search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் நகராட்சி பகுதியில் வளர்ச்சி பணிகள் குறித்து நகராட்சிகள் இயக்குனர் ஆய்வு
    X

    தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் பொன்னையா ஆய்வு செய்த காட்சி

    பல்லடம் நகராட்சி பகுதியில் வளர்ச்சி பணிகள் குறித்து நகராட்சிகள் இயக்குனர் ஆய்வு

    • வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் பொன்னையா ஆய்வு செய்தார்.
    • ஆய்வின் போது நகராட்சிகளின் திருப்பூர் மண்டல இயக்குனர், மண்டல பொறியாளர், பல்லடம் நகராட்சி தலைவர், ஆணையாளர், திமுக பொறுப்பாளர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி பகுதியில், நகராட்சி நிர்வாகத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் பொன்னையா ஆய்வு செய்தார். பல்லடம் வடுகபாளையம் குட்டையை ரூ.3.54. கோடியில் மேம்பாடு செய்து பூங்கா அமைக்கும் பணி, சின்னையா கார்டன் பகுதியில் ரூ.90 லட்சம் மதிப்பிலான பூங்கா மேம்பாட்டு பணி ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது நகராட்சிகளின் திருப்பூர் மண்டல இயக்குனர் ராஜன், மண்டல பொறியாளர் பாலச்சந்திரன், பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார், ஆணையாளர் விநாயகம், நகர் திமுக பொறுப்பாளர் ராஜேந்திரகுமார், மற்றும் நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×