என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆதம்பாக்கத்தில் காதலி வீட்டில் ரவுடி வெட்டிக் கொலை
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் நாகூர் மீரான் (வயது 32) பிரபல ரவுடி. காங்கிரஸ் கட்சியில் இளைஞர் அணி தென் சென்னை மாவட்ட துணைத்தலைவராகவும் இருந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை ஆதம்பாக்கம் அம்பேத்கார் நகர் 3-வது தெருவில் உள்ள காதலி ஒருவரது வீட்டுக்கு நாகூர் மீரான் வந்தார். பின்னர் அவர் காதலியுடன் தனியாக அறையில் இருந்தார்.
இதனை அறிந்த எதிர் தரப்பை சேர்ந்த மற்றொரு ரவுடி கும்பல் 10-க்கும் மேற்பட்டோர் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென வீட்டுக்குள் புகுந்து காதலியுடன் இருந்த நாகூர் மீரானை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினர்.
இதில் கழுத்து, தலையில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த நாகூர் மீரான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை கண்ட காதலி அலறியடித்து வெளியே ஓடினார்.
இதைத் தொடர்ந்து கொலைக்கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் ஆதம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பலியான நாகூர் மீரானின் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ரவுடி ராபின், பிரபாகரன், விமல்ராஜ், இருளா காத்திக், காணிக்கை ராஜ் ஆகிய 5 பேர் ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர்.
அவர்களிடம் கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 2013-ம் ஆண்டு சுங்க அதிகாரியை கொலை செய்த வழக்கு நாகூர் மீரான் மீது உள்ளது. இதன் பின்னர் அவர் ரவுடியாக வலம் வந்துள்ளார். ஆதம்பாகக்கத்தில் 2 கொலை வழக்கு உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இதேபோல் பரங்கிமலை, கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களிலும் குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. இதற்கிடையே ஏரியாவில் யார் பெரிய ரவுடி? என்ற போட்டியால் அவருக்கும் எதிர் தரப்பை சேர்ந்த ரவுடி ராபினுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது.
எதிர் தரப்பினர் கொலை செய்ய திட்டமிடுவதை அறிந்த நாகூர் மீரான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிலம்பாக்கம் அருகே உள்ள வெள்ளக்கல் பகுதியில் குடியேறியதாக தெரிகிறது.
இந்த நிலையில் காதலி வீட்டுக்கு நாகூர் மீரான் வந்திருப்பதை அறிந்த எதிர் தரப்பினர் தீர்த்துக்கட்டி விட்டனர். இந்த கொலை தொடர்பாக மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்