என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்துவதை கைவிடக்கோரி, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியை அடுத்த நாகமங்கலம், அயர்னபள்ளி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த, 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள், திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளியை அடுத்த நாகமங்கலம், அயர்னபள்ளி உள்ளிட்ட பகுதிகளில், 3,024 ஏக்கர் நிலத்தை சிப்காட் அமைப்பதற்காக அரசு எடுக்க முயற்சிக்கிறது. சூளகிரி, ஓசூர் பகுதிகளில் ஏற்கனவே சிப்காட் அமைக்கப்பட்டு ஏராளமான விவசாய நிலங்கள் எடுக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் விளைநிலங்களை அரசு எடுக்க முயல்வது குறித்து தகவல் அறியும் சட்டத்தில் விவரம் கேட்கவே மக்கள் வந்துள்ளனர்.

    அரசு நிலம் எடுப்பதற்கு முன்பு மக்கள் கருத்துக்களை கேட்க வேண்டும், சுற்றுச்சூழல் அறிக்கை, சமூகதாக்கம் அறிக்கை உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றப்படாமல் நேரடியாக நிலம் எடுக்கப்படுவது குறித்து பொது தகவல் அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கொளத்தூர் மணி தலைமையில் விவசாயிகள் சிலர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகனை சந்தித்து மனு கொடுத்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பா.ஜனதா பிரமுகரின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பிரசாத் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீராமன் (வயது 45). இவர் கிருஷ்ணகிரி மாவட்ட பா.ஜனதா மீனவர் அணி தலைவராக இருந்து வருகிறார். மேலும் ஹாலோ பிளாக் செங்கல் சூளையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டில் தூங்க சென்  றுள்ளார். நள்ளிரவில் மோட்டார் சைக்கிள்தீப்பிடித்து எரிவதை பார்த்து கூச்சலிட்டுள்ளார் இந்த கூச்சலை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த தண்ணீரால் அனைத்தனர். 

    இது தொடர்பாக தேன்கனிக் கோட்டை  போலீஸ் நிலையத்தில் ஸ்ரீராமன் அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக யாரேனும், மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்டதா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    ஓசூரில் 2 தொழில் அதிபர்களிடம் ரூ.25 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஓசூர்:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் கடந்த 26-ந் தேதி முதல் அமலில் உள்ளன.

    தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்படுவதை தடுக்க மாவட்டம் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி 19 மண்டலங்களாக பிரித்து பறக்கும் படை அதிகாரிகள் ஓசூர் மாநகராட்சி முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஓசூர் மாநகராட்சியில் தர்கா பகுதி முத்து மாரியம்மன் கோவில் அருகில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஜெனிபர் மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    இந்த சோதனையின்போது கர்நாடக மாநிலம் ஆனேக்கல்லை சேர்ந்த ரோஹித், மித்லேஷ் ஆகிய 2 தொழில் அதிபர்கள் காரில் ரூ.25 லட்சத்தை கொண்டு வந்தனர். இந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்திய போது உரிய ஆவணம் இல்லாமல் இருந்தது தெரிய வந்தது.

    மேலும் சூளகிரியில் உள்ள தங்கள் கல்குவாரிக்கு கொண்டு செல்வதற்காக ரூ.25 லட்சத்தை எடுத்து சென்றதும் தெரிய வந்தது. அந்த பணத்தை அதிகாரிகள் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    ஓசூரில் 2 தொழில் அதிபர்களிடம் ரூ.25 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கிருஷ்ணகிரி அடுத்த சூளகிரி லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பகுதியை சேர்ந்தவர் சேர்ந்தவர் குமாரவேல் (வயது20). இவர் ஓசூர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் இவர் இன்று காலை வழக்கம் போல் இருசக்கர வாகனத்தில் ஓசூருக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.  அப்போது சூளகிரி அருகே கொல்லப்பள்ளி பகுதியில் வந்த போது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக  மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக குமாரவேல் உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அஞ்செட்டியில் இருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில் நேற்று இரவு அந்த ஒற்றையானை ஆக்ரோ‌ஷத்துடன் சாலை நடுவே நின்று கொண்டு வாகனங்களை விரட்டியுள்ளது.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே சிததாண்டபுரம், எ.புதூர், கேரட்டி ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்களில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. அந்த ஒற்றை யானை வனத்துறையினர் கிராம மக்களும் தாரை, தப்பட்டை அடித்தும் அதிக ஒலி எழுப்பும் விரட்டி வந்தனர்.

