search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி - தி.மு.க.வினர் கொண்டாட்டம்
    X

    தி.மு.க.வினர் இனிப்பு வழங்கிய காட்சி.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி - தி.மு.க.வினர் கொண்டாட்டம்

    • வார்டு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
    • நிர்வாகிகள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து திருப்பூர் 22-வது வட்ட தி.மு.க. மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் வார்டு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் ராஜ்குமார், முன்னாள் பகுதி செயலாளர் செல்வராஜ், மாநகர பொறுப்பாளர்கள் சரவணகுமார், திராவிட பாலு, பகுதி பொறுப்பாளர் குப்புசாமி, காங்கிரஸ் வார்டு தலைவர் நடராஜ், கொங்குநாடு தேசிய முற்போக்குகழகத்தின் பொறுப்பாளர்கள் மாடிகோவில் செல்வகுமார், சி.பி.ஐ.செயலாளர் சின்னச்சாமி, சி.பி.எம். பொறுப்பாளர் சுப்பிரமணி, ம.தி.மு.க. செயலாளர் ராஜமாணிக்கம், தொ.மு.ச. தங்கராஜ் உள்பட கூட்டணி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×