search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினி குறித்து பாடப்புத்தகத்தில் இடம்பெற்றது வேண்டும் என்றே செய்தது- சீமான் குற்றச்சாட்டு
    X

    ரஜினி குறித்து பாடப்புத்தகத்தில் இடம்பெற்றது வேண்டும் என்றே செய்தது- சீமான் குற்றச்சாட்டு

    நடிகர் ரஜினிகாந்தை உழைப்பால் உயர்ந்தவர் என்று பாடபுத்தகத்தில் வைத்திருப்பது வேண்டு மென்றே செய்தது என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

    நெல்லை:

    கூடங்குளத்தில் அணுக் கழிவை புதைக்கக்கூடாது எனவும், அணுக்கழிவால் மிகப்பெரிய ஆபத்து உள்ளது எனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ராதாபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொள்வதாக இருந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் பல நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தனர்.

    இதைத்தொடாந்து பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தமிழ்நாட்டை பாதிக்கின்ற திட்டங்களையே செயல்படுத்தி வருகிறார்கள். இந்த மண்ணை அழிக்கின்ற நச்சு பொருட்களை தான் கொண்டு வருகிறார்கள். விவசாய நிலத்திற்கு அடியில் கேரளாவில் இருந்து கர்நாடகத்திற்கு எரிவாயு கொண்டு செல்கின்ற திட்டம், மீத்தேன் திட்டம், ஆலை கழிவுகளை ஆற்றில் கலக்கின்ற திட்டம், ஸ்டெர்லைட் திட்டம், அணுஉலை பூங்கா என்று ஆபத்தான திட்டங்களை கொண்டு வந்து உள்ளனர்.

    அணுக்கழிவை இங்கே புதைக்க மாட்டோம் என்று கூறினார்கள். தற்போது இங்கே அணுக்கழிவை புதைக்க முடிவு செய்துள்ளனர். இந்த அணுக்கழிவு பாதுகாப்பானது என்று சொல்கின்ற அறிஞர்கள் தங்களுடைய வீட்டின் அருகில் அல்லது அவர்களுடைய சொந்த நிலத்தில் அல்லது அவர்கள் வாழுகின்ற மாநிலத்தில் இந்த கழிவை புதைத்து கொள்ளலாம். ஏன் இங்கு புதைக்கவேண்டும் என்று கூறுகிறார்கள். இந்த அணுகழிவு பாதுகாப்பானது என்றால் டெல்லி பாராளு மன்ற வளாகத்தில் இதை புதைக்கலாம் அல்லவா?. இந்த கூடங்குளம் அணுஉலையில் உற்பத்தியாகின்ற மின்சாரத்தை பயன்படுத்துகின்ற கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இதை புதைக்கலாம் அல்லவா? ஏன் இங்கே புதைக்க வேண்டும்? என்று நினைக்கிறீர்கள்.

    எங்கள் தமிழ் கலாசாரத்தை தடுக்கவேண்டும் என்பதற்காக ஜல்லிக்கட்டை நிறுத்திய போது எப்படி போராடி வெற்றி பெற்றோமோ? அதைவிட இதில் எங்கள் தாய் மண்ணை காப்பாற்ற வேண்டும். எங்கள் மக்களை அழிக்கின்ற இந்த அணுக்கழிவு மையத்தை அமைக்க விடமாட்டோம். அணுக்கழிவு மையத்தின் அருகில் இருப்பது அணு குண்டு மீது இருப்பதற்கு சமம் என்று விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். எனவே இந்த அணுக்கழிவு மையம் அமைப்பதை என்ன விலை கொடுத்தாவது தடுப்போம். இது எங்கள் போராட்டத்தின் ஆரம்பம் தான். இனி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடிகர் ரஜினிகாந்தை உழைப்பால் உயர்ந்தவர் என்று பாடபுத்தகத்தில் வைத்திருப்பது வேண்டு மென்றே செய்தது. திரைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாடபுத்தகத்தில் வைப்பது சரியல்ல. கமல்ஹாசன் சிறுவயது முதலே நடித்து அவரைவிட மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார். கலைத்துறையில் ரஜினியை விட கமல்ஹாசனே அதிகம் சாதனை படைத்துள்ளார். கலைத்துறையில், விளையாட்டு துறையில் உழைப்பால் உயர்ந்தவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். உலக அளவில் சாதனை படைத்த தமிழர் சுந்தர்பிச்சை கூட உழைப்பால் உயர்ந்தவர்தான்.


    நடிகர் சங்க தேர்தலில் பாக்கியராஜ் போட்டியிடுவது வரவேற்கத்தக்கது. கடந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சரியாக செயல்படவில்லை. சர்க்கார் படபிரச்சினையின் போது நடிகர் பாக்கியராஜ் சிறப்பாக செயல்பட்டார். எனவே அவரது தலைமையிலான அணி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    தென்னக ரெயில்வேயில் ஆங்கிலமும், இந்தியும்தான் பேச வேண்டும் என சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இது மறைமுகமாக இந்தியை திணிப்பதாக உள்ளது. ஒரே மொழி, ஒரே நாடு என்பது இந்திய இறையாண்மையை சிதைக்கும் செயல்.

    Next Story
    ×