என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும்- சுப்பிரமணியசாமி பேட்டி
அவனியாபுரம்:
பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்டவேண்டும் என்று 2 முறை மத்திய அரசிடம் கூறினேன். 2001ல் சரத்யாதவ் அமைச்சராக இருந்த போது மத்திய அமைச்சரவை முடிவு எடுத்தது. அப்போது தமிழக அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.
பிரபுல் படேல் விமான நிலைய திறப்பு விழாவில், முத்துராமலிங்க தேவரின் பெயரை கூற முயன்ற போது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலவரம் வரும் என தடுத்தார்.
தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இருந்த போது மதுரை விமான நிலையத்திற்கு முத்து ராமலிங்க தேவர் பெயர் சூட்ட அனுப்பிய திட்டத்தை நிராகரித்தவர் ஓ.பி.எஸ்.தான்.
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும். பா.ஜ.க.வின் கூட்டணி கொள்கை பிடிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் போட்டியிடத்தான் எனக்கு விருப்பம்.
ராகுல்காந்தி தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி ஏழைகளுக்கு ரூ.72 ஆயிரத்தை எங்கிருந்து கொடுப்பார்? வங்கியில் இருந்தா கொடுப்பார்?
இவ்வாறு அவர் கூறினார். #subramanianswamy #bjp #parliamentelection
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்