என் மலர்
செய்திகள்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
பேபி அணையில் 15 மரங்களை வெட்ட அனுமதி: கேரள முதல்-மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி
பேபி அணை மற்றும் மண் அணையை வலுப்படுத்த இந்த நீண்டகால கோரிக்கை முக்கியமானது. மரங்களை வெட்டுவது இரு மாநில மக்களுக்கும் நீண்டகாலத்துக்கு பயன் அளிக்கும்.
சென்னை:
முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணையை வலுப்படுத்தும் பணிகளுக்காக 15 மரங்களை வெட்ட அனுமதி அளித்த கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
அதில், முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணைக்கு கீழே உள்ள 15 மரத்தை வெட்ட அனுமதித்தற்கு நன்றி. கேரள அரசின் அனுமதி இருமாநில மக்களுக்கு நீண்டகாலம் பயனளிக்கும் வகையில் அமையும். இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள நல்லுறவு மேலும் வலுப்படவும் வழிவகுக்கும்.

பேபி அணை மற்றும் மண் அணையை வலுப்படுத்த இந்த நீண்டகால கோரிக்கை முக்கியமானது. மரங்களை வெட்டுவது இரு மாநில மக்களுக்கும் நீண்டகாலத்துக்கு பயன் அளிக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... மாநகராட்சி, நகராட்சி-பேரூராட்சி தேர்தல்: டி.டி.வி.தினகரன், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை
Next Story