search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசியில் வாக்காளர்கள் திடீர் போராட்டம் - பரபரப்பு
    X

    கோப்புபடம்.

    அவினாசியில் வாக்காளர்கள் திடீர் போராட்டம் - பரபரப்பு

    • 8 பெயர்கள் விடுபட்டுள்ளதாக அப்பகுதி வாக்காளர்கள் அதிகாரிகளுடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • உரிய ஆவணம் இருந்தும் இப்போது மட்டும் எங்களை வாக்களிக்க அனுமதிக்காததை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டத்தில் கைரேகை பயன்படுத்தி ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதில் முதியோர் உள்ளிட்ட மாற்றுதிறனாளிகளுக்கு கைரேகை பதிவாகாமல் ரேஷன் பொருட்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே அவர்கள் பயன்பெறும் வகையில் அவினாசி தாலுகா அலுவலகத்தில் ஆதார் பதிவில் கைரேகை புதுப்பித்தல் சிறப்பு முகாம் நடந்தது. இதில் முதியோர் உள்ளிட்டநூற்றுக்கு மேற்பட்டவர்கள் காலை 8 மணி முதல் ஆதார் சேவை மையத்தில் காத்திருந்தனர். 10.30 மணி அளவில அலுவலர் வந்து 60 நபர்களுக்கு மட்டுமே இன்று பதிவு செய்யப்படும் என்றதால் பயனாளிகள் அனைவரும் நாங்கள் காலை 8 மணிமுதல் இதற்காக காத்து நிற்கிறோம். அனைவருக்கும் இன்றே பதிவு செய்ய வேண்டும் என்று அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ஆதார் பதிவு அலுவலர் கூறுகையில் ,ஒரு நபருக்கு முழுமையாக பதிவு செய்வதற்கு 20 நிமிடங்கள் ஆகிறது.

    இரவு 8 மணி வரை எவ்வளவு பேருக்கு பதிவு செய்ய முடியுமோ அதை செய்யஉள்ளதாக கூறினார்.

    Next Story
    ×