என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ் வசதி கேட்டு மாணவர்கள் மனு
    X

    கூடமலை சித்தன்பட்டி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பஸ் வசதி செய்து தர வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர்.

    பஸ் வசதி கேட்டு மாணவர்கள் மனு

    • சேலம் மாவட்டம் கூடமலை அருகே உள்ள சித்தன் பட்டி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பள்ளி மாணவர்கள் 10 பேருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
    • எங்கள் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். ஆனால் பஸ் வசதி, குடிதண்ணீர் வசதி உட்பட எந்த வசதியும் இல்லை.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கூடமலை அருகே உள்ள சித்தன் பட்டி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பள்ளி மாணவர்கள் 10 பேருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். ஆனால் பஸ் வசதி, குடிதண்ணீர் வசதி உட்பட எந்த வசதியும் இல்லை.

    எங்கள் ஊரில் 5-ம் வகுப்பு வரை உள்ள நிலையில் அதற்கு மேல் படிப்புக்கு கூடமலை செல்ல வேண்டியுள்ளது இதனால் மூன்று கிலோ மீட்டர் நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே பஸ் வசதிகள் உட்பட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    Next Story
    ×