்து சண்டையில் ஈடுபட போகிறேன்?" என பதில் சொன்னார்

    எம்.எம்.ஏ எனும் மிக்சட் மார்ஷியல் ஆர்ட்ஸ் போட்டியில் நாக் அவுட் ஆகி மொத்த நினைவையும் இழந்த வீரர்கள் ஏராளம்.

    சில தொழில்கள் வெளியே இருந்து பார்க்க கிளாமராக இருக்கும். ஆனால் அதில் இருப்பவர்கள் அதில் வேறு வழியில்லாமல் தான் அதில் ஈடுபட்டு இருப்பார்கள்.

    - நியாண்டர் செல்வன்

    • மனதிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நிச்சயம் தொடர்புண்டு.
    • மனம் என்பது நமது ஒவ்வொரு செல்லிலும் இருக்கிறது.

    உடலும் மனமும் பிரிக்க முடியாதவை..

    உடல் கண்ணுக்கு தெரியும் மனம்.

    மனம் கண்ணுக்கு தெரியாத உடல்.

    இதில் ஒன்றில் ஏற்படும் மாற்றம் மற்றொன்றில் பிரதிபலிக்கும்.

    எனவே மனதிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நிச்சயம் தொடர்புண்டு.

    நம் மனதில் ஏற்பட்ட மாற்றம், பிறகு வேதியியல் மாற்றமாக ஹார்மோன் சுரக்கப்படுகிறது.

    இந்த வேதியல் மாற்றம் காரணமாக உடல் வேகமாக இயங்க தொடங்குகிறது.

    இதன் மூலம் மனதில் ஏற்படும் மாற்றமானது உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை உணரமுடிகிறது.

    உதாரணமாக, பயத்தில் சிறுநீர் பிரிவதை சொல்லலாம் !

    மனம் என்பது நமது ஒவ்வொரு செல்லிலும் இருக்கிறது.

    நாம் மற்றவர்களை நேசிக்கும் மனமுடையவராக இருக்குபோது நமது செல்கள் ஒவ்வொன்றும் ஒன்றையொன்று நேசிக்கிறது. ஒருங்கிணைந்து செயலாற்றுகிறது.

    நாம் பிறரை வெறுப்பவராக இருந்தால் நம் செல்களிலும் அதே மனநிலை பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு செல்லும் மற்றொரு செல்லை வெறுக்கிறது. செல்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற மறுக்கிறது என்கிறது விஞ்ஞானம் !

    மனிதனின் மனநிலை நீரில் பிரதிபலிப்பதாக ஜப்பானிய விஞ்ஞானி மசாரோ எமட்டோ தனது ஆய்வை முன் வைத்தார்.

    மனித உடலானது மூன்று பங்கு வரை நீரால் ஆனது. எனவே மனநிலையானது உடல் மாற்றத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.

    சரி, மனம் அருள் பெற்றால் என்ன நிகழும் :

    1. பிறரை நேசிப்பது..

    2. மன அழுத்தம் ஏற்படாதவாறு வாழ்க்கை சூழலை அமைத்துக்கொள்ளுதல்..

    3. நோய்கள் குறித்தான பயத்தை விடுவது..

    4. நோய் குணமாகும் என்ற நம்பிக்கையோடு இருப்பது..

    5. நடந்ததை நினைத்து மீண்டும் மீண்டும் நினைத்து வருந்தாமல் இருப்பது திகழும்.

    6. மனதை பாதிக்கும் செயல்களை தவிர்க்கலாம் .

    7. உடலில் ஏற்படும் சிறு சிறு தொந்தரவுகளை தீவிரமாக ஆராய்ந்து அது குறித்தான பயத்தில் சிக்காமல் இருக்க இயலும் .

    8. மனதிற்கு பிடித்த நற்செயல்களை செய்வது நடக்கும்.

    9.உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் உணவில் தவிர்ப்பது நிகழும் .

    10. உடல் தன்னைத்தானே சரி செய்து கொள்ளும்.

    11.உடலின் குணமாக்கும் ஆற்றலை புரிந்துகொள்ளும் .

    12. மனச்சமநிலையில் இருக்கும் .

    13.மனதில் ஏற்படும் எண்ணங்கள் அனைத்தையும் சிந்தனையாக மாற்றாமல் தேவையற்ற எண்ணங்களை கடந்து மனம் சமநிலையில் இருப்பது நிகழும் .

    "அருள்நிலை மனதில் ஏற்படும் நன்மைகள்" மிக மிக உயர்வு - அதனால் நன்மைகள் நிகழும் !

    நிகழட்டுமே !

    -திருநாவுக்கரசு

    • ஒவ்வொரு மாநிலத்திற்கென்று ஒரு உணவு பழக்க வழக்கம் உண்டு.
    • தென்னை மரங்கள்தான் கேரளாவின் அழகு ரகசியமே.

    இயற்கையான வனப்புடன் திகழும் கேரள பெண்களின் அழகு ரகசியம் இதுதான்..

    ஒவ்வொரு மாநிலத்திற்கென்று ஒரு உணவு பழக்க வழக்கம் உண்டு. கேரளாவில் பிரபலமானது அதன் மிகப் பெரிய அரிசிகள் கொண்ட சாதம் தான். அதில்தான் சாதாரண அரிசியை விட ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. நிறம் மாற்றி பாலிஷ் செய்யப்படாத கேரளா அரிசியை மாதத்தில் சில நாட்கள் எடுத்துக் கொள்வது உங்கள் அழகை மேலும் கூட்டும்.

    பால்: அடுத்து கேரள பெண்களின் உடல் வனப்பிற்கு பெரிதும் உதவுவது பால்தான். முகத்தில் உள்ள துளைகளை சுத்தம் செய்து அவைகளை மூடி விடும் குணம் பாலிற்கு உள்ளது. மேலும் முகத்தின் நிறம் மங்காமல் காக்கும்.

    முல்தானி மெட்டி: கேரளாவில் தூய்மையான கிடைக்கும் சந்தனத்தை முல்தானி மெட்டியோடு கலந்து பசை போலாக்கி முகத்தில் தடவி காய விடுவதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறி நிறம் மேலும் கூடும். மேலும் கரும்புள்ளிகள் வராமல் முகம் பளிங்கு போல மின்னும்.

    முகத்தில் உதடுகளின் மேல் மெல்லிய முடிகள் மற்றும் தாடையின் கீழ் மெல்லிய முடிகள் சில பெண்களுக்கு இருப்பது சகஜம்தான். நல்லெண்ணை, கோதுமை மாவு மற்றும் மஞ்சள் பொடியை பயன்படுத்தி அவர்கள் தங்கள் முகத்தை கழுவுகையில் தேவையற்ற ரோமங்கள் தானாகவே விழுந்து விடுகிறது.

    தேங்காய்: குளிக்கும் முன்பு வெயில் படும் இடமெல்லாம் தேங்காய் எண்ணெய் தடவி பின்னர் கடலைமாவு அல்லது பாசிப்பயிறு மாவு போட்டு குளிப்பதால்தான் இவர்கள் தேகம் மின்னுகிறது.

    கேரளாவெங்கும் அதிகமாக காணப்படும் தென்னை மரங்கள்தான் கேரளாவின் அழகு ரகசியமே... அதில் இருந்து வரும் தேங்காயை பால் எடுத்து அதனை தலை மற்றும் உடல் முழுதும் தடவுகின்றனர். அதன் பின்னர் குளிக்கின்றனர். இதனால் தேங்காயின் சத்துக்கள் அனைத்தும் சருமத்திற்கு போகிறது.

    -பராஞ்சி சங்கர்

    ×