search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோட்டக்கலை பயிர் தரம்பிரித்தல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
    X

    தோட்டக்கலை பயிர் தரம்பிரித்தல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

    • கூட்டத்தில், விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிர்கள் மதிப்புக் கூட்டல் தரம் பிரித்தல் குறித்து விளக்கப்பட்டது.
    • உழவர் சந்தையின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அரவேணு:

    கோத்தகிரி வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மேலாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் மசக்கல் கிராமத்தில் தோட்டக்கலை பயிர்களில் தரம் பிரித்தல், வகைப்படுத்துதல், சந்தைப்படுத்துதல் மற்றும் சேமிப்பு தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதில் நீலகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி மேலாண்மை அலுவலர் வெற்றிவேல், அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் பிரசாந்த், தொழில்நுட்ப மேலாளர் பிரவீனா, மணிமேகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிர்கள் மதிப்புக் கூட்டல் தரம் பிரித்தல் மற்றும் சேமிப்பு தொழில்நுட்பங்கள் குறித்தும், உழவர் சந்தையின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×