என் மலர்
பெரம்பலூர்
பெரம்பலூரில் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் நகராட்சி மற்றும் 4 பேரூராட்சிகளிலும் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே தேர்தல் பிரச்சார கூட்டம் நடத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட வானொலி திடல், தேரடி வீதி, அரும்பாவூர் பேரூராட்சிக்குட்பட்ட பாலக்கரை, குரும்பலூர் பேரூராட்சிக்குட்ட சிவன் கோயில் முன்பு லப்பைக்குடிகாடு பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம்,
பூலாம்பாடி பேரூராட்சிக்குட்ட மந்தை வெளி ஆகிய பகுதிகளில் மட்டுமே அரசியல் கட்சிகள் உரிய அனுமதி பெற்று கூட்டம் நடத்திக் கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் தேசிய தொழுநோய் எதிர்ப்பு தினவிழா நடந்தது
பெரம்பலூர்
பெரம்பலூர் தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் ஸ்பர்ஷ் தொழு நோய் விழிப்புணர்வு முகாம் மற்றும் தேசிய தொழுநோய் எதிர்ப்பு தின விழா நடந்தது.
பெரம்பலூர் கிறிஸ்டியன் நர்சிங் கல்லூரியில் நடந்த விழாவிற்கு கல்விநிறுவன தலைவர் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். கல்விநிறுவன செயலாளர் மித்ரா, அரசு டாக்டர் வளவன், நர்சிங் கல்லூரி முதல்வர் சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
பெரம்பலூர் மாவட்ட மருத்துவபணிகள் துணை இயக்குநர் (தொழுநோய்) டாக்டர் சுதாகர் திட்ட விளக்கவுரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குநர் (தொழுநோய்) சாந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் கல்லூரி துறை தலைவர் கார்மேகம் மற்றும் நர்சிங் கல்லூரி மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்,
முன்னதாக திருச்சி மருத்துவபணிகள் துணை இயக்குநர் (தொழுநோய்) நலக்கல்வியாளர் முகமது இஸ்மாயில் வரவேற்றார். முடிவில் லப்பைக்குடிகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் செல்வபாண்டியன் நன்றி கூறினார்.
ஓட்டு எண்ணும் மையத்தில் தேர்தல் மேற்பார்வையாளர் நேரில் ஆய்வு
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற தேர்தல் ஓட்டுப்பதிவினை எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை தேர்தல் மேற்பார்வையாளர் ரத்னா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ள எறையூர் மகாத்மா பப்ளிக் பள்ளியில்
பெரம்பலூர் மாவட்ட தேர்தல் மேற்பார்வையாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, இயக்குநருமான ரத்னா மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஸ்ரீவெங்கட பிரியா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா , பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு நகராட்சி, 4 பேரூராட்சிகளுக்கு மொத்தம் 112 ஓட்டுசாவடிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் பூலாம்பாடி 6,11 வது வார்டில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அங்கு தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 110 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறும்,
தேர்தல் முடிந்தவுடன் இந்த அனைத்து ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் எறையூர் மகாத்மா பப்ளிக் பள்ளிக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் செய்யப்பட்டு 3 அடுக்கு காவல் பாதுகாப்பு போடப்படும்.
பின்னர் 22ம்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். மாநில தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவித்தார்.
ஆய்வின்போது நகராட்சி பொறியாளர் மனோகர், லப்பைக்குடிக்காடு பேரூராட்சி செயல் அலுவலர் சதீஸ்கிருஷ்ணன், மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்
காணாமல் போன செல்போன்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி பெரம்பலூரில் நடை பெற்றது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் இது வரையில் 35 ஸ்மார்ட் மொபைல் போன்கள் காணாமல் போனதாகவும், ஆன்லைன் மூலம் பணமோடி குறித்து புகார்கள் கொடுத்தனர்.
இதையடுத்து பெரம்பலூர் எஸ்பி மணி தலைமையில், சைபர் கிரைம் ஏடிஎஸ்பி பொறுப்பு ஆரோக்கியபிரகாசம் மேற்பார்வையில், எஸ்ஐ க்கள் மனோஜ், சிவமீனா மற்றும் ஏட்டு சதீஷ்குமார், போலீஸ்காரர்கள் முத்துசாமி, வேல்முருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் தீவிர விசாரணை நடத்தி காணாமல் போன செல்போன்கள் மற்றும் இணையதள மோசடிகளால் இழந்த பணத்தை மீட்டனர்.
