என் மலர்
திருவண்ணாமலை
இன்று முதல் குப்பநத்தம் அணையில் இருந்து 47 ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள குப்பநத்தம் அணையிலிருந்து இன்று (9-ந்தேதி) முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப்சக்சேனா நேற்று உத்தரவிட்டார்.
அதன்பேரில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று காலை குப்பநத்தம் அணைக்கு நேரில் சென்று விசை மூலம் மதகுகள் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார்.
தொடர்ந்து கால்வாயில் பெருக்கெடுத்து ஓடிய புதுவெள்ளத்தில் மலர்கள் தூவப்பட்டது. முன்னதாக அணை திறக்கும் பகுதியில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
குப்பநத்தம் அணையில் இருந்து 47 ஏரிகளுக்கு இன்று முதல் வருகிற 27-ஆம் தேதி வரை 18 நாட்களுக்கு நாளொன்றுக்கு 265.00 மில்லியன் கன அடி வீதம் (அதாவது 412.20 மில்லியன் கன அடி) 28.5. 2002 முதல் 5.5.2022 வரை 8 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 240 கன அடி வீதமும் (அதாவது 165.92 மில்லியன் கனஅடி) ஆக மொத்தம் 26 நாட்களுக்கு 578.12 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 9,432.76 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் புதிதாக அமைக்கப்பட்ட சேஷாத்ரி சுவாமிகள் பீடத்தில் கும்பாபிஷேகம் நடந்தது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலை கோயிலின் பின்புறத்தில் ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள் சித்தர் பீடம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளுக்கு மட்டுமன்றி ஸ்ரீமீனாட்சி அம்மன் சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரருக்கும் சிலை அமைய பெற்றுள்ளது. முக்கியமாக ஸ்ரீராதாகிருஷ்ணன், ஸ்ரீகுபேர பெருமாள்,ஸ்ரீபழனி முருகர் ஆகியோரின் நவபாஷாண மூலிகைகளான சிலைகளும் அமைய பெற்றுள்ளது.
இந்த சித்தர் பீடத்தின் கும்பாபிஷேகம் நேற்று காலை விமர்சையாக நடைபெற்றது. முதல் நாள் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கின.
சுமங்கலி பூஜை, கோ-பூஜையை தொடர்ந்து முதல்கால பூஜைகள் நடந்தன.
நேற்று 2-ம் கால பூஜைகள் நடைபெற்றன. காலை 11-30 மணிக்கு எரும்பூர் கர்ணன் சித்தர் முன்னிலையில் ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள் சித்தர் பீடத்தின் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினார்.
தொடர்ந்து ஸ்ரீமீனாட்சி அம்மன் சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரர், நவபாஷணங்களான ஸ்ரீராதாகிருஷ்ணன், ஸ்ரீகுபேர பெருமாள்,ஸ்ரீபழனி முருகர் ஆகிய சிலைகள் மீதும் புனித நீர் ஊற்றப்பட்டது.
அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். பிறகு எரும்பூர் கர்ணன் சித்தர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
செங்கத்தில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாடு அதிகரிப்பை தடுக்க அதிகாரிகள் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
செங்கம்:
செங்கம் சுற்றுவட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
செங்கம் பேரூராட்சி, புதுப்பாளையம் பேரூராட்சி உள்பட செங்கம் சுற்றுவட்டார கிராம பகுதிகளிலும் பிளாஸ்டிக் கவர்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
செங்கம் மற்றும் புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் கடைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட இடங்களில் தமிழக அரசு தடை செய்துள்ள பிளாஸ்டிக் கவர்களைப் பயன்படுத்தி பார்சல் செய்து தரப்படுகிறது.
மேலும் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் சாலைகளிலும், கால்வாய்களிலும், குப்பை கழிவுகளும் போடப்படுவதால் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டு கழிவு நீர் கால்வாய்களில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பை கழிவுகளில் போடப்படும் பிளாஸ்டிக் கவர்களை கால்நடைகள் தின்று ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுகிறது.
