என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவிலில் கும்பிடு போட்டு நகை, பணம் திருடிய ஆசாமி- சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
- ஒரு மர்மநபர் காலை 4.45 மணியளவில் கோவில் உட்பிரகாரத்தை சுற்றி வரும் காட்சி கேமிராவில் பதிவாகி இருந்தது.
- அக்கம் பக்கத்தில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த அந்த ஆசாமி கோவில் கதவை திறந்து உள்ளே புகுந்தார்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மீனாட்சிபுரத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரி வழக்கம்போல் காலையில் நடைதிறந்து பூஜைகள் செய்ய வந்தார். அப்போது கருவறையில் அம்மனின் கழுத்தில் இருந்த தங்க நகை மற்றும் பூஜை தட்டில் இருந்த பணம் ஆகியவை திருடு போயிருந்தது. இதைப்பார்த்த பூசாரி அதிர்ச்சியடைந்து கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தார்.
அதில் ஒரு மர்மநபர் காலை 4.45 மணியளவில் கோவில் உட்பிரகாரத்தை சுற்றி வரும் காட்சி பதிவாகி இருந்தது. பின்னர் அக்கம் பக்கத்தில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த அந்த ஆசாமி கோவில் கதவை திறந்து உள்ளே புகுந்தார். பயபக்தியுடன் சாமி கும்பிட்டு விட்டு அம்மனின் கழுத்தில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிக்கொண்டு தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டார்.
இந்த காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்