என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    ராமச்சந்திரபுரம் கிராமத்தில் புயலால் சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் ஊராட்சியில் ராமச் சந்திரபுரம் கிராமத்தில் கடந்த ஆண்டு 2021-ல் ஏற்பட்ட புயல் மழையால் அப்பகுதியில் உள்ள தெருவிளக்கு மின் கம்பங்கள் சேதமடைந்தது. இதனை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ரேணு மூலமாக, காட்டுக்காநல்லூர் மின் வாரிய அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும், தற்போது வரை சீரமைக்கவில்லை.

    இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இரவு நேரத்தில் இருட்டில் தவிக்கும் நிலை உள்ளது. மேலும் விஷஜந்துகள் நடமாட்டம் உள்ளதால் சிறியோர் முதல் பெரியோர் வரை நடமாட முடியாமல் அவதிப்படுகின்றனர்.நேற்று 19-ந்தேதி காலை காட்டுக்காநல்லூர் மின் வாரிய உதவி பொறியாளர் முருகேசனிடம், ஊராட்சி மன்ற தலைவர் ரேணு நேரில் சென்று புகார் செய்தார். 

    அப்போது உதவி பொறியாளர் முருகேசன் கூறுகையில்:-

    எங்களிடம் மின் கம்பம் சப்ளை இல்லை. வந்தவுடன் புதிய மின் கம்பங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார். 


    கடந்த ஒரு ஆண்டாக இதுபோன்ற நிலை உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தும் மின் வாரிய அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதாக ஊராட்சி மன்ற தலைவர் ரேணு தெரிவித்தார்.

    இதுசம்பந்தமாக மின் வாரிய அதிகாரிகள் காட்டுக்காநல்லூர் கிராமத்தில் ராமச்சந்திரபுரம் கிராமத்தில் சேதமடைந்த மின் கம்பங்கள் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருவண்ணாமலையில் பனியால் வேகமாக பரவும் நோய்களால் பொதுமக்கள் ஏறலமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு காரணமாக பல்வேறு நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. இதனால் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை உடல்நலம் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    இதன் காரணமாக திருவண்ணா மலை மருத்துவக் கல்லூரி மருத்து வமனை மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் நோயாளிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    அதிகளவில் கொரோனா பரவிவரும் நிலையில் பனிக்கால நோய்களும் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். 

    ஒரே குடும்பத்தில் பலருக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவுவதால் மருத்துவச் செலவுகள் அதிகரித்து வருகின்றன. சில ஆஸ்பத்திரிகளில் நூற்றுக்கணக்கானவர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பெரிய மருத்துவ மனைகளில் தினமும் ரூ.1000&க்கும் மேல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. பணி நோய் பரவல் காரணமாக பெண்கள், முதியவர்கள், சிறுவர்-சிறுமியர் வெளியில் வராமல் வீடுகளில் முடங்கி உள்ளனர். 

    திருவண்ணாமலை அருகில் உள்ள அடிஅண்ணாமலை, அத்தியந்தல், தேவனந்தல், ஆடையூர், பண்டிதபட்டு, ஆணாய் பிறந்தான, தேனிமலை, நல்லவன்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான மக்கள் பனிப்பொழிவு காரணமாக பல்வேறு நோய்கள் பரவிய வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே கிராமங்கள் மற்றும் நகரங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஜவ்வாது மலையில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் வட்டம் நம்பியம்பட்டு கோவிலூரைச் சேர்ந்த ஞானசேகர்  என்பவர் அளித்த தகவலின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தினைச் சேர்ந்த ச.பாலமுருகன், பழனிச்சாமி, மதன்மோகன் ஆகியோர்கள்  நம்பியம்பட்டு அருகே அமைந்துள்ள மலையின் முகட்டில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த வெண்சாந்து நிறத்தில் வரையப்பட்ட  பாறை ஓவியங்கள் இருப்பதை கண்டறிந்தனர். 

    மலை முகட்டில்  கிழக்குப்புறமாக அருகருகே உள்ள இரண்டு குகைத்தளங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட வெண்சாந்து நிற ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
     
    இந்த பாறை ஓவியங்களை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் கூறியதாவது:-

    முதல் ஓவியத்தில் உருவத்தில் சில வடிவங்கள் ஒருங்கே உள்ளது. அது ஒருவனின் தலை அலங்காரமாக இருப்பது போலவும். அதே சமயம் ஒரு குறியீடு போலவும் உள்ளது என்றும்  மேலும் இவ்வடிவத்தை வேட்டைத் தொடர்பான நிகழ்வுகளோடு பொருத்தியியும் பார்க்கலாம். 