கிராமப்பகுதிகளில் பிளாஸ்டிக் கவர்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது விவசாய நிலங்களை பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்தி தடுக்கவும் கை பைகளை பயன்படுத்த தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொது-மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆரணி நகராட்சியில் ரூ.15.85 கோடி வரி பாக்கி உள்ளது.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் நகராட்சி 33 வார்டுகள் உள்ளன கடந்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று. இதில் தி.மு.க.வை சேர்ந்த ஏ.சி.மணி என்பவர் நகரமன்ற தலைவராகவும் துணை தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த பாரிபாபு என்பவர் பொறுப்பேற்றனர்.
ஆரணி நகராட்சி முதல் கூட்டம் ஆணையர் தமிழ்செல்வி தலைமை வகித்தார் பொறியாளர் ராஜவிஜய காமராஜ் அனைவரையும் வரவேற்றார்
மேலும் கூட்டத்தில் 33 வார்டுகளில் உள்ள உறுப்பினர்கள் தங்களின் வார்டுகளில் உள்ள குறைகளை சுட்டி காட்டி அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர்.
கூட்டத்தில் நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி பேசியதாவது:-
கொரோனா காலத்தில் வரிவசூல் செய்ய முடியவில்லை தற்போது வரையில் 30சதவீதம் தான் வரி வசூல் செய்யபடுகின்றன. இதனால் ஆரணி நகராட்சி ரூ.15 கோடியே 85 லட்சம் வரி பாக்கி உள்ளது.
இதுவரையில் மின்சார வாரியத்திற்கு ரூ.4 கோடியே 50 லட்சம் கடன் உள்ளன. நகராட்சி ஊழியர்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. நகராட்சி ஓப்பந்ததாரர்களுக்கு நிலுவை தொகை வழங்க முடியவில்லை.
வருங்காலத்தில் அனைத்து நகர மன்ற உறுப்பினர்களும் ஓன்றுணைந்து வரிவசூல் செய்து நகராட்சி கடனை அடைத்து முதன்மை நகராட்சியாக மாற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதியளித்து இருப்பதால் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், போக்குவரத்து, சுகாதார வசதிகளை முழுமையாக செய்து தருவது குறித்து துறை வாரியாக ஆலோசனை நடத்தப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வரும் பக்தர்கள் ஒவ்வொரு மாத பவுர்ணமி நாட்களிலும் கிரிவலம் செல்வது வழக்கம். பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இதில் சித்ரா பவுர்ணமி வழிபாட்டுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள். வருகிற 15, 16-ந்தேதிகளில் சித்ரா பவுர்ணமி நடைபெறுகிறது.
இதனையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆலோசனை கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதியளித்து இருப்பதால் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், போக்குவரத்து, சுகாதார வசதிகளை முழுமையாக செய்து தருவது குறித்து துறை வாரியாக ஆலோசனை நடத்தப்பட்டது.
சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு சுமார் 15 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை அனைத்து துறையினரும் செய்து தர ஏற்பாடு செய்ய வேண்டும். நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க வேண்டும்.
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தேவையான எண்ணிக்கையில் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும். பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதியை நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஒருங்கிணைந்து செய்ய வேண்டும். நகரின் முக்கிய இடங்கள் மற்றும் கிரிவலப் பாதையில் முதலுதவி சிகிச்சை மையங்களை அமைக்க வேண்டும்.
தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வரிசையை முறைப்படுத்தி நெரிசல் ஏற்படாமல் தரிசனம் செய்ய அனுப்ப வேண்டும். கொரோனா தொற்று முற்றிலுமாக குறையவில்லை. கட்டுப்பாடுகள் மட்டுமே தளர்த்தப்பட்டுள்ளது. எனவே பக்தர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி முககவசம் அணியவும், நெரிசலை தவிர்க்கவும் வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆன்மீக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் சார்பில் அன்னதானம் வழங்க 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இடத்தில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும்.
