என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
சேவூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2பேர் கைது
- அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் சாவக்கட்டுப்பாளையத்தில் உள்ள மளிகைக் கடையில் சோதனையில் ஈடுபட்டனா்.
- சிவகங்கையை சோ்ந்த நடராஜன் (60) என்பவரை போலீசார் கைது செய்தனா்.
அவினாசி:
சேவூா் அருகே சாவக்கட்டுப்பாளையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சேவூா் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் சாவக்கட்டுப்பாளையத்தில் உள்ள மளிகைக் கடையில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனா்.
இதைத்தொடா்ந்து கடை உரிமையாளரான மோ்வின் (வயது 40) என்பவரை கைது செய்தனா். இதே போல சேவூா் கைகாட்டி பெட்டிக் கடையில் பதுக்கி வைத்திருந்த புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனா். மேலும் இது தொடா்பாக சிவகங்கையை சோ்ந்த நடராஜன் (60) என்பவரை போலீசார் கைது செய்தனா்.
Next Story






