search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராசிபுரத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்  மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது எடுத்த படம்.

    ராசிபுரத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

    • ராசிபுரத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இதில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ராசிபுரம்:

    தமிழ்நாடு தொடடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் பள்ளி ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டத்தினை தமிழ்நாடு அரசு விரைந்து நிறை வேற்றிட வலியுறுத்தி, ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆசிரியர்கள் தாக்கப்படு வதும், பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தினை உடனடியாக நிறைவேற்ற கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் முருக செல்வராசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார். இதில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×