என் மலர்tooltip icon

    வேலூர்

    • நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் ரோட்டரி சங்கம் மற்றும் குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கம் இணைந்து மாபெரும் போலியோ மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணியை நேற்று நடத்தியது.

    பேரணிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் ஏ.மேகராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் ரோட்டரி சங்க ஆளுநர் கே.ஜவுரிலால்ஜெயின், முன்னாள் ரோட்டரி சங்க தலைவர்கள் எம்.கோபிநாத், வி.என். அண்ணாமலை, என்.எஸ். குமரகுரு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் கே.சந்திரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜே.கே.என்.பழனி கலந்து கொண்டார்.

    போலியோ மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணியை அமலு விஜயன் எம்.எல். ஏ., நகர மன்ற தலைவர் எஸ். சவுந்தரராசன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மருத்துவத் துறை இணை இயக்குனர் எம்.கண்ணகி, துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி, குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மாறன்பாபு, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரோட்டரி சங்க நிர்வாகிகள் மாற்றுத்திறனாளிகள் பொதுமக்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

    நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் என்.சத்தியமூர்த்தி, டாக்டர் எம்.எஸ்.திருநாவுக்கரசு, வி.நாராயணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கத் தலைவர் வி.குமரவேல் நன்றி கூறினார்.

    • அதிமுக கவுன்சிலர்கள் செல்போன் வெளிச்சத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மாநகராட்சி கூட்டத்தில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என அ.தி.மு.க கவுன்சிலர் கூறினர்.

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் சுஜாதா தலைமையில் இன்று நடந்தது. கமிஷனர் அசோக்குமார், துணை மேயர் சுனில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கிராமங்கள்போல மாநகரப் பகுதியில் பகுதி சபா அமைக்க உத்தரவிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதனை தொடர்ந்து வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் 419 பகுதி சபா அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக மேயர் அறிவித்தார். உடனடியாக கூட்டம் நிறைவடைந்தது.

    அப்போது அ.தி.மு.க கவுன்சிலர்கள் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

    அங்கிருந்து மேயர் துணை மேயர் கமிஷனர் ஆகியோர் வெளியே சென்றனர். அதிமுக கவுன்சிலருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் சிலரும் பேசினர். இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.

    அதிமுக கவுன்சிலர்கள் எழிலரசன், ரமேஷ், சரவணன், அஸ்மிதா, அமல நிருபா, அருணா விஜயகுமார், ராஜேஸ்வரி சோமு மற்றும் பாஜக கவுன்சிலர் சுமதி மனோகரன் ஆகியோர் கூட்ட அரங்கில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களை உடனடியாக வெளியேற வேண்டுமென மாநகராட்சி ஊழியர்கள் கேட்டுக்கொண்டனர்.

    அவர்களை தனது அறைக்கு வருமாறு அழைத்தார். ஆனால் அவர்கள் கூட்டம் அரங்கில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் அதுவரை வெளியேற மாட்டோம் என தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து கூட்ட அரங்கில் இருந்த மின்விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டது.

    இதனால் அதிமுக கவுன்சிலர்கள் செல்போன் வெளிச்சத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாநகராட்சி கூட்டத்தில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

    கூட்டத்தில் விளக்கம் கூட அளிக்காமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எந்த வகையில் நியாயம் என அ.தி.மு.க கவுன்சிலர் கூறினர்.

    • கமாண்டிங் அதிகாரி பேச்சு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    காட்பாடி 10-வது பட்டாலியன் தேரிய மாணவர் படை அலுவலர்கள் கூட்டம் என்.சி.சி அலுவலக வளாகத்தில் நடந்தது.

    15 கல்லூரிகள் மற்றும் 29 பள்ளிகளைச் சேர்ந்த என்.சி.சி அலுவலர்கள் பங்கேற்ற கூட்டத்திற்கு 10-வது பட்டாலியவின் கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் சஞ்சய்ஷர்மா தலைமை தாங்கினார். பட்டாலியனின் நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் எஸ்.கே. சுந்தரம் முன்னிலை வகித்தார்.