இதைத் தொடர்ந்து பெரம்பலூர் எஸ்.பி. அலுவலகத்தில் மீட்கப்பட்ட செல்போன் மற்றும் பணத்தை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் எஸ்.பி. மணி தலைமை வகித்து மீட்கப்பட்ட சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 25 ஸ்மார்ட் போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
மேலும் இணையதளம் மூலமாக வேலை வாங்கி தருவதாகவும், இணைய வழி மூலம் பொருட்கள் விற்பதாகவும், ஆன்லைன் பணப் பரிவர்த்தனைமோசடி மூலமும் பணத்தை இழந்த 4 பேருக்கு அவர்கள் இழந்த தொகை ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் பணத்தை ஒப்படைத்தார்.
நிகழ்ச்சியில் சைபர் கிரைம் ஏடிஎஸ்பி பொறுப்பு ஆரோக்கியபிரகாசம் மேற்பார்வையில், எஸ்ஐக்கள் மனோஜ், சிவமீனா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டத் தில் வார்டு ஒதுக்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகிய காங்கிரஸ் கட்சி, மாவட்டத்தில் மொத்தம் உள்ள 81 வார்டுகளில் 4-ல் மட்டும் தனித்துப்போட்டியிடுகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தாங்கள் கேட்ட வார்டுகளை ஒதுக்காததால், அக்கூட்டணியிலிருந்து விலகி தனித்து போட்டியிடுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
அதன்படி பெரம்பலூர் நகராட்சியில் 6 வார்டுகளிலும், லப்பைக்குடிகாடு பேரூராட்சியில் 5 வார்டுகளிலும், குரும்பலூர் பேரூராட்சியில் 3 வார்டுகளிலும், அரும்பாவூர் பேரூராட்சியில் 4 வார்டுகளிலும், பூலாம்பாடி பேரூராட்சியில் 1 வார்டிலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்திருப்பதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.
ஆனால் பெரம்பலூர் நகராட்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் யாரும் போட்டியிடவில்லை. 15 வார்டுகளை கொண்ட அரும்பாவூர் பேரூராட்சியில் 1 மற்றும் 11 ஆகிய 2 வார்டுகளிலும் காங்கிரஸ் போட்டியிடுகிறது. பூலாம்பட்டி பேரூராட்சி யில் 1-வது வார்டில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த நல்லதம்பி என்பவர் தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
இதனால் 21 நகராட்சி வார்டுகள், 60 பேரூராட்சி வார்டுகள் என மொத்தம் 81 வார்டுகளை கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தில் 4 பேரூராட்சி வார்டுகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இது குறித்து அக்கட்சியின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் சுரேஷ் கூறும்போது,
கடைசி நேரத்தில் தனித்து போட்டியிடுவதாக கட்சி எடுத்த முடிவால் குறுகிய காலத்தில் வேட்பாளர்களை தயார் செய்ய முடியவில்லை. இதனால் குறைவான வார்டுகளில் போட்டியிடும் நிலை உருவாகிவிட்டது. ஆனாலும், காங்கிரஸ் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் லப்பைக்குடிகாட்டில் 3 பேர், குரும்பலூரில் 2 பேர் போட்டியிடுகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மற்ற வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக காங்கிரஸ் தேர்தல் பணி செய்யவல்லை என்றார்.
பெரம்பலூர் மாவட்டத் தில் வார்டு ஒதுக்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகிய காங்கிரஸ் கட்சி, மாவட்டத்தில் மொத்தம் உள்ள 81 வார்டுகளில் 4-ல் மட்டும் தனித்துப்போட்டியிடுகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தாங்கள் கேட்ட வார்டுகளை ஒதுக்காததால், அக்கூட்டணியிலிருந்து விலகி தனித்து போட்டியிடுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
அதன்படி பெரம்பலூர் நகராட்சியில் 6 வார்டுகளிலும், லப்பைக்குடிகாடு பேரூராட்சியில் 5 வார்டுகளிலும், குரும்பலூர் பேரூராட்சியில் 3 வார்டுகளிலும், அரும்பாவூர் பேரூராட்சியில் 4 வார்டுகளிலும், பூலாம்பாடி பேரூராட்சியில் 1 வார்டிலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்திருப்பதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.