    இரண்டாம் ஓவியத்தில் மனித உருவம் போல தோற்றம் கொண்ட வரைவு காணப்படுகின்றது. அதில் கையை விரித்த நிலையில் இருப்பது போலவும் ஒரு கையில் ஏதோ ஒன்று வைத்திருப்பது போலவும் உள்ளது. மூன்றாம் உருவத்தில் ஒரு மனித உருவம்,  நீண்ட தலைப்பாகை போன்ற தோற்றத்துடன் ஒரு கையில் ஆயுதம் ஒன்றை தூக்கிக்கொண்டு நடந்து செல்வது போல காணப்படுகின்றது. நான்காம் உருவத்தில் மனித உருவம் போல ஒன்று காணப்படுகின்றது. 

    ஒரு கையில் நீண்ட குச்சி போன்ற ஆயுதம் வைத்திருப்பது போல உள்ளது. அதற்கு முன் மிக அழிந்த நிலையில் மாடு போன்ற விலங்கின் தோற்றம் தெளிவற்ற நிலையில் காணப்படுகின்றது.  கீழே மனித உருவம் போன்ற உருவம் கையில் குச்சி போன்ற ஆயுதம் தூக்கி நடந்தும் செல்வது போல உள்ளது. என்றும் கூறியுள்ளார்.

    ஜவ்வாதுமலையில் அரியதாக காணப்படும் இந்த ஓவியங்கள் காலப்போக்கில் மழையின் காரணமாகவும் மக்களின் அறியாமையின் காரணமாகவும்  சேதமடைந்துள்ளன. பழந்தமிழர்களின் வாழ்வியலுக்கு சான்றாக திகழும் இது போன்ற பாறை ஓவியங்களை வரும் தலைமுறைகள் காணும் பாதுகாத்தும் ஆவணப்படுத்தவும் வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
    அண்ணன் இறந்த துக்கம் தாங்காமல் தம்பியும் சுடுகாட்டிலே இறந்துவிட்டதால் அவரது உறவினர்கள் மற்றும் அந்த கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம்பேட்டை நேரு தெருவை சேர்ந்தவர் நாராயணன் (வயது 64). இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். நாராயணன் சேத்துப்பட்டு ஆரணி சாலையில் பெட்டிக்கடை நடத்தி வந்தார்.

    நாராயணனின் தம்பி வெங்கடேசன் (58). இவருக்கு திருமணம் ஆகவில்லை. வெங்கடேசன் நாராயணன் வீட்டில் வசித்து வந்தார். நாராயணன் கடந்த 18 ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அண்ணன் இறந்த துக்கம் தாங்காமல் தம்பி வெங்கடேசன் அழுதுக்கொண்டே இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் நாராயணன் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று இறுதி சடங்குகள் செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது ஆழந்த சோகத்தில் இருந்த வெங்கடேசன் திடீரென மயங்கி விழுந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் வெங்கடேசனை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு வெங்கடேசனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் அங்கிருந்து வெங்கடேசன் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்று இறுதி சடங்குகள் செய்யப்பட்டு நாராயணன் உடல் அருகே வெங்கடேசன் உடலும் தகனம் செய்யப்பட்டது.

    அண்ணன் இறந்த துக்கம் தாங்காமல் தம்பியும் சுடுகாட்டிலே இறந்துவிட்டதால் அவரது உறவினர்கள் மற்றும் அந்த கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    திருவண்ணமலை அருகே தங்கையை எரித்துக் கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் பாலானந்தல் அடுத்த கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன். இவருக்கு இந்திரா காந்தி, தேவகி (வயது 51) என்று 2 மனைவிகள் இருந்தனர்.

    இவர்கள் இருவரும் அக்காள், தங்கை ஆவார்கள்.பச்சையப்பன் சில ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். தேவகிக்கு குழந்தை இல்லை. இந்திராகாந்திக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் தேவகி அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தபோது அவர் எரிந்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டு இருந்ததார்.

    இதையடுத்து அவரது குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களும் தேவகி உடலில் எரிந்து கொண்டிருந்த தீயினை அணைத்துள்ளனர். இருப்பினும் தேவகி உடல் பாதி எரிந்த நிலையில் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    பின்னர் தேவகி வசித்த பகுதி கலசபாக்கம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் இதுதொடர்பாக கலசபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    தேவகியின் சகோதரி இந்திரா காந்தி மற்றும் அவரது மகன் மணிகண்டனிடம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர்.அப்போது இந்திரா காந்தி" நான் தான் தேவகி மீது மண்ணெண்னை ஊற்றி எரித்துக் கொலை செய்தேன் "என்று தெரிவித்தார். எதற்காக தேவகியை கொலை செய்தார்? என்று கேட்டபோது அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் பெரும் தொல்லையாக இருப்பதாக கருதி கொலை செய்ததாக தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் இந்திராகாந்தியை கைது செய்தனர்.

