search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராதாபுரத்தில் இன்று லாரி டயரில் சிக்கி ஆசிரியை பலி
    X

    விபத்து ஏற்படுத்திய லாரி.

    ராதாபுரத்தில் இன்று லாரி டயரில் சிக்கி ஆசிரியை பலி

    • தடுமாறி விழுந்த அந்த பெண் மீது லாரி டயர் ஏறியது.
    • உயிரிழந்த பெண் ரம்மதபுரத்தை சேர்ந்த மாதவி என்பது விசாரணையில் தெரியவந்தது.

    நெல்லை:

    ராதாபுரம் அருகே சீலாத்திகுளத்தில் இருந்து முடவன்குளத்திற்கு செல்லும் சாலையில் இன்று காலை கனரக வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. எதிரே ஒரு பெண் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக லாரியின் பின்பக்க டயரில் மொபட் சிக்கியது.

    இதில் தடுமாறி விழுந்த அந்த பெண் மீது லாரி டயர் ஏறியது. இதனால் சம்பவ இடத்திலேயே அந்த பெண் ரத்த வெள்ளத்தில் பலியானார். உடனே லாரி டிரைவர் அங்கேயே லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    தகவல் அறிந்த ராதாபுரம் போலீசார் அங்கு விரைந்த சென்றனர். விபத்தில் சிக்கி இறந்த பெண் யார் என்று விசாரணை நடத்தியதில், அவர் திசையன்விளை அருகே உள்ள ரம்மதபுரத்தை சேர்ந்த மாதவி(வயது 45) என்பதும், அவர் தெற்கு கள்ளிகுளம் அருகே ஆறுபுளியில் ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ராதாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×