என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஊட்டியில் மாணவர்கள் பங்கேற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
- கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போதை விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.
- போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலான கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.
ஊட்டி:
ஊட்டியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட நிா்வாகம், காவல் துறை சாா்பில் ஊட்டி அரசு பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தலைமை தாங்கினார்.
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போதை விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய புத்தகங்கள் மற்றும் வணிக சங்கங்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு தொடா்பான துண்டுப் பிரசுரங்களை அமைச்சா் வழங்கினாா்.
மாவட்ட கலெக்டர் அம்ரித், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவத் ஆகியோா் முன்னிலையில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
நிகழ்ச்சியில் அமைச்சா் கா.ராமசந்திரன் பேசியதாவது:-
போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழியினை மாணவ, மாணவிகள் மனதில் நிலைநிறுத்திக் கொள்வதோடு, உறவினா்கள், நண்பா்களிடமும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
அதனை தொடா்ந்து, போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலான கலைநிகழ்ச்சிகளை பாா்வையிட்டாா்.பின்னா் ஊட்டி அசெம்பிளி திரையரங்கில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு குறும்படத்தினை கல்லூரி மாணவ, மாணவிகளுடன் பாா்வையிட்டாா். இதைத் தொடா்ந்து, சேரிங்கிராஸ் பகுதியில் போதைப் பொருள் விழிப்புணா்வு பேரணியை தொடக்கிவைத்தாா்
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநா் மோனிகா ராணா, குன்னூா் சப்- கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மோகன் நவாஸ், ஊட்டி நகா்மன்றத் தலைவா் வாணீஸ்வரி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்