    மேலும் சொத்து பிரச்சினைகள் காரணமாக தேவகி கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.இந்த சம்பவம் மங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவண்ணாமலை அருகே உள்ள தென்மாத்தூர் பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்கவிடாமல் குடும்பத்துடன் பெண் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவண்ணாமலை :

    திருவண்ணாமலை அருகே உள்ள தென்மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. அவரது மனைவி செல்வி. இவரது வீட்டுடன் கூடிய கட்டிடத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடையை திறக்க வந்துள்ளனர். அப்போது கட்டிடத்தின் உரிமையாளரான செல்வி, அவரது கணவர் ஏழுமலை மற்றும் குழந்தைகளுடன் கடையை திறக்கவிடாமல் கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட செல்வி மற்றும் அவரது கணவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 4 பேர் கடை ஏன் பூட்டி இருக்கிறது என்று தகராறு செய்ததாகவும், அவர்கள் மீது போலீசில் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் கடையை திறக்கவிடுவோம் என்று தெரிவித்தனர். இதனால் நேற்று மாலை வரை டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை.

    இதனால் மது பிரியர்கள் பலர் கடைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் மாலை 6.30 மணி அளவில் கடை திறக்கப்பட்டது. இதுகுறித்து போலீசில் கேட்டபோது, கட்டிட உரிமையாளருக்கு கள்ளச்சந்தையில் மதுபானம் விற்க மதுபானம் கொடுக்க சூப்பர்வைசர் மறுத்ததால் அவர்கள் டாஸ்மாக் கடையை திறக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
    திருவண்ணாமலையில் ஒன்றுமறியாத பிளஸ்1 மாணவியை திருமணமான வாலிபர் ஒருவர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் கர்பபமான மாணவி அவமானம் தாங்காமல் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    திருவண்ணாமலை:

    பெண்களுக்கு சம உரிமை கொடுத்துவிட்டோம் என்பதெல்லாம் வெறும் பெயரளவில்தான் உள்ளது. பெண் குழந்தைகளுக்கு செல்லுமிடமெல்லாம் பல்வேறு பாலியல் தொல்லைகள் நடைபெற்று வருகிறது. ஆனால் எந்த சட்டமும் கடுமையாக இல்லாததால் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பெண்களை போதப்பொருளாக கருதும் வக்கிர எண்ணம் பலரிடமும் உள்ளது.

    அவர்களை படிக்கும் பள்ளி, வேலை பார்க்கும் அலுவலகம், குடியிருக்கும் வீடு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தவறாக பயன்படுத்த முயற்சிக்கின்றனர். இதில் சில பெண்கள் மட்டுமே தப்பிக்கின்றனர். பலர் வலையில் சிக்கிய புள்ளிமான்களாக வாழ்க்கையை இழக்கின்றனர்.

    இது பெண்களுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. சமீபகாலமாக சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் செயல் அதிகரித்து வருகிறது. பெண் குழந்தைகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததும், மனதைரியம் இல்லாததும் இத்தகைய செயல்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதுபோன்ற செயல்களால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.

    திருவண்ணாமலையில் ஒன்றுமறியாத பிளஸ்1 மாணவியை திருமணமான வாலிபர் ஒருவர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் கர்பபமான மாணவி அவமானம் தாங்காமல் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    பாதிக்கப்பட்ட மாணவி கடந்த சில ஆண்டுகளாக சென்னை மகாபலிபுரம் அருகில் பட்டிப்புலம் பகுதியில் செயல்படும் பழங்குடியினர் நலத்துறை உண்டு உறைவிடப் பள்ளியில் படித்து வந்தார். அவர் பிளஸ்-1 படித்து வந்த நிலையில் கொரோனா பரவல் விடுமுறை காரணமாக திருவண்ணாமலை வந்து தனது பெற்றோருடன் தங்கியிருந்தார்.

    பின்னர் கடந்த அக்டோபர் மாதம் பள்ளிக்குச் சென்றார். அந்த மாணவிக்கு கடந்த மாதம் 24 ஆம் தேதி கடும் வயிற்று வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விடுதி வார்டன் மாணவியிடம் விசாரித்துள்ளார்.

