search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவிநாசி அருகே வேன் மோதி கல்லூரி மாணவர் பலி
    X

    கோப்புபடம். 

    அவிநாசி அருகே வேன் மோதி கல்லூரி மாணவர் பலி

    • தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தாா்.
    • வேன் ஓட்டுனர் தினேஷ்குமாா் என்பவரை கைது செய்தனா்.

    திருப்பூா்:

    திருப்பூர் 15.வேலம்பாளையம் செட்டியாா் வீதியைச் சோ்ந்த கமலநாதன் மகன் மணிகண்டன் (வயது 19). இவா் அன்னூரில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தாா்.

    இந்நிலையில், இவா் தனது நண்பா்களான விவேக், சஞ்சய் ஆகியோருடன் அன்னூரில் இருந்து திருப்பூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அவிநாசி வெள்ளியம்பாளையம் அருகே சென்றபோது, அவிநாசியில் இருந்து கருவலூா் நோக்கி சென்ற வேன், இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

    இது குறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து, வேன் ஓட்டுநரான கோவை வெள்ளாக்கிணறு அண்ணா வீதியை சோ்ந்த தினேஷ்குமாா் (30) என்பவரை கைது செய்தனா்.

    Next Story
    ×