என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.6000 உதவி திட்டத்திற்கு அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு - மு.க.ஸ்டாலின் பேச்சு
    X

    ரூ.6000 உதவி திட்டத்திற்கு அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு - மு.க.ஸ்டாலின் பேச்சு

    ராகுல் காந்தி அறிவித்துள்ள ஏழைகளுக்கு மாதம் ரூ.6000 உதவி திட்டத்திற்கு அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு கிடைத்துள்ளது என மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார். #mkstalin #congress #parliamentelection
    ஆரணி:

    ஆரணியில் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் தபால் வாக்குகளை திமுக கூட்டணிக்கு அளிக்க வேண்டும். ராகுல்காந்தி அறிவித்துள்ள ஏழைகளுக்கு மாதம் ரூ.6000 உதவித்திட்டத்திற்கு அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு கிடைத்துள்ளது.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென்று நாட்டு பாதுகாப்பு மீது அக்கறை வந்துள்ளது. தேர்தலுக்கு முன் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு இருந்தவர்கள் தற்போது தேர்தலுக்காக கூட்டணி சேர்ந்து உள்ளனர்.

    தேர்தல் வந்தால் மட்டுமே தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. தேர்தல் முடிந்தால் இந்தியாவில் இருக்க மாட்டார். 


    வாக்குறுதி அளித்த படி ஒவ்வொருவர் வங்கிக்கணிக்கிலும் மோடி ரூ.15 லட்சம் செலுத்தி உள்ளாரா என கேள்வி எழுப்பினார். பொய் வாக்குறுதிகளை அளிப்பதையே வாடிக்கையாக கொண்டவர் பிரதமர் மோடி.

    ராகுல்காந்தி வெளியிட்டுள்ள காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் நரேந்திர மோடி அதிர்ச்சியில் உள்ளார். தமிழகத்திற்கு மீண்டும் பல நலத்திட்டங்கள் கிடைத்திட மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும்.

    காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது திமுக ஆட்சியின் சாதனை என மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

    தமிழக மக்கள் தங்கள் கோபத்தை காட்ட வேண்டிய நாள் தான் ஏப்.18-ம் தேதி. மக்கள் உணர்வுகளை பார்க்கும் போது 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆரணி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்துக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். #mkstalin #congress #parliamentelection
    Next Story
    ×