ஆனால் பெரம்பலூர் நகராட்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் யாரும் போட்டியிடவில்லை. 15 வார்டுகளை கொண்ட அரும்பாவூர் பேரூராட்சியில் 1 மற்றும் 11 ஆகிய 2 வார்டுகளிலும் காங்கிரஸ் போட்டியிடுகிறது. பூலாம்பட்டி பேரூராட்சி யில் 1-வது வார்டில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த நல்லதம்பி என்பவர் தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
இதனால் 21 நகராட்சி வார்டுகள், 60 பேரூராட்சி வார்டுகள் என மொத்தம் 81 வார்டுகளை கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தில் 4 பேரூராட்சி வார்டுகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இது குறித்து அக்கட்சியின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் சுரேஷ் கூறும்போது,
கடைசி நேரத்தில் தனித்து போட்டியிடுவதாக கட்சி எடுத்த முடிவால் குறுகிய காலத்தில் வேட்பாளர்களை தயார் செய்ய முடியவில்லை. இதனால் குறைவான வார்டுகளில் போட்டியிடும் நிலை உருவாகிவிட்டது. ஆனாலும், காங்கிரஸ் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் லப்பைக்குடிகாட்டில் 3 பேர், குரும்பலூரில் 2 பேர் போட்டியிடுகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மற்ற வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக காங்கிரஸ் தேர்தல் பணி செய்யவல்லை என்றார்.
பெரம்பலூரில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு பேரணி நடந்தது.
பெரம்பலூர்:
தேர்தல் நேரங்களில் மக்களிடையே பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை கொண்டு சேர்க்கும் வகையில் வாக்காளர்களாகிய உங்களுடன் நாங்கள் எப்போதும் போல் இருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்திடவும், அச்சமின்றி ஓட்டளிக்கலாம் என்ற உணர்வை ஏற்படுத்திடவும் போலீசார் பெரம்பலூர் மற்றும் குரும்பலூரில் கொடி அணிவகுப்பு பேரணியை நடத்தினர்.
பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய கொடி அணிவகுப்பை எஸ்.பி. மணி தொடங்கி வைத்தார். இந்த கொடி அணிவகுப்பு பாலக்கரை, சங்குபேட்டை, கடைவீதி, பழைய பஸ்ஸ்டாண்ட், காம ராஜர் வளைவு ஆகிய முக்கிய வீதிகள் வழியாக சென்று தாலுகா அலுவலகத்தில் முடிவடைந்தது.
இதே போல் குரும்பலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கி பேரூராட்சி அலுவலகம் வரையிலும் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது. இதில் துப்பாக்கி ஏந்தியும், லத்தி, தடுப்பு போன்ற உபகரணங்களை ஏந்திய வகையில் போலீசார் கலந்து கொண்டனர். மேலும் போலீசார் கலவரங்களை தடுக்கும் பயன்படுத்தும் வஜ்ரா மற்றும் போலீசார் வாகனங்கள் இடம் பெற்றது.
இந்த அணிவகுப்பில் ஏ.டி.எஸ்.பி.க்கள் ஆரோக்கிய பிரகாசம், பாண்டியன், டி.எஸ்.பி.க்கள் வளவன், தங்கவேல், சஞ்சீவ்குமார், சந்தியா, சுப்பாராமன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள் மற்றும் போலீசார், ஊர்க்காவல் படையினர் என 180 பேர் கலந்து கொண் டனர்.
தேர்தல் நேரங்களில் மக்களிடையே பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை கொண்டு சேர்க்கும் வகையில் வாக்காளர்களாகிய உங்களுடன் நாங்கள் எப்போதும் போல் இருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்திடவும், அச்சமின்றி ஓட்டளிக்கலாம் என்ற உணர்வை ஏற்படுத்திடவும் போலீசார் பெரம்பலூர் மற்றும் குரும்பலூரில் கொடி அணிவகுப்பு பேரணியை நடத்தினர்.
பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய கொடி அணிவகுப்பை எஸ்.பி. மணி தொடங்கி வைத்தார். இந்த கொடி அணிவகுப்பு பாலக்கரை, சங்குபேட்டை, கடைவீதி, பழைய பஸ்ஸ்டாண்ட், காம ராஜர் வளைவு ஆகிய முக்கிய வீதிகள் வழியாக சென்று தாலுகா அலுவலகத்தில் முடிவடைந்தது.
இதே போல் குரும்பலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கி பேரூராட்சி அலுவலகம் வரையிலும் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது. இதில் துப்பாக்கி ஏந்தியும், லத்தி, தடுப்பு போன்ற உபகரணங்களை ஏந்திய வகையில் போலீசார் கலந்து கொண்டனர். மேலும் போலீசார் கலவரங்களை தடுக்கும் பயன்படுத்தும் வஜ்ரா மற்றும் போலீசார் வாகனங்கள் இடம் பெற்றது.
