search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப.சிதம்பரம்
    X
    ப.சிதம்பரம்

    பா.ஜனதாவில் இந்தி திணிப்பால் தாய்மொழி அழிந்துவிடும்- ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    தேசியமும் திராவிடமும் வளர்த்த மண் தமிழகம். பா.ஜ.க.வின் இந்தி திணிப்பு நடவடிக்கையால் தாய்மொழி மெல்ல மெல்ல அழிந்து விடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஊழியர் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:-

    வேளாண் சட்டத்தில் பா.ஜ.க அரசு வறட்டு பிடிவாதம் பிடித்து வருகிறது.

    தமிழகத்தில் முதல்வர், துணை, முதல்வருக்குள் இருந்து வரும் கருத்து வேறுபாட்டை மறைக்கவே, புதிய திட்டங்கள் என்ற பெயரில் அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படுகிறது.

    தேசியமும் திராவிடமும் வளர்த்த மண் தமிழகம். இதில் பா.ஜ.க. என்ற நச்சு செடி வளராது மலராது. பா.ஜ.க.வின் இந்தி திணிப்பு நடவடிக்கையால் தாய்மொழி மெல்ல மெல்ல அழிந்து விடும். காங்கிரஸ் ஒருபோதும் பாஜகவுடன் சமரசம் செய்து கொண்டது கிடையாது, சமரசத்திற்கு இடமும் இல்லை.

    மகளிர் குழுக்களுக்கு கொடுக்கப்பட்ட கடனில், ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×