என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![தக்கலை அருகே வாகனம் மோதி ஆற்றில் விழுந்த வாலிபர் மரணம் தக்கலை அருகே வாகனம் மோதி ஆற்றில் விழுந்த வாலிபர் மரணம்](https://media.maalaimalar.com/h-upload/2023/09/03/1943394-500x3001918861-deadd.webp)
கோப்பு படம்.
தக்கலை அருகே வாகனம் மோதி ஆற்றில் விழுந்த வாலிபர் மரணம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மனைவி ரம்யா கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பலியான மரியசிபுவுக்கு ரம்யா என்ற மனைவியும் 3 வயதில் மகன் மற்றும் 6 மாத மகள் உள்ளனர்.
தக்கலை:
தக்கலையை அடுத்த மணக்காவிளை அருகே உள்ள வெள்ளை பாறையடிவிளை பகுதியைச் சேர்ந்தவர் மரியசிபு (வயது 32), கட்டிட தொழிலாளி.
இவர் நேற்று இரவு தக்கலையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். கொற்றியோடு பகுதியில் இரவு 10 மணிக்கு வந்த போது அவரது மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதாக தெரிகிறது.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது, மோட்டார் சைக்கிள் மட்டும் அங்கு கிடந்துள்ளது. மரியசிபுவை காணவில்லை. அவரை தேடிப்பார்த்தும் பலன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இன்று காலை விபத்து நடந்த இடத்தின் அருகே உள்ள ஆற்றில் மரியசிபு பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதனை பார்த்தவர்கள் உடலை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி ரம்யா கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரியசிபு மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியதில் அவர் ஆற்றுக்குள் தூக்கி வீசப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இருப்பினும் அவரது சாவு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான மரியசிபுவுக்கு ரம்யா என்ற மனைவியும் 3 வயதில் மகன் மற்றும் 6 மாத மகள் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)