என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரூ.200 கடனை திருப்பி தராததால் தொழிலாளியை அடித்துக் கொன்ற நண்பர்
- மாரிமுத்துவுடன் வேலை பார்த்த சாத்தான்குளத்தை சேர்ந்த சாலமோன் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
- ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் சுங்கான் கடையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்தவர் மாரிமுத்து (வயது 33).
விருதுநகரைச் சேர்ந்த இவர், இங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாரிமுத்து திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அவரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாரிமுத்து பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர் மது குடித்ததில் கீழே விழுந்ததாகவும் அதனால் தான் இறந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக மாரிமுத்து உடலில் காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதனால் தாக்குதலில் தான் அவர் இறந்திருக்கலாம் என போலீசார் கருதினர். அதன்அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் மாரிமுத்துவுடன் வேலை பார்த்த சாத்தான்குளத்தை சேர்ந்த சாலமோன் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தியபோது, முன்னுக்குப்பின் முரணாக பேசிய அவர், பின்னர் தான் தாக்கியதில் தான் மாரிமுத்து கீழே விழுந்ததாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் சாலமோனை கைது செய்தனர். பின்னர் அவர் போலீசாரிடம் கூறியதாவது:-
நானும் மாரிமுத்துவும் மது அருந்தியபோது அவர் என்னிடம் ரூ.200 கடன் வாங்கினார். நீண்ட நாட்களாகியும் அதனை அவர் திருப்பித் தரவில்லை. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
சம்பவத்தன்று மது அருந்தும் போதும் கடனை கேட்டேன். இதுதொடர்பாக இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நான், மாரி முத்துவை கீழே தள்ளிவிட்டேன். இதில் அவர் காயம் அடைந்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இறந்து விட்டார்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து போலீசார் சாலமோனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்