search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணி உடனே நிறைவேற்றப்படாவிட்டால் 12-ந் தேதி போராட்டம் - பா.ஜ.க. விவசாய அணி தலைவர் அறிவிப்பு
    X

    கோப்புபடம்.

    அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணி உடனே நிறைவேற்றப்படாவிட்டால் 12-ந் தேதி போராட்டம் - பா.ஜ.க. விவசாய அணி தலைவர் அறிவிப்பு

    • அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிகள் அ.தி.மு.க. ஆட்சியில் 2019 டிசம்பா் மாதம் தொடங்கப்பட்டது.
    • தி.மு.க. ஆட்சியில் இப்பணிகள் தொய்வு பெற்று, 3.5 சதவீத பணிகள் நிலுவையில் உள்ளது.

    அவிநாசி :

    அத்திக்கடவு திட்ட போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் அவிநாசியில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக விவசாய அணி மாநிலத் தலைவா் ஜி.கே.நாகராஜ், நிருபர்களிடம் கூறியதாவது:-

    அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிகள் அ.தி.மு.க. ஆட்சியில் 2019 டிசம்பா் மாதம் தொடங்கப்பட்டது. 2021 ஜனவரியில் நிறைவு பெற வேண்டிய நிலையில் 96.5 சதவீத பணிகள் மட்டும் நிறைவு பெற்றுள்ளன. தி.மு.க. ஆட்சியில் இப்பணிகள் தொய்வு பெற்று, 3.5 சதவீத பணிகள் நிலுவையில் உள்ளது. வரும் பருவ காலத்துக்குள் திட்டம் நிறைவேற்றப்பட்டால் உரிய பயனடையலாம். இல்லாவிட்டால் வறட்சியை சந்திக்கக் கூடும்.

    போதுமான நிதியும் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் வெறும் 4 கி.மீ தொலைவுக்கு முள்ளம்பட்டி, நல்லகவுண்டம்பாளையம், காளிங்கராயன்பாளையம் நில உரிமையாளா்களுக்கு நிதி வழங்க அரசாணை வெளியிடாததால் கடந்த 3 மாத காலமாக பணி தடைபட்டு நிற்கிறது. மேலும் விடுபட்டுள்ள 800 குட்டைகளை விரைவில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே, நில உரிமையாளா்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகைக்கான அரசாணையை வெளியிடாவிட்டால் ஆகஸ்ட் 12ந்தேதி அவிநாசியில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக முடிவு செய்துள்ளோம் என்றாா்.

    Next Story
    ×