search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    கேரள முதல்- மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

    கேரளாவில் 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு இன்று (வியாழக்கிழமை) கடிதம் எழுதி உள்ளார்.

    அக்கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

    ‘தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வாழும் கேரளாவின் 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்த கோரிக்கை தொடர்பாக தங்கள் அன்பான, உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன். கடந்த 12 ஆண்டுகளாக கேரள அரசு ஜனவரி 14-ந்தேதியினை பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறையாக அறிவித்து வருகிறது என்று அறிகிறேன்.

    ஜனவரி 14-ந்தேதி, புனிதமான ‘தை’ தமிழ் மாதத்தின் முதல் நாளாகும்; ஆனால் இந்த 2022-ம் ஆண்டில் ஜனவரி 15-ந் தேதியினை இந்த 6 மாவட்டங்களில் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆகவே, தமிழ்ச் சமூகங்களிடையே, உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறை தினமாக ஜனவரி 14-ந்தேதியை அறிவித்திட நடவடிக்கை மேற்கொள்ள நான் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.’

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    Next Story
    ×