search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    புதுச்சத்திரம் அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

    புதுச்சத்திரம் அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாமக்கல்:

    தம்மம்பட்டி அருகே உள்ள உடையார் பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவரது மகன் பிரவீன்குமார்(வயது 19),கூலித்தொழிலாளி. இவர் புதுச்சத்திரம் அருகே உள்ள காரைக்குறிச்சியில் நடந்த கோவில் திருவிழாவிற்காக உறவினர் வீட்டுக்கு வந்தார். 

    அப்போது அங்குள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இருந்த கிணற்றில் நீச்சல் பழகுவதற்காக நண்பர்கள் 2 பேருடன் சென்றார்.

    பின்னர் அவர் அங்கு கிணற்றில் இறங்கி குளித்த போது திடீரென தண்ணீரில் முழ்கினார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ராசிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

    சுமார் 1 மணி போராட்டத்திற்கு பிறகு பிரவீன்குமாரின் உடல் மீட்கப்பட்டது. மேலும் இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×