    பின்னர் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து மாணவியை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். அதன்படி மாணவியை வீட்டுக்கு அழைத்து வந்து அவரிடம் வயிற்று வலி தொடர்பாக பெற்றோர் விசாரித்துள்ளனர்.

    இதற்கு பதில் அளிக்க மறுத்த மாணவி எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். அவரை திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். அதில் மாணவி கர்ப்பமானது தெரியவந்தது. சுய நினைவு இல்லாமல் சிகிச்சை பெற்று வந்த மாணவிக்கு நேற்று முன்தினம் சுய நினைவு திரும்பியது.

    இதுபற்றி அறிந்த போலீசார் மாணவியிடம் அவரது கர்ப்பத்துக்கு காரணமான நபர் யார்? என்பது குறித்து கேட்டனர். அவர்களுக்கு பதில் கூற முடியாத நிலையில் தன்னை கர்ப்பமாக்கிய நபரின் பெயரை எழுதி காட்டினார்.

    அதன்பேரில் மாணவி வசித்த வீட்டின் அருகில் குடியிருந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஹரிபிரசாத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    அப்போது ஹரிபிரசாத் மாணவியுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அவள் தனிமையில் இருந்தபோது மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணி அளவில் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஹரி பிரசாத் திருமணமானவர். டிரைவராக வேலை பார்த்து வரும் இவர் காதல் திருமணம் செய்தவர் என்று கூறப்படுகிறது. இவரின் காம பசிக்கு இரையான மாணவி பரிதாபமாக உயிர் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தில் மாணவியின் தவறு எதுவுமில்லை. படித்து நல்ல நிலைக்கு வர வேண்டிய ஒரு மாணவியின் உயிரை வாலிபரின் வக்கிரம் பலியாக்கிவிட்டது. இதுபோன்ற சம்பவங்களில் உண்மை வெளியில் தெரிந்தால் அவமானம் என்று பெண்கள் கருதுவதால் ஆண்கள் பலர் தைரியமாக குற்றங்களில ஈடுபடுகின்றனர்.

    எனவே பெண் குழந்தைகளிடம் விழிப்புணர்வையும், மன தைரியத்தை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.

    இந்த வழக்கில் மாணவி கர்ப்பமானதை மறைத்ததாக தலைமை ஆசிரியர் குமரகுருபரன், வார்டன் செண்பகவள்ளியையும் போலீசார் கைது செய்தனர்.
    செய்யாறு அருகே பைக் விபத்தில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.
    செய்யாறு:

    செய்யாறு அடுத்த மேல் நகரம் பேடு கிராமத்தை சேர்ந்தவர் ரகு (வயது 37), விவசாயி. இவருக்கு சித்ரா என்ற மனைவியும் லோகேஷ், ஆகாஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். 

    இவர் கடந்த 13-ந்தேதி பொங்கல் பொருட்கள் வாங்குவதற்காக செய்யாறுக்கு தனது பைக்கில் வந்தார். பாராசூர் கூட்ரோடு அருகே வந்தபோது திடீரென்று மாடு குறுக்கே வந்ததால் மாட்டின் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டார். 

    இதில் நிலைதடுமாறி ரோட்டில் விழுந்த ரகு பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு விசாரணை நடத்தி வருகிறார்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா அதிகரித்துள்ளது ஒரேநாளில் 359 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

    ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு மேலும் கடந்த 14&ந்தேதி முதல் 18&ந்தேதி வரை முக்கிய வழிபாட்டு மேலும் கடந்த 14&ந்தேதி முதல் 18&ந்தேதி வரை முக்கிய வழிபாட்டு ஸ்தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. 

    இருந்தபோதிலும் கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 359 பேருக்கு கொரோனா தொற்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்றுவந்த 82 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளார்.

    இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் 58 ஆயிரத்து 180 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 55 ஆயிரத்து 329 பேர் குணமடைந்துள்ளனர். 676 பேர் நோய் பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.

    தற்போது 2,175 பேர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். பொங்கல் பண்டிகை காலங்களில் மக்கள் பொது இடங்களில் அதிகளவில் கூடியதால் கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.
    திருவண்ணாமலையில் ஈசானிய குளக்கரையில் தைப்பூச தீர்த்தவாரி நடந்தது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் பங்குனி வரை உள்ள 12 மாதங்களில் நதிகள் மற்றும் குளங்களில் பல்வேறு தீர்த்தவாரி நடைபெறும்.

    இதில் முக்கியமான தீர்த்தவாரி தை மாதம் பூச நட்சத்திரத்தில் ஈசனானிய குளத்தில் நடக்கும் தீர்த்தவாரி ஆகும்.

