search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க- பா.ஜ.க. இடையே முரண்பாடு இல்லை: செங்கோட்டையன் பேட்டி
    X

    அ.தி.மு.க- பா.ஜ.க. இடையே முரண்பாடு இல்லை: செங்கோட்டையன் பேட்டி

    • ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி என 3 தொகுதிகளில் கிட்டத்தட்ட 3.50 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
    • டெல்டா பகுதி வேளாண் சிறப்பு மண்டலமாக அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழி நடத்தி செல்கிறார். தேர்தல்போது இரட்டை இலை சின்னம் கிடைத்தது. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற நீதிமன்ற தீர்ப்பு, அ.தி.மு.க.வின் பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது போன்ற நல்ல விஷயங்கள் நடந்து வருகிறது.

    தற்போது அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக அ.தி.மு.க.வினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். ஒரு மாதத்திற்குள் இந்த படிவங்கள் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

    ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி என 3 தொகுதிகளில் கிட்டத்தட்ட 3.50 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இதற்காக அ.தி.மு.க.வினர் வீடு வீடாக சென்று ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். உறுப்பினர் சேர்க்கைக்கு பிறகு அ.தி.மு.க. அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும். 2024 தேர்தல் திருப்புமுனையாக அமையும். 2026 சட்டமன்ற தேர்தலில் அசைக்க முடியாத சக்தியாக அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்.

    டெல்டா பகுதி வேளாண் சிறப்பு மண்டலமாக அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு பாதுகாப்பான அரசாக அ.தி.மு.க. இருந்தது. 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் பங்கேற்காதது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப உள்ளேன்.

    கூட்டணி குறித்து நாங்கள் தெளிவாக உள்ளோம். அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே முரண்பாடுகள் இல்லை. நேர சூழல் காரணமாக பிரதமர்- இ.பி.எஸ். சந்திப்பு நடைபெறவில்லை. பிரதமரை எங்கு எப்போது சந்திக்க வேண்டுமோ அப்போது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×