என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் இளம்பெண்ணை வீடு புகுந்து தாக்கிய வாலிபர்
- இளம்பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
- வாலிபர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்து வந்தார்.
கோவை:
கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் 35 வயது பெண். இவருக்கு திருமணம் ஆகி கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இளம்பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனையடுத்து அந்த பெண் தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். அப்போது அவருக்கு அதே பகுதியை சேர்ந்த 29 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த வாலிபர் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்து சென்றார்.
அப்போது அந்த வாலிபருக்கு மேலும் சில பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் வாலிபருடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார். ஆனால் தொடர்ந்து அந்த வாலிபர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்து வந்தார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் அந்த பெண்ணை வீடு புகுந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றார். இது குறித்த சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்