search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில் மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கொள்ளை
    X

    கோப்புபடம்.

    பல்லடத்தில் மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கொள்ளை

    • வீட்டின் கதவை சாத்திவிட்டு நாற்காலியில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.
    • பயந்து போன மூதாட்டி பீரோவை காட்டியுள்ளார்.

    பல்லடம் :

    பல்லடம்,மங்கலம் ரோடு காமராஜர் நகரை சேர்ந்த சண்முகசுந்தரத்தின் மனைவி வாணி (வயது 56). இவர் தனது மகன் மணிக்குமாருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில்நேற்று மணிக்குமார் வேலைக்கு சென்று விட்டார் .அப்போது வீட்டில் வாணி மட்டும் தனியாக இருந்துள்ளார். வீட்டின் கதவை சாத்திவிட்டு நாற்காலியில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த 30 வயது மதிக்கதக்க மர்ம நபர் வாணியை கத்தியை காட்டி மிரட்டி பணம் எங்கே வைத்துள்ளாய் என்று மிரட்டி கேட்டுள்ளார். இதனால் பயந்து போன வாணி பீரோவை காட்டியுள்ளார்.

    பீரோவை திறந்து அதில் இருந்த ரூ. 90 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு அந்த மர்மநபர் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார். இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த வாணி மயக்கம் அடைந்து விட்டார். மாலை வீடு திரும்பிய மணிக்குமாரிடம் சம்பவம் பற்றி வாணி தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பல்லடம் போலீசில் வாணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். பல்லடம் அருகே உள்ள க. அய்யம்பாளையத்தில் வேளாங்கண்ணியை சேர்ந்த மாரியப்பன் (வயது 46) என்பவர் குடும்பத்துடன் வசித்துக்கொண்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.இந்த நிலையில் அவரது உறவினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள கடந்த 4 நாட்களுக்கு முன் குடும்பத்துடன் வேளாங்கண்ணி சென்று உள்ளார்.திருமண நிகழ்ச்சி முடிந்து அவர்கள் நேற்று வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    வீட்டில் உள்ளே சென்று பீரோவை பார்த்தபோது அதில் வைத்து இருந்த ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் 7 கிராம் தங்ககம்மல் திருட்டுப் போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பல்லடம் போலீசில் மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×