    இந்த நிலையில் அஞ்செட்டி அருகே சித்தாந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது70). விவசாயியான இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காட்டு பகுதியில் ஆடு மேய்க்க சென்ற போது ஒற்றை யானை தாக்கி உயிரிழந்தார்.

    இந்த ஒற்றை யானை இரவு முழுவதும் மற்றும் பகலிலும் அருகில் உள்ள கேரட்டி, சித்தாந்த புரம், புதூர், சிவலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் பிளிறியபடி சாலைகளில் சுற்றித் திரிவதால் கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கி கிடந்தனர்.

    மேலும் அஞ்செட்டியில் இருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில் நேற்று இரவு அந்த ஒற்றையானை ஆக்ரோ‌ஷத்துடன் சாலை நடுவே நின்று கொண்டு வாகனங்களை விரட்டியுள்ளது. இதனால் பீதியடைந்து வாகனங்களை திருப்பிக்கொண்டு வந்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகளும் அந்த சாலையில் செல்ல அச்சமடைந்துள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் ஒரு குழுவாக சென்று ஆக்ரோ‌ஷத்துடன் சுற்றித் திரிந்த ஒற்றை யானையை தாரை, தப்பட்டை அடைத்தும் பட்டாசுகள் வெடித்தும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் கிராம மக்கள் நிம்மதி அடைந்து பெருமூச்சு விட்டனர். அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் நிம்மதி அடைந்தனர். மேலும் அப்பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதி தமிழக கர்நாடகா வனப் பகுதிகளை இணைக்கும் முக்கிய பகுதியாக உள்ளது. கோடை காலத்தில் தண்ணீர் உணவு தேடி ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு அவ்வப்போது யானைகள் வருவது வழக்கம். தற்போது கர்நாடக மாநில வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் அங்கு உள்ள யானைகள் கூட்டம் கூட்டமாக உணவு, தண்ணீர் தேடி கர்நாடக தமிழக எல்லைப் பகுதியான தேன்கனிக் கோட்டை, ஓசூர், சானமாவு வனப் பகுதியில் சுற்றித் திரிகின்றன.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலம் காவிரியின் எதிர் கரையான மாறுக்கொட்டாய் வனப்பகுதியில் இருந்து பிரிந்த ஒற்றை யானை நேற்றிரவு காவிரி ஆற்றை நீந்தி கடந்து ஊட்டமலை கிராமத்துக்குள் புகுந்தது. அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஒற்றை யானையை மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். அப்போது ஒற்றை யானை மீண்டும் ஆற்றில் நீந்தியபடி ஆற்றை கடந்து கர்நாடக வனப் பகுதிக்குள் புகுந்தது. ஆற்றைக் கடந்து ஊருக்குள் புகுந்த ஒற்றை யானையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டதால் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் இன்று வியாபாரிகள் குவிந்தனர்.
    மத்தூர்:

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்ததால் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளி வாரச்சந்தை ஞாயிறு தோறும் கூடுவது வழக்கம்.  தமிழகத்திலேயே பெரிய சந்தையாக போச்சம் பள்ளி சந்தை விளங்கி வருகிறது. இங்கு தக்காளி முதல் தங்கம் வரை விற்பனை செய்யப்படும் சந்தையாக இருந்து வருகிறது. 

    வாரச்சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடக போன்ற மாநிலங்களில் இருந்து வியாபாரிகள்,  விவசாயிகள் வந்து தங்களது பொருட் களை விற்கவும், வாங்கவும் வருகிறார்கள். இதனால் வாரச்சந்தையில் வியாபாரம் கோடிக் கணக்கில் நடை பெறும்.

    இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த சில வாரங் களுக்கு முன்பு ஞாயிற்றுக் கிழமை அன்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் போச்சம்பள்ளி வாரச்சந்தை நடைபெறாமல் இருந்து வந்தது.

    இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை  முழு ஊரடங்கு விலக்கி கொள்ளப் பட்டதால் போச்சம் பள்ளி வாரச்சந்தை மீண்டும் களை கட்டியது. இன்று காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் திரண்டு வந்தனர். வியாபாரமும் மும் முரமாக நடந்து வந்ததால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    முழு ஊரடங்கு விலக் கலுக்கு பிறகு இன்று நடந்த போச்சம்பள்ளி வாரச் சந்தையில் ஆடு, மாடுகள், காய்கறிகள், ஜவுளிக் கடை, ஓட்டல்கள், தேங்காய்  உள்ளிட்ட அனைத்து வியா பாரம் சூடுபிடிக்க தொடங் கியுள்ளது.
    விடுமுறை என்பதால் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள், உற்சாகமாக பரிசலில் பயணம் செய்தனர்.
    ஒகேனக்கல்:

