search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுதந்திர தினத்தையொட்டி பாளை தலைமை தபால் நிலையத்தில் தேசிய கொடி விற்பனை தொடக்கம்
    X

    விற்பனைக்கு வந்த தேசிய கொடியுடன் தபால் நிலைய ஊழியர்களை படத்தில் காணலாம்.

    சுதந்திர தினத்தையொட்டி பாளை தலைமை தபால் நிலையத்தில் தேசிய கொடி விற்பனை தொடக்கம்

    • சுதந்திர தினத்தையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
    • துணியால் ஆன ஒரு கொடி ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    நெல்லை:

    சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அரசு அலுவ லகங்கள், பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்களில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்படுவது வழக்கம். வருகிற 15-ந்தேதி நாடு முழுவதும் சுதந்திர தினவிழா உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.

    தபால் நிலையத்தில் விற்பனை

    சுதந்திர தினத்தையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதைத் தொடர்ந்து பொதுமக்களும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுவதற்கு தயாராகி வருகிறார்கள். இதையொட்டி நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தேசிய கொடிகள் விற்பனைக்காக குவிந்துள்ளது. அதனை பொதுமக்களும், வியாபாரி களும், மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் வாங்கி செல்கின்றனர்.

    இந்நிலையில் பாளை தலைமை தபால் நிலையத்தில் தேசிய கொடிகள் விற்பனை தொடங்கி உள்ளது. இதற்காக இன்று 1,,400 தேசிய கொடிகள் வந்தது. துணியால் ஆன ஒரு கொடி ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

    இ-போஸ் வசதி

    இந்த விற்பனையை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சிவாஜிகணேசன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வணிகவரி அதிகாரி ராஜேந்திர போஸ் மற்றும் அண்ணாமலை, ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே தேசிய கொடியை வாங்குவதற்காக இ-போஸ்ட் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இதில் விண்ணப்பித்தால் தபால் அலுவலக ஊழியர்கள் நேரில் சென்று வீடுகளில் தேசிய கொடியை வழங்குவார்கள். கடந்த ஆண்டு தபால் அலுவலகங்களில் தேசிய கொடி விற்பனை பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்தாண்டு தேசிய கொடி விற்பனை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

    Next Story
    ×