என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கூத்தாநல்லூரில் தி.மு.க. பிரமுகரை அரிவாளை காட்டி மிரட்டிய பெண் கவுன்சிலரின் கணவர் கைது
- அனஸ் மைதீனும், முத்துகிருஷ்ணனும் இணையவழி குரூப் ஒன்றில் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி பதிவிட்டு வந்துள்ளனர்.
- முத்துகிருஷ்ணன் மீது கூத்தாநல்லூர் போலீசில் அனஸ் மைதீன் புகார் கொடுத்தார்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மஜ்ஜியா தெருவை சேர்ந்தவர் அனஸ் மைதீன் (வயது 52). தி.மு.க. பிரமுகர். கூத்தாநல்லூர் குனுக்கடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(45). இவர், கூத்தாநல்லூர் நகராட்சி 17-வது வார்டு கவுன்சிலர் பிரவிணாவின் கணவர் ஆவார்.
அனஸ் மைதீனும், முத்துகிருஷ்ணனும் இணையவழி குரூப் ஒன்றில் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி பதிவிட்டு வந்துள்ளனர். இதுகுறித்து முத்துகிருஷ்ணன் மீது கூத்தாநல்லூர் போலீசில் அனஸ் மைதீன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
ஆனாலும் முத்துகிருஷ்ணன் தொடர்ந்து இணையவழி குரூப்பில் அனஸ் மைதீன் குறித்து பதிவிட்டு வந்ததாகவும், பதிலுக்கு அனஸ் மைதீனும் பதிவிட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் கூத்தாநல்லூரில் உள்ள தி.மு.க. அலுவலகத்திற்கு முத்துகிருஷ்ணன் கையில் அரிவாளுடன் சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த அனஸ் மைதீனை, முத்துகிருஷ்ணன் அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார்.
இதனை பார்த்த மற்ற தி.மு.க. பிரமுகர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர். பின்னர் முத்துகிருஷ்ணன் தனது மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து சென்று விட்டார். இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசில் அனஸ் மைதீன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்