    விஐடி பல்கலைக்கழக என்.சி.சி அலுவலர் ரவி சங்கர் பாபு வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் அதிகாரி கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் சஞ்சய்ஷர்மா பேசியதாவது:-

    "தமிழ்நாட்டிலேயே அதிக எண்ணிக்கை என்சிசி மாணவர்கள் கொண்ட பட்டாலியன் காட்பாடி 10வது பட்டாலியன் ஆகும். என்சிசி மாணவர்கள் அகில இந்திய அளவில் பங்கேற்கும் போது தமது முழுத் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பேசும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    அகில இந்திய குடியரசு தின போட்டிகளில் நமது பட்டாலியனைச் சேர்ந்த என்சிசி மாணவ, மாணவிகள் பெரும் அளவில் கலந்து கொண்டு பட்டாலியனுக்கு பெருமை சேர்க்க வேண்டும். என்சிசி மட்டும் அல்லாமல் படிப்பிலும் கவனம் கொண்டு நல்ல முறையில் தேர்ச்சி பெற்று ராணுவத்தில் சேர்ந்து அதிகாரிகளாக வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் சுபேதார் மேஜர் சட்பீர் சிங், அலுவலக கண்காணிப்பாளர் ஸ்ரீகாந்த், என்சிசி 10-வது பட்டாலியனின் மக்கள் தொடர்பு அலுவலர் க. ராஜா, கல்லூரிகளைச் சேர்ந்த என்சிசி அலுவலர்கள் ரவி சங்கர் பாபு, விக்ரமன், முகம்மது அசாருதீன், ஞானலின் ஷைனி, ஜாகீர் உசைன், தென்னரசன், பால் தேவசிகாமணி, ராஜகோபால் உள்பட கல்லூரிகள் மற்றும் பள்ளிகளைச் சேர்ந்த என்சிசி அலுவலர்கள், என்சிசி பயிற்சி பிரிவு சுபேதார்கள் கே.ஆர். குமார், டி.அரவிந்தன், அவில்தார்கள் துரைமுருகன், ரமேஷ், எம்.சீனிவாசன், எஸ். சீனுவாசன், ராமாராவ், பாலாஜி, ரஞ்சித், ஜெஸ்டின், ஜீட்சிங் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    முடிவில் பயிற்சி பிரிவு சுபேதார் குமார் நன்றி கூறினார்.

    • பா.ஜ.க. பரபரப்பு குற்றச்சாட்டு
    • மாநகராட்சி நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட பா.ஜ.க அரசு தொடர்பு பிரிவு சார்பில் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.

    கூட்டத்திற்கு அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மனோகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு குழு ஆயிரத்து 349 கோடி ஒதுக்கியது. அந்த நிதியை மாநகராட்சி நிர்வாகம் சரியாக பயன்படுத்தவில்லை. இதனால் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    வேலூர் மாநகராட்சியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது தற்போது பருவ மழை தொடங்க உள்ளதால் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    மணல் குவாரியில் முறைகேடு

    வேலூர் பிள்ளையார் குப்பத்தில் அமைக்கப்பட்ட மணல் குவாரியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது.

    இதனை தடுத்து நிறுத்த வேண்டும். வேலூர் மாநகரத்தில் காட்பாடி முதல் பாகாயம் வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.மாவட்ட நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர் எஸ். எல்.பாபு உள்பட கலர் கலந்து கொண்டனர்.

    • இன்று மாலை 4.30 முதல் மாலை 6.30 மணி வரை நடக்கிறது
    • தங்க கவசத்தில் சுப்பிரமணியசாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் முருகர் கோவில்களில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா இன்று நடக்கிறது.தீபாவளிக்கு மறுநாள் தொடங்கி 6 நாட்கள் கந்த சஷ்டி விழா நடக்கிறது. இந்நாட்களில் கந்த சஷ்டி விரதத்தை மக்கள் அனுசரிக்கின்றனர். குறிப்பாக குழந்தை பேறு வேண்டியும், முருகனைப் போன்று குழந்தை பிறக்க வேண்டியும் சஷ்டி விரதம் அனுசரிக்கின்றனர்.

    கந்த சஷ்டி விழா

    அதேப்போல் மேற்கண்ட 6 நாட்களும் எல்லா முருகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள், லட்சார்ச்சனை, திருவிளக்கு பூஜைகளுடன் 6-வது நாள் மாலையில் சூரசம்ஹாரம் நடக்கிறது. இந்த ஆண்டு கந்த சஷ்டி விரதம் கடந்த 25-ந் தேதி தொடங்கியது.

    இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில், காங்கேயநல்லூர் சுப்பிரமணியசாமி கோவில், தோட்டப்பாளையம் தாரகஸ்வரர் கோவில், வள்ளிமலை சுப்பிரமணிய சாமி கோவில், பாலமதி குழந்தை வேலாயுதபாணி கோவில், தீர்த்தகிரி முருகன் கோவில், அரியூர் திருமலைக்கோடி சுப்பிரமணியசாமி கோவில், தார்வழி மயிலாடும் தணிகை மலை முருகன் கோவில், மகா தேவமலை கோவில், சாத்து மதுரை முருகன் கோவில் என அனைத்து முருகன் கோவில்களிலும் கந்த சஷ்டி முன்னிட்டு கடந்த 25-ந் தேதி முதல் சிறப்பு வழிபாடுகளும் லட்சார்ச்சனையும் நடந்தன.

    அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரத்தினகிரி பாலமுருகன் கோவில், திமிரி குமரகிரி முருகன் கோவில், சோளிங்கர் ஞானமலை முருகன் கோவில்களிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் கைலாஷகிரி முருகன் கோவில், திருப்பத்தூர் பசலை குட்டை முருகன் கோவில்களிலும், திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் ரெட்டிபாளையம் தம்டக்கோடி முருகன் கோவிலில் இன்று மாலை 4.30 முதல் மாலை 6.30 மணி வரை சூரசம்ஹார விழா நடக்கிறது.

    அதேபோல் போளூர் குன்னத்தூர் பழனியாண்டவர் கோவில், கலசப்பாக்கம் நட்சத்திர கோவில் என அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று சூரசம்ஹார விழா நடக்கிறது.

    வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சாமிக்கு இன்று காலை 7.30 மணி அளவில் விசேஷ அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தங்க கவசத்தில் சுப்பிரமணியசாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை 11.30 மணிக்கு தீபாராதனை நடந்தது.

    மாலை 3 மணி அளவில் வாணியர் வீதி கனக துர்க்கை அம்மன் கோவிலில் பராசக்தியிடம் சக்தி வேலை வாங்கும் முருகர் முக்கிய வீதிகள் வழியாக வந்து மாலை 6.30 மணி அளவில் கோட்டை மைதானத்தை அடைகிறார் அங்கு சூரசம்ஹாரம் நடக்கிறது.

    நிகழ்ச்சிக்கு ரத்தினகிரி பாலமுருகனடிமை சாமிகள், கலவை சச்சிதானந்த சாமிகள், நாராயண பீடம் சக்தி அம்மா ஆகியோர் தலைமை தாங்குகின்றனர்.

    • தயார் நிலையில் 750 மணல் மூட்டைகள் உள்ளது
    • அதிகாரிகள் அனைவரும் தயார் நிலையில் உள்ளதாக தகவல்

    குடியாத்தம்:

    குடியாத்தம் பகுதியில் கடந்த ஆண்டு பெய்த பலத்தமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமான கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது பல கிராமங்கள் வெளிவட்டாரத்தில் இருந்து பல நாட்கள் துண்டிக்கப்பட்டது

    பல இடங்களில் ஏரிக்கரைகளும், வெள்ளநீர் செல்லும் கால்வாய்களும் சேதமடைந்து குடியிருப்பு பகுதிகளுக்கும் விளை நிலங்களுக்கும் மழை நீரும், வெள்ளநீரும் புகுந்தது.

    இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் மழை வெள்ளம் மற்றும் மழை பாதிப்பு, இயற்கை பேரிடர் எதிர்கொள்ளும் வகையில் மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் எந்திரம் மற்றும் ஜேசிபி எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ஊரக வளர்ச்சித்துறை வேலூர் திட்ட இயக்குனர் ஆர்த்தி ஆகியோர் உத்தரவிட்டனர்.

    அதனைத் தொடர்ந்து குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 750 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்திருக்கும் வகையில் மணல் மூட்டைகள் கட்டும் பணிகள் நேற்று நடைபெற்றது.

    இந்த பணிகளை குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் நத்தம்பிரதீஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம். கார்த்திகேயன், எஸ்.சாந்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    தயார்நிலை

    மழைக்காலங்களில் மரங்கள் விழுந்தால் அதை அகற்றுவதற்கு தேவையான கருவிகள், கயிறுகள், லைட்டுகள் உள்ளிட்டவைகளும் ஜேசிபி எந்திரங்கள், உரிமை யாளர்களின் தொலைபேசி எண்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    மழை வெள்ளம் மற்றும் இடர்பாடுகளின் போது உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஊரக வளர்ச்சித்துறையினர் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சுவரில் துளையிட்டு துணிகரம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி காங்கேயநல்லூரில் அரசு உயர் ரக மதுபான விற்பனை கடை உள்ளது. இதில் மர்ம நபர்கள் பின்பக்க சுவரில் துளையிட்டு நேற்று இரவு உள்ளே புகுந்தனர். அங்கிருந்து ரூ. 3000 மதிப்பிலான பீர் திருடி சென்று விட்டனர். இன்று காலையில் கடையை திறக்க வந்த ஊழியர்கள் திருட்டு நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து தகவலறிந்த விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • விவசாயிகள் பெரிதும் பாதிப்பு
    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள எர்த்தாங்கல் கிராமத்தில் குட்டைமேடு பகுதியில் உள்ள கால்வாய் மேடுப்பகுதியில் மழைக்காலங்களில் ஊற்றுகள் மூலம் வெள்ள நீர் உற்பத்தியாகி சில கிலோமீட்டர் பயணித்து எர்த்தாங்கள் கிராம வழியாக பெரும்பாடி ஏரிக்கு செல்ல வேண்டும்

