search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடுகள்தோறும் தேசிய கொடி - விழிப்புணர்வு ஏற்படுத்த நூலகங்களுக்கு அறிவுறுத்தல்
    X

    கோப்புபடம்.

    வீடுகள்தோறும் தேசிய கொடி - விழிப்புணர்வு ஏற்படுத்த நூலகங்களுக்கு அறிவுறுத்தல்

    • 13ந் தேதி முதல் 15 ந் தேதி வரை,நூலகங்களில், தேசியக்கொடி ஏற்ற வேண்டும்.
    • தேசியக்கொடி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.

    திருப்பூர் :

    சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி, வீடுதோறும் தேசியக்கொடி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த, நூலகர்களுக்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.இது குறித்து, மாவட்ட நூலக ஆணைக்குழு வாயிலாக நூலகர்களுக்கு அனுப்பியுள்ள வழிகாட்டுதல்கள் வருமாறு:-

    சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் வரும் 13ந் தேதி முதல் 15 ந் தேதி வரை,நூலகங்களில், தேசியக்கொடி ஏற்ற வேண்டும்.தேசியக்கொடி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். அதற்காக, ஊராட்சித்தலைவர்களுடன் திட்டம் குறித்த ஆலோசனை நடத்தி சிறப்பு கூட்டங்கள் வாயிலாக அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி திட்டத்தை விளக்க வேண்டும்.நூலகப்பணியாளர்கள், நூலகத்திலும், வீடுகளிலும், தேசியக்கொடி ஏற்றி, அதன் விபரங்களை,நூலக ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும். வாசகர் வட்டம் வாயிலாக தேசியக்கொடி திட்டத்தை விளக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×