அன்னதானம் வழங்குபவர்கள் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் வரும் 14-ந்தேதிக்குள் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.
அனுமதிக்கப்படாத இடத்தில் அன்னதானம் வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்...திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவிலில் தோஷங்கள் விலக பரிகார பூஜை
இதில் சித்ரா பவுர்ணமி வழிபாட்டுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள். வருகிற 15, 16-ந்தேதிகளில் சித்ரா பவுர்ணமி நடைபெறுகிறது.
இதனையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆலோசனை கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதியளித்து இருப்பதால் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், போக்குவரத்து, சுகாதார வசதிகளை முழுமையாக செய்து தருவது குறித்து துறை வாரியாக ஆலோசனை நடத்தப்பட்டது.
சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு சுமார் 15 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை அனைத்து துறையினரும் செய்து தர ஏற்பாடு செய்ய வேண்டும். நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க வேண்டும்.
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தேவையான எண்ணிக்கையில் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும். பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதியை நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஒருங்கிணைந்து செய்ய வேண்டும். நகரின் முக்கிய இடங்கள் மற்றும் கிரிவலப் பாதையில் முதலுதவி சிகிச்சை மையங்களை அமைக்க வேண்டும்.
தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வரிசையை முறைப்படுத்தி நெரிசல் ஏற்படாமல் தரிசனம் செய்ய அனுப்ப வேண்டும். கொரோனா தொற்று முற்றிலுமாக குறையவில்லை. கட்டுப்பாடுகள் மட்டுமே தளர்த்தப்பட்டுள்ளது. எனவே பக்தர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி முககவசம் அணியவும், நெரிசலை தவிர்க்கவும் வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆன்மீக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் சார்பில் அன்னதானம் வழங்க 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இடத்தில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும்.
அன்னதானம் வழங்குபவர்கள் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் வரும் 14-ந்தேதிக்குள் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.
அனுமதிக்கப்படாத இடத்தில் அன்னதானம் வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்...திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவிலில் தோஷங்கள் விலக பரிகார பூஜை
ஜோலார்பேட்டையில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் 11 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட் டத்தில் ஜோலார்பேட்டை ஏலகிரி மலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து, இடி மின்னல் சூறைக்காற்றுடன் நேற்று மாலை 3 மணியளவில் ஆலங்கட்டி மழை பெய்தது.
இதனால் கடும் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து சாய்ந்து விழுந்தது. இந்நிலையில் ஜோலார் பேட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளம் அருகாமையில் இருந்த மரம் ஒன்று சூறைக்காற்றால் திடீரென முறிந்து தண்டவாள பகுதியில் விழுந்தது.
இதனால் நேற்று மாலை சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் 4.35 மணிக்கு ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வந்து நின்றது.
பின்னர் தண்டவாள பகுதியில் முறிந்து விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு ஒரு மணி நேரம் போராடி அகற்றினர்.
அதன்பிறகு வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் மங்களூர் நோக்கி ஜோலார்பேட்டையில் இருந்து 5.35 மணிக்கு புறப்பட்டு சென்றது.
இதனால் ரெயில் பயணிகள் உரிய நேரத்திற்கு தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் கடும் அவதிக் குள்ளாகினர். மேலும் இந்த ஒரு மணி நேரத்தில் ஜோலார்பேட்டை மார்க்கமாக வேறு எந்த ரெயிலும் வராததால் ரெயில் போக்குவரத்து பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
மேலும் ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலும் உள்ள கடைகளிலும் மேற்கூரைகள் காற்றில் பறந்து சாலையோரம் விழுந்தது. ஜோலார்பேட்டை ஜங்ஷன், பஸ் நிறுத்தம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பலத்த காற்று வீசியதால் மேற்கூரைகள் பெயர்ந்து கிழே விழுந்தது.
