என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உதவி செய்வது போல் நடித்து தங்க நகைகளை திருடி விற்ற சகோதரர்கள்
- அத்தைக்கு உதவி செய்வது போல் நடித்து தங்க நகைகளை சகோதரர்கள் திருடி விற்றனர்.
- ஒருவர் கைது-மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள வலையப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த வர் முத்துலட்சுமி (வயது 52). இவரது பிள்ளைகள் அனைவருக்கும் திருமண மாகி வெளியூர்களிலும், அதே ஊரிலும் தனிக்குடித்த னம் இருந்து வருகிறார்கள்.
எனவே முத்துலட்சுமி தனியாக வசித்து வருகிறார். இவருக்கு உதவி செய்வ தற்காக முத்துலட்சுமியின் அண்ணன் மகன் அஜித் குமார், தம்பி மகன் முத்துச் செல்வம் ஆகியோர் அவ்வப் போது அத்தையின் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். கடைக்கு செல்வது, மருத்து வமனைக்கு அழைத்து செல் வது போன்ற பணிக ளில் அவர்கள் ஈடுபட்டு வந்துள் ளனர்.
மருமகன்கள் மீது அதிக நம்பிக்கையில் முத்துலட்சுமி இருந்து வந்தார். இதனால் அவர்களின் நடவடிக்கை களில் முத்துலட்சுமிக்கு எப்போதுமே சந்தேகம் வந்த தில்லை. இதற்கிடையே சம்பவத்தன்று முத்துச்செல் வம் பக்கத்து வீட்டின் திண் ணையில் அமர்ந்திருந்தார்.
அவரது கையில் தங்கச் சங்கிலி ஒன்று இருந்தது. இதைப்பார்த்த அந்த வழியாக வந்த முத்துலட்சுமி யின் மகள் கலைகுமாரி, இந்த செயின் யாருடையது என்று கேட்டவாறு அதை கையில் வாங்கி பார்த்தார். அப்போது அது 8 பவுன் எடை கொண்ட தன்னுடைய தாய் முத்துலட்சுமிக்கு சொந் தமானது என்பது தெரிந்தது.
உடனே தனது தாயை செல்போனில் தொடர்பு கொண்ட கலைகுமாரி, உன்னுடைய தங்க சங்கிலி, உனது தம்பி மகன் வைத்தி ருப்பதாகவும், வீட்டில் வேறு ஏதாவது தங்க நகை கள் மாயமாகி இருக்கிறதா என்று கேட்டார். பின்னர் சிறிது நேரத்தில் தங்க கம்மல்களையும் காண வில்லை என்று முத்துலட்சுமி தெரிவித்தார்.
இதுபற்றி முத்துச்செல்வத் திடம் கேட்டபோது, அத்தை வீட்டில் இருந்து திருடியதை ஒப்புக்ெகாண்டார். மேலும் திருடிய கம்மலை தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணம் பெற்றதாக வும், அதை அஜித்குமார் பெற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து அவர்கள் மீது முத்துலட்சுமி ஆலங்கு ளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முத்துசெல் வத்தை கைது செய்தனர். தலைமறைவான அஜித்கு மாரை தீவிரமாக தேடி வரு கிறார்கள். உதவி செய்வது போல் நடித்து அத்தை வீட்டில் நகை திருடிய சம்ப வம் அப்பகுதியில் பரப ரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்