என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூடலூரில் கடைகளில் கருப்புகொடி ஏற்றி வியாபாரிகள் போராட்டம்
- கூடலூரில் கடைகள், வணிக நிறுவனங்களில் வியாழக்கிழமை கருப்புக் கொடியேற்றப்பட்டது.
- முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல பரப்பை விரிவாக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் கொடுத்திருந்த கெடு முடியும் நிலையில் உள்ளது
ஊட்டி
முதுமலைப் புலிகள் காப்பக வெளிமண்டல பரப்பை விரிவாக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் கொடுத்திருந்த கெடு முடியும் நிலையில் உள்ளது.
இதற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தி கூடலூா் சட்டப் பேரவை தொகுதி வணிகா்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சாா்பில் கடைகளில் கருப்புக் கொடி ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் கடைகளில் கருப்புக் கொடியேற்றப்பட்டது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வணிகா் சங்கங்களின் கூட்டமைப்பை கூட்டி முடிவெடுக்கப்படும் என்று நிா்வாகிகள் தெரிவித்தனா். மசினகுடி பகுதியில் வாடகை வாகனங்கள் மற்றும் ஜீப்புகளிலும் கருப்புக்கொடி கட்டப்பட்டிருந்தன
Next Story