    கோவில் வரலாற்றின்படி திருவண்ணாமலையில் அமைந்துள்ள பகுதி "அண்ணா நாடு "என்று அழைக்கப்பட்டது.இந்த பகுதியை வல்லாள மகாராஜா என்ற மன்னன் ஆண்டு வந்தார். 

    அவரின் தீவிர பக்தனாக இருந்த மன்னருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அவர் தனது மனைவியுடன் தினசரி கோவிலுக்கு வந்து அருணாச்சலேஸ்வரரை வணங்கி குழந்தை வரம் கேட்டு வந்தார்.

    ஒரு நாள் இறைவன் மன்னன் கனவில் தோன்றி "உனக்கு இந்த பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லை.என்னையே மகனாக பாவித்து கொள். 

    இந்தப் பிறவியில் நானே உனது மகன் "என்று கூறினார்.அதன்படி அருணா சலேஸ்வரரை குழந்தையாக பாவித்து சிறந்த முறையில் மன்னன் அரசாட்சி செய்து வந்தார்.

    இதற்கிடையில், ஈசானியத் துக்கு அருணா சலேஸ்வரர் ரூபமாக உற்சவர் சந்திரசேகர் தீர்த்தவாரி சென்றபோது போர்க்களத்தில் கயவர்களால் நல்லாள் மகாராஜா தந்திரமாக கொல்லப்பட்டார் என்ற தகவல் கிடைக்கிறது.

    இதை தீர்த்தவாரி சென்ற இறைவனிடம் தெரிவிப்பார்கள்.இதனால் மேளதாளங்கள் இல்லாமல் கோவிலுக்கு சந்திரசேகர் திரும்புவார்.

    வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்த்தவாரி கோவிலில் இருந்து வடகிழக்கு பகுதியில் உள்ள ஈசானியகுளத்தில் இன்று காலை வழக்கம்போல் நடைபெற்றது.அப்போது அஸ்திரதேவர் என்றழைக்கப்படும் சூலத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து ஈசானிய குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் ஈசானிய குளக்கரை மண்டபத்தில் எழுந் தருளினார்.அங்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சுவாமி-அம்மன் புறப்பட்டு கோவிலுக்குச் சென்றனர்.
    திருவண்ணாமலை அருகே நிலத்தில் மேய்ந்த மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர்.
    திருவண்ணாமலை:

    இந்தியாவின் தேசிய பறவை மயில். திருவண்ணாமலை பகுதியில் ஏராளமான மயில்கள் வசித்து வருகின்றன. அவைகள் எப்போதாவது விவசாய இடங்களுக்குச் சென்று இரை தேடும்.இதனைபொறுத்துக் கொள்ள முடியாத சிலர் அவைகளை விஷம் வைத்துக் கொன்று விடுகின்றனர்.இதுபோன்ற சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் நடைபெற்று உள்ளது. 

    வேலூர் வனப்பாதுகாவலர் சுஜாதா, மாவட்ட வன அலுவலர் அருண்லால் உத்தரவின்பேரில் திருவண்ணாமலை வனச்சரகர் சீனிவாசன் தலைமையில் குழுவினர் நேற்று ரோந்து சென்றனர். 

    அப்போது கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கீரனூர் ராஜபாளையம் என்ற பகுதியில் விவசாய நிலத்தில் பயிர்களை தின்ற 6 மயில்களை விஷம் வைத்துக் கொன்று இருப்பது தெரியவந்தது. 

    இதுதொடர்பாக வனத்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த காசிராஜா (வயது57) என்பவர் தனது நிலத்தில் இரை தேடி வந்த மயில்களை விஷம் வைத்துக் கொன்றது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் ஒரு ஆண் மயிலும், ஐந்து பெண் மயில்களும் இறந்துள்ளன.

    தேசிய பறவையான மயில்களை வேட்டையாடிய குற்றத்திற்காக காசிராஜாவை வனத்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது மயில்களை விவசாயிகள் கொல்லக் கூடாது. அவ்வாறு கொன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
    சேத்துப்பட்டு அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள ஊத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 30) இவருக்கு திருமணமாகி 1 மகன், 1 மகள் உள்ளனர். 

    ராஜசேகருக்கு உடல்நல குறைவால் அவதி பட்டு வந்தார். சிகிச்சை அளித்தும் சரியாகாததால் மனஉளைச்சலில் கானப்பட்டார். இவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். 

    ராஜசேகரனை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜசேகர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராஜசேகரின் அண்ணன் மதியழகன் சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

    அதன் பேரில் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் வரதராஜ் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.
    ×