search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிஸ்கட் கம்பெனியில் தீ விபத்து
    X

    பிஸ்கட் கம்பெனியில் தீ விபத்து

    • பெருந்துறை அருகே பிஸ்கட் கம்பெனியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை குன்னத்தூர் ரோடு பகுதியில் பெருந்துறையை சேர்ந்த ரதீஷ்குமார் (33) என்பவருக்கு சொந்தமான பிஸ்கட் கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த பிஸ்கட் கம்பெனியில் பிஸ்கட் பேக்கிங் செய்ய பயன்படும் கவர்கள் மூட்டைகளாக கட்டி அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை திடீரென அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பிஸ்கட் கவர்களில் தீபிடித்து புகை வந்தது. சிறிது நேரத்தில் மளமளவென தீ பற்றி எரியத் தொடங்கியது.

    இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    Next Story
    ×