மேலும் 2 பைக் நிறுத்தும் இடம் அருகே மரம் அடியோடு சாய்ந்து விழுந்ததில் சில வாகனங்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்டது. அருகில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதனால் ஜோலார் பேட்டை பகுதியில் நேற்று மாலை 3 மணி முதல் இன்று அதிகாலை 2 மணியளவில் வரை மின்சாரம் தடைபட்டது இதனால் தொடர்ந்து 11 மணிநேரத்திற்கு மேல் மின்சாரம் தடைபட்டது ஜோலார்பேட்டை பகுதி இருளில் மூழ்கியது இதனால் பொதுமக்கள் மின்சாரம் இன்றி மிகவும் அவதிப் பட்டனர்.
செங்கம் அருகே தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
செங்கம்:
செங்கம் நகரில் நேற்று காலை பழைய பஸ் நிலையம் அருகே சரக்கு ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரியின் முன்பக்கம் உருக்குலைந்து லாரியிலிருந்து ஆயில் உள்ளிட்டவைகள் சாலையில் வழிந்தோடியது. இந்த விபத்தினால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போலீசார் லாரியை கிரேன் எந்திரம் மூலம் மீட்டு கொண்டு சென்றனர். நேற்று முகூர்த்த நாள் என்பதால் பொதுமக்கள் சுப விசேஷங்களுக்கு செல்ல சாலையில் சென்ற வண்ணம் இருந்ததால் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் போன்ற ஊர்திகள் செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது.
எனவே சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரை அகற்றி சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்தி சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலையில் போலீசார் பயிற்சி செய்ய நவீன உடற்பயிற்சி கூடத்தை கலெக்டர் முருகேஷ் திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் அமைந்துள்ள ஆயுதப்படை அலுவலகத்தில் புதிதாக காவலர்களுக்கான உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
அதனை கலெக்டர் முருகேஷ் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அங்குள்ள நவீன உடற்பயிற்சி கருவிகளில் கலெக்டர் முருகேஷ் உடற்பயிற்சி செய்தார்.
அவர் பேசும்போது, போலீசார் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் வலுவுடனும் இருக்க வேண்டியது அவசியம். அதற்கு அவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
அவர்கள் தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் நவீன கருவிகளுடன் இந்த உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப் பட்டுள்ளது.இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார் ரெட்டி மற்றும் கூடுதல் கலெக்டர் பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, டாக்டர் கம்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் ரூ.41.74 கோடியில் புதிய மேம்பாலம் திறக்கப்பட்டது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையின் மையப் பகுதியில் திண்டிவனம் சாலையில் ரெயில்வே கேட்டில் மேம்பாலம் இல்லாமல் பொதுமக்கள் படாதபாடு பட்டனர்.இந்த நிலையில் புதிய மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.ரூ.41.74 கோடி செலவில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது .இதனை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இச்சாலை மேம்பாலத்தால் , திருவண்ணாமலையில் இருந்து புதுச்சேரி , திண்டிவனம் , விழுப்புரம் , திருக்கோவிலூர் .செஞ்சி , சென்னை செல்லும் அனைத்து வாகனங்களும் புதுச்சேரி , திண்டிவனம் , விழுப்புரம் , திருக்கோவிலூர், செஞ்சியிலிருந்து திருவண்ணாமலை , கிருஷ்ணகிரி பெங்களூர் செல்லும் அனைத்து வாகனங்களும் பயன் அடையும்.
