search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 தனியார் பஸ்களை பொதுமக்கள் சிறை பிடிப்பு
    X

    தனியார் பஸ்சை சிறைப்பிடித்த பொதுமக்கள்.

    3 தனியார் பஸ்களை பொதுமக்கள் சிறை பிடிப்பு

    • சேலத்தில் இருந்து ஓமலூர் வழியாக தனியார் பேருந்துகள் பண்ணப்பட்டி, பூசாரிப்பட்டி, அக்கரகாரம் தீவட்டிப்பட்டி, ஜோடுகுழி, உள்ளிட்ட பஸ் நிறுத்தங்கள் உள்ளன.
    • இந்த நிலையில் அனைத்து பேருந்துகளும் இன்று செல்ல அரசு அனுமதி வழங்கியுள்ளது. அரசு அனுமதி மீறி சில பேருந்துகள் நிறுத்தங்களில் நிறுத்தாமல் செல்கின்றனர்.

    சேலம் மாவட்டத்தில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு 100-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளும் அரசு பேருந்துகளும் இயங்கி வருகின்றனர். சேலத்தில் இருந்து ஓமலூர் வழியாக தனியார் பேருந்துகள் பண்ணப்பட்டி, பூசாரிப்பட்டி, அக்கரகாரம் தீவட்டிப்பட்டி, ஜோடுகுழி, உள்ளிட்ட பஸ் நிறுத்தங்கள் உள்ளன.

    இந்த நிலையில் அனைத்து பேருந்துகளும் இன்று செல்ல அரசு அனுமதி வழங்கியுள்ளது. அரசு அனுமதி மீறி சில பேருந்துகள் நிறுத்தங்களில் நிறுத்தாமல் செல்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் பூசாரிபட்டி பஸ் நிறுத்தத்தில் 3 தனியார் பேருந்துகளை பொதுமக்கள் பா.ம.க ஒன்றிய செயலாளர் பி.எஸ்கே. செல்வம் தலைமையில் சிறை பிடித்தனர்.

    Next Story
    ×