இந்த அணிவகுப்பில் ஏ.டி.எஸ்.பி.க்கள் ஆரோக்கிய பிரகாசம், பாண்டியன், டி.எஸ்.பி.க்கள் வளவன், தங்கவேல், சஞ்சீவ்குமார், சந்தியா, சுப்பாராமன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள் மற்றும் போலீசார், ஊர்க்காவல் படையினர் என 180 பேர் கலந்து கொண் டனர்.
81 வார்டுகளுக்கு 319 பேர் போட்டியில் குதித்துள்ளனர்.
பெரம்பலூர்:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. பெரம்பலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் 125 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்று 13 பேர் வாபஸ் பெற்றனர்.
இறுதியாக, 112 பேர் போட்டியிடுகின்றனர். பேரூராட்சிகளில் குரும்பலூரில் 3 பேர் வாபஸ் பெற 51 பேரும், அரும்பாவூரில் 3 பேர் வாபஸ் பெற 45 பேரும், லப்பைக்குடிகாட்டில் 17 பேர் வாபஸ் பெற 80 பேரும், பூலாம்பாடியில் 3 பேர் வாபஸ் பெற 33 பேரும் போட்டியிடுகின்றனர்.
பூலாம்பாடி பேரூராட்சி யில் 6-வது வார்டில் தி.மு.க.வை சேர்ந்த மாணிக்கம், 11-வது வார்டில் தி.மு.க.வை சேர்ந்த பூங்கொடி ஆகியோர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்ததால், இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்ப ட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் முழுவரும் உள்ள 81 வார்டுகளில் 360 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 39 பேர் வாபஸ் பெற்றனர். 2 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதால் 319 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாநிலச் செயலாளர் ராஜாசிதம்பரம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் நீலகண்டன், பொருளாளர் மணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், திருச்சி தலைமை மின் பொறியாளர் அலுவலகத்துடன் இணைந்திருந்த பெரம்பலூர் கோட்ட மேற்பார்வை மின் பொறியாளர் அலுவலகத்தை விழுப்புரம் மண்டலத்துடன் இணைக்கக் கூடாது.
திருவாரூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றதைப் போல், பெரம்பலூர் உள்பட இதர மாவட்டங்களிலும் நடத்த தமிழக முதல்வரும், காவல் துறை இயக்குநரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வட கிழக்கு பருவமழையால் மகசூல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய வங்கியில், அனைத்துப் பயிர் கடன் செலுத்தும் காலக்கெடுவை ஓராண்டாக நிர்ணயம் செய்து தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, விவசாயிகள் சங்கத்தினர் கைகளை தட்டி முழக்கமிட்டனர்.
கோவில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் சுமார் 1.70 லட்சம் மதிபுள்ள பொருட்களை அள்ளி சென்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே ஆலம்பாடி ஊராட்சிக்குட்பட்ட மங்குன்காடு பகுதியில் ஸ்ரீகுலக்கரை முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை பூசாமி அம்மாசி என்பவர் பூஜை செய்து விட்டு பூட்டி விட்டு சென்று விட்டார்.
வழக்கம்போல் காலையில் அம்மாசி கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியானார்.
உள்ளே சென்று பார்த்த போது கோவில் இருந்த வெள்ளி வேல், பித்தளை குடம், மணி, சொம்பு, சரவிளக்கு, குத்துவிளக்கு, பொங்கல் வைக்கும் பாத்திரம், ரேடியோ செட் உட்பட ரூ.1.70 லட்சம் மதிப்பிலான பொருட்களும், கோவில் உண்டியல் பணம் ரூ.10ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இது குறித்து வந்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே ஆலம்பாடி ஊராட்சிக்குட்பட்ட மங்குன்காடு பகுதியில் ஸ்ரீகுலக்கரை முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை பூசாமி அம்மாசி என்பவர் பூஜை செய்து விட்டு பூட்டி விட்டு சென்று விட்டார்.
வழக்கம்போல் காலையில் அம்மாசி கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியானார்.
உள்ளே சென்று பார்த்த போது கோவில் இருந்த வெள்ளி வேல், பித்தளை குடம், மணி, சொம்பு, சரவிளக்கு, குத்துவிளக்கு, பொங்கல் வைக்கும் பாத்திரம், ரேடியோ செட் உட்பட ரூ.1.70 லட்சம் மதிப்பிலான பொருட்களும், கோவில் உண்டியல் பணம் ரூ.10ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இது குறித்து வந்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய வளாகத்தில், மத்திய அரசைக் கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் தங்கராசு தலைமை வகித்தார்.
