அ.தி.மு.க.வினர் வீடுகளில் தேசிய கொடியை பறக்க விட வேண்டும் - பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., அறிக்கை

சனிக்கிழமை முதல் வருகிற 15-ந் தேதி வரை அவரவர் இல்லத்தில் தேசிய கொடி பறக்கவிட வேண்டும். இரவில் தேசிய கொடி இறக்க தேவையில்லை.
பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., 
பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., 
Published on

திருப்பூர் :

அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தினம் வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 15-ந் தேதி வரை அவரவர் இல்லத்தில் தேசிய கொடி பறக்கவிட வேண்டும்.

திருப்பூர் மாநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட அமைப்பு செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி.,எம்.எல்.ஏ.க்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, சார்பு அணி செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி, நகர, ஒன்றிய, பேரூராட்சி, வார்டு, ஊராட்சி மற்றும் கிளை செயலாளர்கள், மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், வழக்கறிஞர் பிரிவு, இளைஞர், இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்கத்தினர், அவரவர் வீடுகளிலும், வாகனங்களிலும் தேசிய கொடியை பறக்க விட்டு நாட்டு பற்றையும், தேச ஒற்றுமையையும் வளர்க்க வேண்டும்.

தேசிய கொடியை நாளை முதல் வருகிற 15-ந் தேதி வரை இரவில் இறக்க தேவையில்லை. பறந்தவாறே இருக்கட்டும் என்று அதற்கேற்றவாறு விதிகள் திருத்தப்பட்டுள்ளன.இவ்வாறு அந்த அறிக்கயில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com