search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதல் திருமணம் செய்த வாலிபர் வெட்டிக்கொலை
    X

    காதல் திருமணம் செய்த வாலிபர் வெட்டிக்கொலை

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினையில் எங்களது வீட்டிற்கு வந்திருந்தார்.
    • அக்காள் கணவரை 15 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் மார்த்தாண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பாகோடு மாணிக்கவிளை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் விஜூ (வயது 24). இவர் அதே பகுதியை சேர்ந்த சவுமியா என்பவரை கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு ஆட்ஷிக் என்ற 11 மாத ஆண் குழந்தை உள்ளது. விஜூ தினமும் குடித்துவிட்டு வந்து சவுமியாவிடம் தகராறு செய்து வந்தார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சவுமியா கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.

    அங்கு அவரது குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதனை அறிந்த விஜூ, குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்காக மனைவி சவுமியா வீட்டுக்கு சென்றார். அப்போது குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முயன்றபோது சவுமியாவும் வருவதாக கூறினார்.

    அப்போதும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து விஜூ குழந்தையை தனது சகோதரர் சிஜினுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவமனைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்தபோது சவுமியா மீண்டும் கணவனிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது வீட்டில் இருந்த சவுமியாவின் 15 வயது சகோதரர் திடீரென வெட்டுக் கத்தியால் விஜூவை சரமாரியாக வெட்டினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் இருந்த விஜூவை மீட்டு சிஜின் 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு விஜூ நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிஜின் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் சவுமியாவின் 15 வயது சகோதரர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தியபோது, தனது சகோதரி சவுமியாவை விஜூ காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்தார். இது குறித்து எனது சகோதரி எனது குடும்பத்தினரிடம் கூறி கதறி அழுதார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினையில் எங்களது வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று எங்கள் வீட்டில் வைத்து தகராறு செய்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. வீட்டில் இருந்து வெட்டுக்கத்தியை எடுத்து விஜூவை வெட்டினேன் என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். அக்காள் கணவரை 15 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் மார்த்தாண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×