மேலும் , நாட்டின் பிற பகுதியிலிருந்து அண்ணாமலையார் கோவிலுக்கு வருடம் முழுவதும் பக்தர்கள் வருவதாலும் , பவுணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவதால் இச்சாலை மேம்பாலம் மிகவும் பயனுள்ளதாக அமையும் , மேலும் அலுவலகம் செல்லும் மக்கள் . கல்லூரி மற்றும் பள்ளி மாணவ , மாணவியர் இந்த சாலை மேம்பாலத்தை பயன்படுத்தி பயனடைவார்கள் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆரணியில் கஞ்சா வியாபாரி 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பையூர், சேவூர், வடுகசாத்து, சந்தவாசல், நடுக்குப்பம், கண்ணமங்கலம், கொங்கராம்பட்டு, காட்டுகாநல்லூர், ஒண்ணுபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை படுஜோராக நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில் கஞ்சா புகைப்பது எப்படி என்று வீடியோ பதிவு செய்து சமூக வளைதலங்களில் வைரலாக பரவி வந்தது. இதனை பார்த்து போலீசார் அதிர்ச்சிய டைந்தனர்.
இதனையடுத்து ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ஆரணி டவுன் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் தலைமையிலான போலீசார் ஆரணி டவுன் அருணகிரிசத்திரம் பையூர் குன்னத்தூர் பகுதியில் சோதனை நடத்தி 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 350 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.
திரக்கோவில் கிராமத்தில் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அருகே உள்ள திரக்கோவில் கிராமத்தில் உள்ள அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் அலர்மேல்மங்கை தாயார் ஆண்டாள் தாயார் பக்த ஆஞ்சநேயர் சக்கரத்தாழ்வார் ஆகிய கோவில்கள் புதுப்பிக்கப் பட்டு பஞ்ச வர்ணம் பூசி இதன் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
கோவிலின் முன்பு யாகசாலை அமைத்து 108 கலசம் வைத்து பல்வேறு நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கலசத்தை வைத்து 7 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு நெய் பழங்கள் மற்றும் பல்வேறு மூலிகைகள் மூலம் கோபூஜை நாடி சந்தனம் அங்குர்பணம் தம்பதி பூஜை உள்பட 3 கால பூஜைகள் செய்யப்பட்டது.
மேளதாளத்துடன் புனிதநீர் கலசத்தை கோவிலை சுற்றி வந்து அலர்மேல் மங்கை சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் அலர்மேல் மங்கை தாயார் ஆண்டாள் தாயார் பக்த ஆஞ்சநேயர் சக்கரத்தாழ்வார் ஆகிய கோவில் விமான கோபுரங்கள் மீது உள்ள கலசத்தின் மீது புனித நீரை ஊற்றினார்.
பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீரைத் தெளித்தனர் பின்னர் சூரியபகவானுக்கு கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் சுற்றுப்புற கிராமங்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
இதழியலாளர்கள் “கலைஞர் எழுதுகோல்” விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக கலெக்டர் முருகேஷ் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3-ந் தேதி ஒரு சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கிக் கவுரவிக்கப்படும் என்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி 2021-ம் ஆண்டுக்கான இவ்விருதுக்கான விண்ணப் பங்கள் வரவேற்கப் படுகின்றன. இவ்விருதுடன் ரூ.5 லட்சம் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த விருதுக்கான விண்ணப் பதாரர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவராகவும், தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் தொடர்ந்து 10 ஆண்டுகள் பணிபுரிந்தவராகவும் இருக்க வேண்டும்.
பத்திரிகை பணியை முழுநேரப் பணியாக கொண்டிருக்க வேண்டும்.இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பங்காற்றி இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் எழுத்துக்கள் பொதுமக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.விண்ணப்பதாரர் நேரடியாகவோ, மற்றொரு வரின் பரிந்துரையின் அடிப்படையிலோ, பணிபுரியும் நிறுவனத்தின் பரிந்துரையிலோ விண்ணப் பங்களை அனுப்பலாம்.
இதற்காக அரசால் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.
தகுதி கொண்ட விண்ணப்பங்கள் விரிவான விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங் களுடன் இயக்குனர், செய்தி மக்கள் தொடர்பு துறை, தலைமைச் செயலகம், சென்னை -600009 என்ற முகவரிக்கு வருகிற 30.4.2002 &க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






