search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவர்னரிடம் பேசியது என்ன? எடப்பாடி பழனிசாமி விளக்கம்
    X

    கவர்னரிடம் பேசியது என்ன? எடப்பாடி பழனிசாமி விளக்கம்

    • தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது.
    • வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை.

    சென்னை :

    தி.மு.க. ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. வினர் புகார் மனு அளித்தனர். சைதாப்பேட்டை சின்னமலையில் இருந்து பேரணியாக சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை எடப்பாடி பழனிசாமி தலைமையில் 9 பேர் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

    பல்லாயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் பேரணியில் பங்கேற்றதால் கிண்டி முதல் அண்ணாசாலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இந்நிலையில், கவர்னரை சந்தித்த பின் வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    * தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது.

    * சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்து ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ளோம்.

    * 2 ஆண்டு கால தி.மு.க. அரசின் ஊழல் குறித்தும் புகார் கொடுத்துள்ளோம்

    * எங்கள் புகார் மனுவை பரிசீலிப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

    * விஷ சாராயா மரணம் விவகாரத்தில் உரிய நடவடிக்கை தேவை.

    * உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் விஷ சாராய மரணங்களை தடுத்து இருக்கலாம்.

    * அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராய மரணங்கள் ஏதும் நிகழவில்லை.

    * உரிய அனுமதியின்றி சட்ட விரோதமாக மதுபான பார்கள் செயல்பட்டு வருகின்றன.

    * வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    Next Story
    ×