search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    நாமக்கல் கோவில் தேரில் தீ-தெய்வ குற்றம் நேர்ந்ததாக பக்தர்கள் தவிப்பு

    நாமக்கல் கோவில் தேரில் தீ தெய்வ குற்றம் நேர்ந்ததாக பரிகார பூஜைகள் நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் இ.பி. காலனியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. 

    இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பரமத்தி சாலையில் தேர் சென்று கொண்டிருந்தபோது போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகம் எதிரில் உயர் மின்னழுத்த கம்பியில் தேர் மோதாமல் இருப்பதற்காக மின் வாரிய ஊழியர் குமரேசன் என்பவர் நீண்ட குச்சியால் மின் கம்பியை தூக்கிப் பிடித்தார். 

    அப்போது மின் இணைப்பு துண்டிக்கப்படாமல் இருந்ததால் மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று மோதி தீ விபத்து ஏற்பட்டது. தீப்பொறி தேரின் மீது விழுந்ததில் தேரின் சில பகுதிகளில் தீப்பிடித்தது. 

    இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த நாமக்கல் தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர்.  இதில் காயம் அடைந்த மின் ஊழியர் குமரேசன் மீட்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 
    Next Story
    ×