search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 16ம் தேதி உண்ணாவிரத போராட்டம் - அண்ணாமலை அறிவிப்பு
    X

    காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 16ம் தேதி உண்ணாவிரத போராட்டம் - அண்ணாமலை அறிவிப்பு

    • காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
    • காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 16ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தமிழக பாஜக அறிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    2018-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி முயற்சியால் காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தமிழகத்துக்கு காவிரி நதி நீர் கிடைத்து வந்தது.

    கர்நாடக மாநிலத்தில் தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன் காவிரி நதி நீரைத் திறந்து விடாமல், திட்டமிட்டு தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.

    தமிழகத்துக்கும், கேரளா, கர்நாடகா அண்டை மாநிலங்களுக்குமிடையே தீர்க் கப்படாத நதி நீர் பங்கீடு, அணை கட்டும் பிரச்சினை, கடந்த 50 ஆண்டுகளாக நிலவி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான சிக்கல்களும், பிரச்சினைகளும், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உருவானவை. இவற்றுக்கான நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த முயற்சிக்காமல் வீண் நாடகமாடி நீண்ட காலமாக தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றி வருகிறது.

    கர்நாடகா அணைகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமான தண்ணீர் இருந்தும் காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் தி.மு.க. அரசு தண்ணீரைப் பெற்றுத்தர திறனின்றி நடத்துகின்ற போராட்டம் கண்டனத்துக்குரியது.

    பா.ஜ.க.வின் சார்பில் டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன்களை காப்பாற்றுவதற்காக கும்பகோ ணத்தில் வருகிற 16-ந்தேதி (திங்கட்கிழமை) ஒருநாள் அடையாள உண் ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும்.

    இந்த போராட்டத்தை முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார். மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமை தாங்குகிறார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×