என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இந்தியா கூட்டணி வெற்றி கூட்டணி
- மேயர் மகேஷ் அவர்கள் கலந்து கொண்டு கை சின்னத்திற்கு வாக்குகளை சேகரிக்க ஆலோசனைகள் வழங்கினார்.
- இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் MDB திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர், குமரி மக்களின் நம்பிக்கை நட்சத்திரம், குமரியின் வளர்ச்சி நாயகன், விஜய்வசந்த் அவர்களுக்கு ஆதரவு திரட்டும் பொருட்டு, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நாகர்கோவில், கோட்டார் MDB திருமண மண்டபத்தில் மாலை 07.00 மணிக்கு நடைப்பெற்றது.
சிறப்பு விருந்தினராக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் வணக்கத்துக்குரிய மேயர் மகேஷ் கலந்து கொண்டு கை சின்னத்திற்கு வாக்குகளை சேகரிக்க ஆலோசனைகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவல்ல பிரசாத் அவர்கள், மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமின் அன்சாரி அவர்கள், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பார்வையாளர் ராமசுப்பு அவர்கள், காங்கிரஸ் கமிட்டி நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் அவர்கள், திமுக மாநில மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், கம்யூனி்ஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செல்லசாமி, மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல், காங்கிரஸ் கமிட்டி முன்னாள் குமரி கிழக்கு மாவட்ட தலைவர், இராதாகிருஷ்ணன், மற்றும் மாநகர செயலாளர் மற்றும் நாகர்கோவில் தொகுதி தேர்தல் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், மாவட்ட துணை அமைப்பாளர் சரவணன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் அல்.காலித், இராஜாக்கமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சற்குரு கண்ணன், மாவட்ட இந்து சமய அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் திமுகழக நிர்வாகிகள், காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள், இந்தியா கூட்டணி கட்சிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, மக்கள் நீதி மையம், மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்