search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரடி தாக்கி  தொழிலாளி படுகாயம்
    X

    கரடி தாக்கி தொழிலாளி படுகாயம்

    • வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு கரடி திம்மையனை துரத்தி வலது காலை கடித்தது.
    • இது குறித்து கேர்மாளம் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் கடம்பூர்- கேர்மாளம் இடையே உள்ள கோட்டமாளத்தை சேர்ந்தவர் திம்மையன் (45). வனப்பகுதியை ஒட்டி உள்ள நிலத்தில் நேற்று மாலை மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு கரடி திம்மையனை துரத்தி வலது காலை கடித்தது. வலியால் அவர் அலறவே அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று கரடியை விரட்டினர்.

    பின்னர் அவர் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கேர்மாளம் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×