search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் 3-வது நாளாக பொதுமக்களிடம் குறைகளை கேட்ட அமைச்சர் கீதாஜீவன்
    X

    அமைச்சர் கீதாஜீவன், பொதுமக்கள் வழங்கிய மனுக்களை படித்து அவர்களிடம் குறைகளை கேட்டார். 

    தூத்துக்குடியில் 3-வது நாளாக பொதுமக்களிடம் குறைகளை கேட்ட அமைச்சர் கீதாஜீவன்

    • அமைச்சர் கீதாஜீவனிடம் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
    • அதில், 2-ம் கேட் பகுதியில் குறைகளை கேட்ட அமைச்சரிடம் 3 சக்கர சைக்கிள் கேட்டு முதியவர் ஒருவர் மனு அளித்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் கடந்த 2 நாட்களாக தூத்துக்குடியில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார்.

    3-வது நாளாக ஆய்வு

    இந்நிலையில் 3-வது நாளாக மாநகராட்சி 28-வது வார்டுக்குட்பட்ட இரண்டாம் கேட் பகுதியில் கொளுத்தும் வெயிலில் நடந்து சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அமைச்சர் கீதாஜீவனிடம் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். அதில் வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கியிருந்தது.

    2-ம் கேட் பகுதியில் குறைகளை கேட்ட அமைச்சரிடம் 3 சக்கர சைக்கிள் கேட்டு முதியவர் ஒருவர் மனு அளித்தார். மற்றொருவர் அப்பகுதியில் சில தெருக்களில் குண்டும், குழியுமாக இருப்பதாக கூறி மனு அளித்த பின் அதனால் ஏற்பட்ட சம்பவத்தில் பலர் பாதிக்கப்பட்டதும் சிலர் காயம் அடைந்த வீடியோவையும் காண்பித்தார்.

    அமைச்சர் உறுதி

    பின்னர் அப்பகுதியில் ஏற்கனவே நடைபெற்று வரும் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை அமைச்சர் கீதாஜீவன் நடந்தே சென்று பார்வையிட்டர். தொடர்ந்து ராஜமன்னார் தெருவில் பாதிப்புக்குள்ளான பகுதியில் முழுமையாக ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றி தருவேன் என்று உறுதியளித்தார்.

    நிகழ்ச்சியில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் கலைச்செல்வி, அரசு வக்கீல் சுபேந்திரன், மாநகர மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், கவுன்சிலர் ராமுத்தம்மாள், வட்ட செயலாளர் அந்தோணி லாசர், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், நாராயணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் நாகராஜன், முன்னாள் கவுன்சிலர்கள் குருசாமி, மீனாட்சி சுந்தரம், வட்ட பிரதிநிதி பாஸ்கர் மற்றும் சிவா, மாரியப்பன், அல்பட், மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×