    அதேபோல் சுற்றுப்புற பகுதியில் பெய்யும் மழைநீரும் பெரும்பாடி ஏரிக்கு செல்ல வேண்டும். ஆனால் ஊற்று தண்ணீரும், மழைநீரும் பெரும்பாடி ஏரிக்குச் செல்ல உள்ள வழிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் அந்த மழைநீர் செல்ல வழி இல்லாமல் விளை நிலங்களுக்குள் புகுந்து பல நாட்களாக தேங்கி நிற்பதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையால் இதேபோல் எர்த்தாங்கல் பகுதியில் பல ஏக்கர் விளை நிலங்களுக்குள் வெள்ளநீர் புகுந்து விவசாயிகளுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதனையடுத்து தற்போது பெய்யும் மழையால் மழைநீர் ஆக்கிரமிப்புகளால் வெளியேற வழி இல்லாமல் விலை நிலங்களுக்குள் மீண்டும் புகுந்து வருகிறது

    இதனை தடுக்க கோரி எர்த்தாங்கல் ஒன்றிய குழு உறுப்பினரும், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தின் ஒன்றிய குழு துணை தலைவரான கே.கே.வி.அருண்முரளி என்பவர் வேலூர் கலெக்டர் மற்றும் மாவட்ட திட்ட இயக்குனர், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பி உள்ளார். அதில் எர்த்தாங்கல் கிராமத்தில் உற்பத்தியாகும் ஊற்றுத் தண்ணீர் மற்றும் மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற வழி இல்லாமல் ஆக்கிரமிப்புகளால் விளைநிலங்களுக்குள் புகுந்து பெருத்த சேதம் ஏற்படுத்துகிறது.

    மேலும் மழைநீர் செல்லும் வழியில் உள்ள கால்வாய்கள் தூர்ந்து போய்விட்டதுலும், ஆக்கிரமிப்புகளாலும் செல்ல வழியின்றி குடியிருப்புகள், நிலங்கள் காலியிடங்களில் மழை நீர் தேங்குகிறது.

    இதனால் கிராம மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகளும் இடைஞ்சலும் ஏற்படுகிறது உடனடியாக அதிகாரிகள் பார்வையிட்டு ஊற்றுத் தண்ணீர் மற்றும் மழைநீர் தங்குதடையின்றி பெரும்பாடி ஏரிக்கு செல்ல வழிவகை செய்ய வேண்டும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தல்
    • போக்சோ சட்டத்தில் ஜெயிலில் அடைத்தனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த குருவராஜாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 22) இவர், 16 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்துகொள்ளுமாறு கட்டாயப் படுத்தியுள்ளார். இதற்கு மறுத்த சிறுமியை வீட்டை விட்டு வெளியே வரும் போது திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் கடத்தி சென்றார்.

    இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் சிறுமியை கண்டுப்பிடித்து அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    நவின்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி முருகன் கடந்த மாதம் 8-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்தார்.
    • ஜெயில் உணவை தவிர்த்து அவர் தண்ணீர் மற்றும் பழங்கள் மட்டுமே சாப்பிட்டார்.

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் அடைக்கப் பட்டுள்ள முருகன், பரோல் வழங்க வலியுறுத்தி பலமுறை சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தார்.

    அவர் மீது சிறை விதிமீறல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி முருகன் கடந்த மாதம் 8-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்தார். சிறை அதிகாரிகள் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.ஆனால் முருகன் உண்ணாவிரதத்தை கைவிட வில்லை. ஜெயில் உணவை தவிர்த்து அவர் தண்ணீர் மற்றும் பழங்கள் மட்டுமே சாப்பிட்டார்.

    முருகனின் உடல்நிலை மோசமானதால் அவருக்கு ஜெயில் வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது‌ தொடர்ந்து டாக்டர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் சிறை காவலர் ஒருவரை அவதூராக பேசிய வழக்கு சம்பந்தமாக முருகன் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.

