search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாய்காலில் தவறி விழுந்து முதியவர் பலி
    X

    வாய்காலில் தவறி விழுந்து முதியவர் பலி

    • காலிங்கராயன் வாய்க்காலில் ஒரு முதியவரின் உடல் மிதப்பதாக போலீசார் தகவல் கிடைத்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈேராடு வி.வி.சி.ஆர். நகர் முதலாவது வீதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (73). இவர் கடந்த 26-ந் தேதி காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கம் தேடி பார்த்தனர்.

    இந்நிலையில் பழனிக்க–வுண்டன்பா–ளையம் காலிங்கராயன் வாய்க்காலில் ஒரு முதியவரின் உடல் மிதப்பதாக போலீசார் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் முதியவர் சோமசுந்தரத்தின் குடும்பத்துக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது பிணமாக மிதந்த முதியவர் சோமசுந்தரம் என்று உறுதி செய்தனர்.

    இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் முதியவர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக வாய்க்கால் கரைக்கு சென்ற போது தவறி விழுந்து இறந்து போனது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×