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பிரசித்திபெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி  கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    கொரோனா பரவல் காரணமாக ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று உற்சாக பயணம் செய்தனர். அவர்கள் தங்களது 

    குடும்பத்தினருடன் பரிசலில் சென்று ஆனந்தமாக பொழுதை களித்தனர். மேலும் ஒகேனக்கல்லில் பொறித்த மீன், மீன் குழம்பு ஆகியவற்றை ருசித்து சாப்பிட்டனர். தற்போது தண்ணீர் வரத்து இல்லாததால் அருவிகளில் தண்ணீர் குறைந்துள்ளது. இதனால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் மட்டுமே குளித்தனர்.

    இன்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்ததால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே தண்டவாளத்தை கடந்து சென்ற விவசாயி ரெயில் மோதி பரிதாபமாக இறந்தார்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அடுத்துள்ள எக்கூர் பகுதியை சேர்ந்தவர் ராஜி (வயது55). விவசாயி.

    இவர் எட்டிப் பட்டியில் உள்ள தனது உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். 

    அப்போது எட்டிப்பட்டி அருகேயுள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ரெயில் எதிர்பாராதவிதமாக ராஜி மீது மோதியது. ரெயில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக சேலம் ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே வடமாநில தொழிலாளி மாரடைப்பால் மரணமடைந்தார்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்துள்ள தொகரப்பள்ளி பகுதியில் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் 60-க்கும் மேற்பட்ட  வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்த தொழிற்சாலையில் ராஜஸ்தான் மாநிலம், கோர் கிராமத்தை சேர்ந்த பிம்ராவ்  (வயது40) என்பவரும் வேலை பார்த்து வந்தார். 

    இவர் நேற்றுமாலை  மட்டன், சிக்கன் வாங்கி வைத்து மது அருந்தி கொண்டி ருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை பார்த்த  அருகில் இருந்தவர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 367 பேர் பலியாகி உள்ளனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட் டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.

    கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் கொரோனா பாதிப்புடன் கடந்த 25-ந் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார்.

    கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 65 வயதுடைய முதியவர் கொரோனா பாதிப்புடன் கடந்த 22-ந் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான வர்களின் எண்ணிக்கை 367 ஆக உயர்ந்துள்ளது.

    இதற்கிடையே தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப் பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 665 பேர் பாதிக்கப்பட்டனர். 586 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். சிகிச்சை பலனின்றி 2 பேர் இறந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 56 ஆயிரத்து 128 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 49 ஆயிரத்து 593 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 6 ஆயிரத்து 168 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 367 ஆக உள்ளது. 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே வாட்ஸ் அப்பில் பெண்ணைக் குறித்து அவதூறு பரப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயது பெண். இவர்கல்லாவி போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

    சூளகரை அருகே உள்ள பள்ளசூளகரையை சேர்ந்த கோகுல் (23) என்பவர், எனதுசெல்போன் எண்ணை வாட்ஸ் அப்பில் அனுப்பி என்னை பற்றி தவறான தகவலை பரப்பி உள்ளார்.

    இதனால் பலரும் எனது செல்போன் எண்ணுக்கும், வாட்ஸ் அப் எண்ணுக்கும் தவறானஎண்ணத்துடன் தொடர்பு கொண்டு வருகிறார்கள். இது குறித்து கோகுலிடம் கேட்டபோது அவர் எனக்கு மிரட்டல் விடுத்தார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த புகாரின் மீது போலீசார் விசாரணை நடத்தி கோகுலை கைது செய்தனர். அவர் மீதுஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே வேன் மோதிய விபத்தில் ஆயுதப்படை போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா புளியம்பட்டி அருகே உள்ள மயிலம்பட்டியை சேர்ந்தவர்சதீஷ்குமார் (வயது 28). கிருஷ்ணகிரி ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றிவந்தார். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில்  கடந்த 27ந் தேதி பணியை முடித்துக் கொண்டு தனது மோட்டார்சைக்கிளில் காவேரிப்பட்டணம், வேலம்பட்டி சாலையில் தளிஅள்ளிஅருகே தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். 

    அப்போது வேலம்பட்டியில்இருந்து வந்த வேன் அவர் மீது மோதியது.இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டுசிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல்சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு செல்லும் வழியில் அவர் இறந்தார். 

    இந்த விபத்து குறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×