    அவரிடம் உண்ணாவிரதத்தை கைவிடக்கோரி சிறை அதிகாரிகள் நேற்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து 52 நாட்களுக்கு பிறகு முருகன் உண்ணாவிரதத்தை கைவிட்டார். இன்று காலை அவர் ஜெயில் உணவை சாப்பிட்டார்.

    • மத்திய மந்திரியிடம் வணிகர்கள் வலியுறுத்தல்
    • விமான நிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

    வேலூர்:

    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை இணை மந்திரி வி.கே.சிங் இன்று வேலூர் மாநகர வணிகர் சங்க நிர்வாகிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது வணிகர் சங்கங்கள் சார்பில் அவருக்கு மரியாதை செய்யப்பட்டது. மேலும் வணிகர்கள் சங்கம் சார்பில் சில கோரிக்கைகளை முன் வைத்தனர். அப்போது வணிகர்கள் கூறியதாவது:-

    வேலூரில் இருந்து காட்பாடி செல்லும் வகையில் நேரடியாக மேம்பாலம் ஒன்று அமைக்க வேண்டும். கிரீன் சர்க்கிள் அளவை குறைக்க வேண்டும். கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் ெரயில்வே மேம்பாலம் கொண்டு வர வேண்டும்.

    சித்தூர் கடலூர் சாலையை அகலப்படுத்துவதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். காட்பாடியில் இருந்து சத்துவாச்சாரிக்கு பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும்.

    திருவண்ணா மலையிலிருந்து பெங்களூர் செல்லும் வாகனங்கள் வேலூர் நகருக்குள் வந்து செல்கிறது. இதை தடுக்கும் வகையில் புதிதாக சாலை அமைக்க வேண்டும்.

    வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் சாலையில் கண்ணமங்கலம் அருகே சுங்கச்சாவடி மூலம் வரி வசூலிக்கப்படுகிறது. சாலை பணிகள் மேற்கொள்ளாமலே வசூல் செய்யக்கூடாது.

    வேலூருக்கு கல்வி, மருத்துவத்திற்காகவும் ஏராளமான வெளி மாநிலத்தவர்கள் வருகை தருகின்றனர். வேலூர் விமான நிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    மேல்மொணவூரில் 35 ஏக்கரில் வணிகர்களுக்கான மார்க்கெட் அமைய உள்ளது. மார்க்கெட் அமைந்தால் பொதுமக்கள் மற்றும் ஏராளமான வணிகர்கள் வந்து செல்வார்கள். எனவே தேசிய நெடுஞ்சாலை கடக்கும்போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கூறினர்.

    • வேலூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பேச்சு
    • கவிதை, நாடகம், கட்டுரை, ஓவியம், பேச்சு போட்டிகள் நடந்தன

    வேலூர்:

    வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத் துவமனையில் உலக மார்பக புற்றுநோய் மாதம் நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.

    இதை முன்னிட்டு விழிப்புணர்வு பதாகை ஏந்திய முழக் கங்கள், பேரணி, விழிப்புணர்வு கவிதை, நாடகம், கட்டுரை, ஓவியம், பேச்சு போட்டிகள் நடந்தன. இதன் இறுதி விழா நேற்று நடந்தது.

    நிகழ்ச்சியில், மருத்துவ துணை கண் காணிப்பாளர் ரதிதிலகம், குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வி தலைமை தாங்கி பேசியதாவது:-

    30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 6 மாதம் அல்லது ஓராண்டுக்கு ஒரு முறையாவது மார்பக பரிசோதனை செய் துக்கொள்ள வேண்டும். மார்பகங்களில் வலி, கட்டி, நிறம் மாறுதல், அளவுகளில் மாற்றம் தெரிந்தால் உடனடியாக டாக் டர்களிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதில், யாரும் வெட்கப்படவோ, கூச்சப்படவோ, தயங்கவோ தேவையில்லை.

    ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் சிகிச்சை அளித்து குணப்படுத்தலாம். முற்றிய நிலையில் இருந்தால் குணப்ப டுத்துவதில் சிக்கல் ஏற்படும்.

    நவீன கருவிகளின் மூலம் ஆரம்ப நிலையில் கண்டறியப்படும் மார்பக புற்றுநோயை நுண் கதிர்வீச்சு, கீமோ தெரபி மற்றும் மார்பக கன்சர்வேட்டிவ் அறுவை சிகிச்சை மூலம் மார்பகத்தை அகற்றாமலேயே கேன்சர் கட்டியை அகற்றலாம். பொது மக்கள் அனைவரும் இதை பயன்படுத் திக் கொண்டு மார்பக புற்றுநோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண் டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து, நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவி களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், துறை தலைவர்கள் ராஜவேலு, லோக நாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×