நகரத் தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். மக்கள் விரோதத் திட்டங்களை செயல்படுத்தும் மத்திய அரசைக் கண்டித்தும், தேசத் தந்தை மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சேவை புனிதராக போற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல்பாடுகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி மாவட்டச் செயலாளர் ஞானசேகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விவசாய அணி மாநிலச் செயலாளர் வீரசெங்கோலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய வளாகத்தில், மத்திய அரசைக் கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் தங்கராசு தலைமை வகித்தார்.
நகரத் தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். மக்கள் விரோதத் திட்டங்களை செயல்படுத்தும் மத்திய அரசைக் கண்டித்தும், தேசத் தந்தை மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சேவை புனிதராக போற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல்பாடுகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி மாவட்டச் செயலாளர் ஞானசேகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விவசாய அணி மாநிலச் செயலாளர் வீரசெங்கோலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வெள்ளந்தாங்கி அம்மன் கோவிலில் நடந்த கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
-
பெரம்பலூர் தேரடி வீதி கடைசியில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் பரம்பரை அறங்காவலர் கட்டுப்பாட்டில் வெள்ளந்தாங்கி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் பூசாரி சிதம்பரம், பூஜையை முடித்து கொண்டு, பின்னர் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். காலை அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார்.
அப்போது கோவிலின் வருடாபிஷேக விழா நாளை (திங்கட் கிழமை) நடைபெற இருப்பதால் கோவிலின் பித்தளை பொருட்களை சுத்தம் செய்யலாம் என்று எண்ணிய சிதம்பரம், கோவிலின் மெயின் கேட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது கோவிலின் உள்ளே செல்லும் 2 இரும்பு கேட்டுகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது, கோவிலில் இருந்த 15 பெரிய பித்தளை தாம்பூல தட்டுகள், 3 பித்தளை குடங்கள், 5 தீர்த்த கோல், 3 அடி உயரம் கொண்ட பித்தளை குத்து விளக்கு ஒன்று மற்றும் மின்சாதனை பொருட்களான பேட்டரி, யு.பி.எஸ். உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போயிருந்தது.
இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். போலீஸ் மோப்ப நாய் நிஞ்சா வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர்.
-
பெரம்பலூர் தேரடி வீதி கடைசியில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் பரம்பரை அறங்காவலர் கட்டுப்பாட்டில் வெள்ளந்தாங்கி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் பூசாரி சிதம்பரம், பூஜையை முடித்து கொண்டு, பின்னர் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். காலை அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார்.
அப்போது கோவிலின் வருடாபிஷேக விழா நாளை (திங்கட் கிழமை) நடைபெற இருப்பதால் கோவிலின் பித்தளை பொருட்களை சுத்தம் செய்யலாம் என்று எண்ணிய சிதம்பரம், கோவிலின் மெயின் கேட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது கோவிலின் உள்ளே செல்லும் 2 இரும்பு கேட்டுகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது, கோவிலில் இருந்த 15 பெரிய பித்தளை தாம்பூல தட்டுகள், 3 பித்தளை குடங்கள், 5 தீர்த்த கோல், 3 அடி உயரம் கொண்ட பித்தளை குத்து விளக்கு ஒன்று மற்றும் மின்சாதனை பொருட்களான பேட்டரி, யு.பி.எஸ். உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போயிருந்தது.
இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். போலீஸ் மோப்ப நாய் நிஞ்சா வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர்.
பெண் தற்கொலை வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் - எளம்பலூர் சாலையில் வசித்து வருபவர் ராஜீவ்காந்தி (வயது 30). கார் ஓட்டுநரான இவருக்கும், சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள மல்லியகரை பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதாவுக்கும் (25),
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு குழந்தையில்லாததால், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 4 மாதங்களாக சிகிச்சை பெற்றனராம்.
ஆனால், எவ்வித பலனும் இல்லையாம். இந்நிலையில், வெளியூர் சின்றிருந்த ராஜீவ்காந்தி, இரவு வீட்டுக்குச் சென்று பார்த்தபோது சங்கீதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் - எளம்பலூர் சாலையில் வசித்து வருபவர் ராஜீவ்காந்தி (வயது 30). கார் ஓட்டுநரான இவருக்கும், சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள மல்லியகரை பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதாவுக்கும் (25),
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு குழந்தையில்லாததால், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 4 மாதங்களாக சிகிச்சை பெற்றனராம்.
ஆனால், எவ்வித பலனும் இல்லையாம். இந்நிலையில், வெளியூர் சின்றிருந்த ராஜீவ்காந்தி, இரவு வீட்டுக்குச் சென்று பார்த்தபோது சங்கீதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிணை நடத்தி வருகின்றனர்.






