search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்த வாலிபர் கைது
    X

    மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்த வாலிபர் கைது

    • கீழ்பவானி வாய்க்கால் அருகே ஒரு வாலிபர் நின்று கொண்டு இருந்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
    • இதையடுத்து அவரிடம் இருந்து 16 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் அருகே ஒரு வாலிபர் நின்று கொண்டு இருந்தார்.

    சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் சின்னசேலம் பகுதியை சேர்ந்த நித்தீஸ்குமார் (22) என்பதும், மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்து இருந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவரிடம் இருந்து 16 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நித்தீஸ்குமாரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×